
வடக்கு இங்கிலாந்தில் வீடற்றோர் தொகை 42 விதத்தால் அதிகரித்துள்ளது. மன்செஸ்டர் நகருக்கு அருகாமையில் மணல் கற்களில் அமைக்கப்பட்டுள்ள சிறிய் சுரங்கங்களில் மக்கள் உறங்கும் நிலை உருவாகியுள்ளது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு மணல் கற் குகைகளினுள்ளும் குறைந்தபட்சம் நான்கு பேர் உறங்குவதாகச் சொல்லப்படுகிறது. வீடற்றோருக்கான உள்ளூர் தன்னார்வ நிறுவனத்தின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு நாளைக்கு 140 பேர் வரை உதவி தேடிச் செல்வதாகக் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் மூக்கை நுளைத்து மனித உரிமை, ஜனநாயகம் என்ற பெயரில் தலையிட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்காக யுத்தம் புரியும் பிரித்தானிய அரசு தனது சொந்த நாட்டில் மக்களை மரணத்தின் வாயிலில் நிறுத்திவைத்துள்ளது. மன்செஸ்ர், யோக்செயர் போன்ற பல நகரங்களில் அவலத்துள் வாழும் மக்கள் குறித்து ஊடகங்கள் துயரடைவதில்லை. நவ காலனித்துவ – நிதி மூலதன அரசுகள் ஐரோப்பாவில் மூன்றாமுலக நாடுகளை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன.