Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ழான் போத்ரிலார் (Jean Baudrillard) : விதிவாதியின் பிம்ப அரசியல் :யமுனா ராஜேந்திரன்

கிறிஸ்துவுக்கு முன்னும் பின்னும்

சித்திரவதையைப் பொறுத்து

அது இருந்த மாதிரியேதான் இருக்கிறது

பூமிதான் சுருங்கிப் போய்விட்டது

நடக்கிற எல்லாமும்

பக்கத்து அறையில் நடக்கிற மாதிரி

கேட்கிறது

விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா

1.

2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தின் புறநகர்ப் பகுதியிலுள்ள அபுகாரிப் சிறைச்சாலையில் தம் வசமிருந்த ஈராக்கிய யுத்த கைதிகளை சித்திரவதை செய்தார்கள் எனும் குற்றச்சாட்டினையடுத்து ஈராக் முழுவதிலுமான அமெரிக்கச் சிறைகளுக்குப் பொறுப்பாகவிருந்த பெண் படைத்துறைத் துறை தலைவரான பிரிகேடியர் ஜெனரல் ஜானிஸ் கார்பின்ஸ்க்கி உள்பட ஆறு அமெரிக்கப் படைத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென 2004 ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகமான பென்டகன் அறிவித்திருக்கிறது. சிறை நடத்தைகளுக்குப் பொறுப்பான தளபதி ஜானிஸ் கார்பின்ஸ்க்கியும் ஆண் கைதிகளை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்ததில் அதிகம் பிரச்சினைக்குள்ளாகயிருக்கும் லின்டி லண்டன் ஆகிய இருவரும் பெண் படைத்துறையினர் என்பதும் அறிவிக்கபட்டிருக்கிறது.

தம்மிடமிருந்த யுத்தக் கைதிகளை நிர்வாணப்படுத்தி அவர்களது ஆணுறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பிகளைப் பொறுத்தினார்கள் எனவும் யுத்தக் கைதிகள் பலரை ஒரே சமயத்தில் நிர்வாணப்படுத்தி அவர்களைப் பலவந்தமாகக் கூட்டுப் புணர்ச்சி செய்ய நிர்ப்பந்தித்தார்கள் எனவும் படைத்துறை ஆண்களும் பெண்களும் பார்த்துக் கொண்டிருக்கப் பலவந்தமாகக் கைதிகள் முஷ்டி மைதுனம் செய்ய நிரப்பந்திக்கப்பட்டார்கள் எனவும் படைத்துறையினர் வெறிநாய்களை அம்மணமான கைதிகளின் மீது ஏவினார்கள் எனவும் அம்மணமான கைதிகளை நாய்களைப் போல கழுத்தில் கச்சை கட்டி இழுத்தார்கள் எனவும் அம்மணமான கைதிகளின் ஆணுறுப்புகளைச் துப்பாக்கியால் சுட்டுவிடும் தோரணையில் கைக்குறி காட்டி தமது செயலைக் கொண்டாடினார்கள் எனவும் கைதிகளின் உடலில் மலத்தைப் பூசி அவமானப்படுத்தினார்கள் எனவும் அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக்காட்சி நியூயார்க்கர் மேகசின் வாசிங்டன் போஸ்ட் போன்ற பத்திரிக்கைகள் சித்திரவதை குறித்த புகைப்படங்களை வெளியிட்டதனையடுத்து அமெரிக்க மக்களும் உலகெங்குமிருந்த மனித உரிமையாளர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தார்கள்.

அமெரிக்காவில் சிபிஎஸ் தொலைக்காட்சியினை அடுத்து புகழ்வாய்ந்த கலாச்சார இதழான நியூயார்க்கரில் அதனது புகழ்மிக்க பத்தரிக்கையாளர் செய்மோர் ஹெர்ஸ் அபுகாரிப் குறித்த மேலும் சில புகைப்படங்களோடு கட்டரையொன்றை எழுதினார். செய்மோர் ஹெர்ஸ் 1969 ஆம் ஆண்டு அமெரிக்கா வியட்நாமில் மைலாய் கிராமத்தில் நிகழ்த்திய மனித வேட்டையை உலகிற்கு முன் கொண்டு வந்தவர். எரிந்த தீக்காயங்களுடன் மைலாய் வீதியில் ஒரு பிறந்தமேனிச் சிறுமி ஓடி வரும் புகைப்படம் இவர்வழி வெளியிடப்பட்டு அப்புகைப்பட பிம்பம் அன்று உலகை உலுக்கியது வரலாறு. இதற்கென செய்மோர் ஹெர்ஸ் புலிட்சர் விருதையும் பெற்றார்.

நடைபெற்றிருக்கும் சித்திரவதைகள் ஈராக்கில் அமெரிக்கச் சிறைகளின் அமைப்பு முறையின் ஒரு அங்கமாகவே தோன்றுவதாகவும் செய்மோர் ஹெர்ஸ் கருத்து வெளியிட்டிருக்கிறார். அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் டொனால் ரொமஸ்பீல்ட்டின் முழு ஆசிPயுடனும் அவரது தனிப்பட்ட ஆலோசனையின் பேரிலுமே சித்திரவதைகள் நடந்திருப்பதாக செய்மோர் ஹெர்ஸ் நியூயார்க்கரில் எழுதியிருக்கும் கட்டுரையை அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் மறுத்திருக்கிறது.

பட்டினி போடுதல் சாவுப் பயத்தை உருவாக்குதல் முச்சுத்திணற வைத்தல் நீரில் மூழ்கவைத்து மரண அவஸ்தை உருவாக்குதல் போன்றவற்றை கைதிகளிடமிருந்து செய்தி பெறுவதற்காகப் பாவிக்கலாம் என்பது அமெரிக்க உளவுத்துறையினரான சிஜஏவினருக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்திருக்கும் செய்மோர் ஹெர்ஸ் அதனைத்தான் அமெரிக்கப் படைத்துறையினர் ஈராக்கில் பாவித்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார். அவமானரமான குன்டனாமோ சித்திரவதை முகாமின் பொறுப்பாளர்தான் தற்போது அபுகாரிப் சிறைச்சாலைக்குப் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகத்தின் மனித உரிமைக் காவலின் இலட்சணத்துக்கு ஒரு சான்றாதாரம் எனவும்; சொல்லலாம்.

சிபிஎஸ் தொலைக்காட்சிப் பிம்பங்கள் நியூயார்க்கர் வாசிங்டன் போஸ்ட் பத்திரிக்கைகளின் புகைப்படங்கள் ஏற்படுத்தியிருக்கும் அரசியல் நெருக்கடி சில விடயங்களைத் தெளிவுபடுத்தியிருக்கிறது.

1.தகவல் தொழில்நுட்ப ஊடகத்துறையின் சக்தியை இந்நெருக்கடி நிரூபித்திருக்கிறது.

2.உலகிற்குத் தெரியவராமல் நிறைய கொடுமைகளும் சித்திரவதைகளும் பொஸ்னிய வளைகுடா ஆப்கான் மற்றும் ஈராக் போர்களில் இடம் பெற்று வந்திருக்கிறது என்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கத்திய அமெரிக்க அரசுத்துறைசார் பிம்பங்கள் அக்கொடுமைகளை மறைத்து வருகின்றன என்பதும் சுயாதீனமான ஊடகங்கள் இதனை வெளிக்கொணராவிட்டால் இவை உலகின் கவனத்திற்கு வராமலே போயிருக்கும் என்பதும் தெளிவுபட்டிருக்கிறது. 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இதுவரை அமெரிக்கக் கட்டுப்பாட்டிலிருந்த 38 ஈராக்கிய-ஆப்கான் கைதிகள் விசாரணையின்போது அமெரிக்கப் படையினரால் கொல்லபட்டிருப்பதாகவும் இதில் இருவர் சித்திரவதை தாங்காமல் தற்கொலை செய்துகொண்டிருப்பதாகவும் தற்போது அமெரிக்கப் பாதுகாப்புத் துறை ஒப்பக் கொண்டிருக்கிறது. முன்பாக இது மறைக்கபட்டு வந்த உண்மைகளில் ஒன்றாகும்.

3.இந்தப் பிம்பங்கள் உருவாக்கக் கூடிய விளைவுகள் வெகுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் அரசியல் மாற்றத்தைக் கோருமளவு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்பதனை இரு ஆக்கிரமிப்பு நாடுகளினதும் தலைவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பது தெளிவுபட்டிருக்கிறது.

4.மறைக்கப்பட்ட நிஜங்களை வெளியிடும் புகைப்படங்கள் திட்டமிட்டு கட்டப்படும் மாதிரிப் புகைப்படங்கள் போலிப் புகைப்படங்கள் போலிப் புகைப்படங்கள் போல உருவாக்கப்பட்ட நகல் போலிப் புகைப்படங்கள் போன்றவற்றுக்கிடையிலான வித்தியாசங்களை எவ்வாறு பகுத்தாய்ந்து நிஜத்திற்கும் பிம்பத்திற்குமான உறவையும் பிம்பத்தின் பின்னுள்ள நிகழ்வின் ஆதாரத்தையும் கண்டடையமுடியும் என்பதும் கேள்விக்குரிய விசயமாக ஆகியிருக்கிறது.

2.

பிரெஞ்சு பின்நவீனத்துவக் கோட்பாட்டாளரான ழான் போத்ரிலாருக்கு இவ்வாறான குழப்பங்கள் எதுவும் இல்லை. போத்ரிலார் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ‘நிஜத்துக்கும் பிம்பத்திற்குமான வேற்றுமைகளைக் காண்பது இந்தத் தகவல் தொழில்நுட்பப் பிம்ப யுகத்தில் இனிச் சாத்தியமில்லை’ எனத் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகிறார். ழுhன் போத்ரிலார் அவரது வாழ்வு குறித்த பின்னணி கேட்கப்படுகிறபோதெல்லாம் அதை அசட்டை செய்துவிடுகிறவர். போத்ரிலார் நம்காலத்தில் பிரபலமாயிருக்கும் பெரும்பாலுமான பிரெஞ்சுச் சிந்தனையாளர்களைப் போலவே 1968 பாரிஸ் மாணவர் எழுச்சியினாலும் ஸ்டாலினிய செக்கோஸ்லாவாக்கியப் படையெடுப்பின் விளைவினாலும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் அல்ஜீரியக் காலனியாதிக்கத்தின் விளைவாலும் உருவானவர்தான். பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியோடு இக்காலகட்டத்தின் அறிவாளிகள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டவர்கள்.

போத்ரிலாரின் இன்றைய பிம்ப அரசியலுக்கான மூலதாரங்கள் இரண்டு பிரெஞ்சு அறிவுஜீகளிலிருந்து துவங்குகிறது.

நுகர்பொருட்களின் ஆதிக்கம் அதனால் விளையும் வெகு மக்களின் செயலின்மை பிம்பங்களின் ஆதிக்கம் குறித்துப் பேசியவர்கள் அந்த இரு பெரும் அறிவுஜீகள். ஹென்றி லெப்வோர் மற்றும் கை டெபோர்ட் போன்றவர்களே அவ்விருவர். 1947 ஆம் ஆண்டு வெளியான ஹென்றி லெப்வோரின் அன்றாட வாழ்வு குறித்த விமர்சனம ( Critique of Every day Life) அவரது புகழ்வாய்ந்த ஆய்வு நூல். நுகர்வுக்கு ஆட்பட்ட வெகுமக்கள் செயலுக்குத் தகுதியற்றவர்கள் எனவும் மாற்றத்திற்குத் தடைகளாக நுகர்வுக்கு ஆட்பட்ட அவர்களது நடவடிக்கையே அமைந்திருக்கிறது எனக் கண்டவர் லெப்வோர்.ஹென்றி லெப்வோரது கருத்துக்களோடு மட்டுமல்ல பல்கலைக்கழகத்தில் அவருடன் நேரடியிலும் நெருக்கமான உறவு பூண்டிருந்தவர் போத்ரிலார்.

போத்ரிலாரை அதிகமும் பாதித்த இன்னொருவர் கை டொபோர்ட். கை டெபோர்ட 1967 ஆம் ஆண்டு பிம்பங்களின் சமூகம (The Society of Spectacle) எனும் நூலை எழதினார். மோஸ்தர் தொழிற்சாலையையும் பிம்பங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட விளம்பர யுகத்தினையும் தகவல் தொழில்நுட்ப யுகத்தின் அன்னியமாகின விளைவுகளையும் ஆய்வுக்கு உட்படுத்தியவர் கை டெபோர்ட. ஐரோப்பியக் கலக அரசியலில் இன்றளவும் ஆதிக்கம் செலுத்திவரும் சிச்சுவேசனிசம் (ளவைரயவழைnளைஅ) அல்லது நடப்புவாதம் எனும் கருத்து நிலைபாட்டின் ஆரம்பகர்த்தாக்களில் அவரும் ஒருவர். பிம்பங்களைக் கலைப்பதற்கும் அதைத் தகர்ப்பதற்குமான நடவடிக்கைகளை அன்றாட வாழ்வில் நிகழ்த்த வேண்டும் என்பதனை அரசியலாக முன்வைத்தவர் கை டெபோர்ட். சிச்சுவேசனிஸ்ட இயக்கத்தில் கொஞ்ச காலம் செயல்பட்டவர் ழான் பேத்ரிலார்.

நுகர்வுச் சமூகம் பிம்பங்களின் ஆதிக்கம் போன்றவை குறித்த லெப்வோர் மற்றும் கை டெபோர்ட் என இருவரது கருத்தாக்கங்களும் போத்ரிலாரின் பகுப்பாய்வின் அடிப்படைகளாக அமைகின்றன.

மக்கள் திரளிலிருந்து விலகியதான கோட்பாட்டு முயற்சிகளுக்கான தளம் அவருக்கு ஹென்றி லெப்வோரிலிருந்து கிடைக்கிறது. ஹென்றி லெப்வோர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க அரசின் நிலைபாட்டை நிபந்தனையற்று முழுக்கவும் ஆதரித்து நின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹென்றி லெப்வோர் கை டெபோர்ட போன்றவர்களின் அடிப்படைப் பகுப்பாய்வு முறைகளும் பின்நவீனத்துவச் சிந்தனை முறையும் அது வழங்கிய மொழியியல் உளவியல் தொல்லியல் பார்வைகளும் இணைந்ததாக போத்ரிலாரின் நகல்போலி குறித்த பிம்ப அரசியல் பரிமாணம் பெற்றிருக்கிறது.

போத்ரிலார் மீதான இந்தப் பாதிப்புகளை அவர் என்றுமே வெளிப்படையாக ஒப்புக்கொண்டதில்லை. போத்ரிலாரின் கருத்துலகம் அமைப்பியல் பின்வீனத்துவம் போன்றவற்றின் சொல்லாடல்களிலும் கருத்தாக்கங்களிலும் கிளைத்ததாக இருக்கிறது. இந்தச் சிந்தனைப் பின்னணியோடு பொஸ்னிய யுத்தத்திலிருந்து செப்டம்பர் பதினொன்றுக்குப் பின்னான உலகு வரை தகவல் தொழில்நுட்பத்தின் கட்டுதளையற்ற பிம்பப் பரவலாக்கம் நிகழ்ந்த இந்தப் பதினைந்து ஆண்டுகளில் நிகழந்தவை குறித்து உடனுக்குடன் கருத்துச் சொல்கிற கல்வித்துறைசார் கலாச்சார விமர்சகராக அவர் இருப்பதாலேயே அவரது கருத்துக்கள் முக்கியத்துவமடைகின்றன. தகவல் தொழில்நுட்ப யுகத்தில் அவரது கருத்துக்கள் நிறுவனமயமாகிவிட்ட மேற்கத்திய அமெரிக்க கல்வித்துறைக்கு மிக முக்கியமானதாகும். அவர் கருத்துச் சொல்கிற அரசியல் சம்பவங்களின் முக்கியத்துவத்தினால் அவரது கருத்துக்கள் வெகுஜன அரசியல் நடவடிக்கையாளர்களிடமும் முக்கியத்துவம் பெறுகின்றன.

உலக நிகழ்வுகளில் 1990 இருந்து 1992 ஆம் ஆண்டு வரையிலுமான மூன்றாண்டு காலகட்டங்கள் மிக முக்கியத்துவமானதாகும். இந்த ஆண்டுகளில்தான் யுத்தம் தொலைக் காட்சிப் பிம்ப யுத்தமாகப் பரிமாணம் பெற்றது. கதிரியக்கத்தால் உந்தப் பெற்ற குண்டு வீச்சுத் தொழில்நுட்பமாக (laser guided precision bomb technology) இக்காலத்தில் யுத்தம் தொலைக் காட்சியில் வண்ண வானவேடிக்கை பிம்பங்களின் உலகமாக ஆகியது. பொஸ்னிய யுத்தமும் முதலாம் ஈராக் யுத்தமும் நடந்து முடிந்தது இந்த ஆண்டுகள்தான்.

இந்த ஆண்டுகளில் சமகாலத்தில் நேர்ந்த இரண்டு மிகப்பெரிய மாற்றங்களில் முதலானது உலக விரிவு வலை ( world wide web) கண்டுபிடிக்கப்பட்டதாகும். இங்கிலாந்தைச் சேர்ந்த மூலக்கூறு பௌதிகவியலாளர் பெர்னர்ஸ்; லீ 1991 ஆம் ஆண்டு இணைய வளைத்தளத்தை உலகின் பொதுமகனுக்கென அர்ப்பணித்தார். உலகின் சாதாரண மகனுக்கு அவர் அருளிய மிகப்பெரிய கொடை இது.

இரண்டாவதாக நேர்ந்த மாற்றம் அரசியல் ரீதியிலான ஊடகத்துறைப் புரட்சி எனலாம். 1992 ஆம் ஆண்டு மத்தியக் கிழக்கு நாடான கத்தாரிலிருந்து அல்ஜிஜீரா தொலைக் காட்சி ஆரம்பிக்கப்பட்டதுதான் அந்நிகழ்வு. உலகின் மாற்று அரசியலுக்கான தகவல் ஆதாரமாக அமெரிக்க ஐரோப்பிய ஒற்றறைப் பரிமாண ஊடகங்களுக்கு எதிர் தகவல் ஆதாரமாக அல்ஜிஜீரா தொலைக்காட்சி தோன்றியது.

இத்தகைய அரசியல் மற்றும் தொலைக்காட்சிப் பிம்பச் சூழலில்தான் ழான் போத்ரிலாரது அபிப்பிராயங்கள் வெளியாகின்றன. பயங்கரவாதம் உலகவயமாதல் பிரபஞ்ச மதிப்பீடுகள் உள்ளுர் மதிப்பீடுகள் சித்திரவதை கடத்தப்பட்ட பணயக் கைதிகள் போன்ற பிரச்சினைகள் குறித்ததாக போத்ரிலாரின் இக்காலத்தியக் கதையாடல் களம் அமைகிறது. .

ழான் போத்ரிலாரின் கருத்தாக்கங்களில் மிக முக்கியமானது சிமுலேசன் (simulation)  சிமுலெக்ரா (simulacra) மற்றும் ஹைபர் ரியாலிட்டி (hyper reality) போன்றவையாகும். சிமுலேசன் என்பதனை நிகழ்வு மற்றும் அசல் மற்றும் ஆதாரம் போன்றவற்றொடு தொடர்பற்ற நகல் எனச் சொல்லாம். தொலைக் காட்சியைப் பொறுத்து பிம்பத் தொகுபபின் போது தத்தமது நோக்குக்காக சம்பந்தப்பட்டப் பிம்பங்களால் பயன்பெறுபவர்களால் உருவாக்கப்படும் அசலைப் போன்ற போலிப் பிம்பம் என இதனை விளக்கலாம். அடுத்த கட்டமாக சிமுலெக்ரா என்பது படத்தொகுப்பின் போது உருவாக்கப்பட்ட நகலின் மீது சார்ந்திருக்கிற நகல்போலி என விளக்கலாம். போலி அசலின் தன்மையைக் கொண்டிருப்பதில்லை நகல்போலி போலியின் தன்மையைக் கூடக் கொண்டிருப்பதில்;லை. இவ்வாறாக நகல் போலிகளின் அதீதமயமான நிலையாக நகல்போலியின் மீதான நகல்போலிகளின் நிலையாக ஹைபர் ரியாலிட்டி உருவாகிறது.

‘ஹைப்’ அல்லது அல்லது ‘ஹைபர் டென்ஸன்’ என்பன போன்ற சொற்கள் எழுப்பும் அர்த்தம் அதீதம் என்பதனோடு தொடர்புபட்டது. ஹைபர் ரியாலிட்டி என்பது அதீதப்படுத்தப்பட்ட பல்வகை யதார்த்தங்களின் அதீதத் தொகுப்பு நிலையாகும். இதனை ஆழ் யதார்த்தம் என்று சொல்லமுடியாது. இந்த யதார்த்தம் காலம் இடம் போன்றவை வழங்கும் ஆதாரமான யதாரத்தங்களை முற்றிலும் மறுத்த நிலையாகும். கலை இலக்கியம் போன்றன இயங்கும் வெளியும் இதுவேயாகும். இப்போது இருக்கும் உலகு மோஸ்தர்கள் பரிவர்த்தனை மதிப்புகள் போன்றவற்றினால் உருவான நகல்போலி உலகாக இருக்கிறது என்பதுதான் போத்ரிலாரின் நிலைபாடாக இருக்கிறது.

அசலுடன் சம்பந்தமற்ற போலி என்பதாகவே இன்றைய உலகு இருக்கிறது. இன்றைய மோஸ்தர்கள் நுகர்வுப் பொருட்கள் விளம்பரங்கள் தொலைக்காட்சிப் பிம்பங்கள் மக்களின் நுகர்வுத் தேர்வுகள் போன்றவற்றுக்கான ஆதாரம் அல்லது இருப்பிலிருந்த நிரந்தர நிஜம் அல்லது நிகழ்வு என்று ஏதுமில்லை. அவற்றை இன்றைய பின் நவீனயுகத்தில் கண்டுபிடிப்பதும் சாத்தியமில்லை என்கிறார் போத்ரிலார். இருப்பதெல்லாம் நகல்போலிகளின் எல்லையற்ற பெருக்கம்தான். ஓரு கட்டத்தில் நகல்போலியின் மீதான நகல்போலி எனும் கருத்தாக்கம் கூட நகல்போலி சமூகத்தின் உறுப்பாக ஆகிவிடும் என்கிறார் ழான் போத்ரிலார்.

அவரது பகுப்பாய்விலிருந்து உருவாக்கப்படுகிற அவரது முடிவுகள் இரண்டு.

1.பயன்மதிப்பு என்பது மறைந்து தற்போது பரிவர்த்தனை மதிப்பு மட்டுமே இருக்கிறது.

2.நிஜத்துக்கும் நிழலுக்கமான வித்தியாசம் மறைந்து போய்விட்டது. நகல்போலிகள் இன்று நிஜங்களாகியிருக்கிறது. பல்வேறு நகல்போலிகள் அலைவதினால் யதார்த்தமென்பதும் நிஜமென்பதும் பன்முகப்பட்டதாக ஆழ் யதார்த்தப் பண்பு கொண்டதாக ஆகிவிட்டது. ஆகவே ஆதாரங்கள் என்பதும் நிகழ்வென்பதும் நிஜமென்பதும் இனி இல்லை. இருப்பதெல்லாம் பிம்பங்களினது நகல்போலிகள்தான் என்கிறார் அவர்.

போத்ரிலாரைப் பொறுத்தளவு கருத்தியல்கள் இலட்சியங்கள் வரக்கங்கள் சமூக வேறுபாடுகள் எதுவும் இன்று இல்லை. மாற்றுச் சமூகம் போராட்டங்கள் எதிர்ப்பியக்கங்கள் என்பதற்கொல்லாம் ழான் போத்ரிலாரின் உலகத்தில் அர்த்தமில்லை. ஒரே வார்த்தையில் சொல்வதானால் : போத்ரிலாரின் உலகத்தில் மனிதப் பரிமாணம் மனிதனது செயலுலூக்கம் மிக்க பிரதிநிதித்துவம் என்பதற்கு ஏதும் முக்கியத்துவமில்லை.

போத்ரிலாரின் இத்தகையை நிலைபாடு அமெரிக்க சமூகத்துக்கும் ஐரோப்பிய சமூகத்துக்கும் ஜப்பானிய சமூகத்துக்கும் ஓரளவு பொருந்திவரக் கூடியதுதான். நுகர்வுக் கலாச்சரத்தின் விளைநிலங்கள் இந்தச் சமூகங்கள். அந்நியமான மனிதர்கள் அலையும் பாலை நிலங்கள் இந்நிலங்கள். ஆனால் நைக் காலணிகள் துணிவகைளிலிருந்து இந்த நாடுகளுக்கு ஏற்றமதியாகும் நுகர்பொருட்களை உருவாக்குபவர்கள் தென் ஆசிய நாடுகளின் பசிபிக் ஆசிய நாடுகளின் வியர்வைத் தொழிலாளிகள் என்பதனை நாம் மறந்துவிட முடியாது. இங்கிலாந்துக் கோட்பாட்டாளரான நோர்மன் ஜெராஸ் ‘தொழிலாளி வரக்கத்திற்கு விடைதருவோம்’ என்று சொன்னபோது ‘இல்லை மேற்குக்கும் அமெரிக்காவுக்கும் நுகர்வு பொருட்களையும் மோஸ்தர் பொருட்களையும் பிம்பங்களையும் ஆதாரமாகப் படைத்துத் தரும் வியர்வைத் தொழிலாளிகள் இதோ மூன்றாம் உலக சமூகங்களில் ஐரோப்பா அமெரிக்கா அல்லாத சமூகங்களில் வாழ்கிறோம்’ என்றார் இங்கிலாந்து மார்க்சியரும் நிறவெறி எதிர்ப்பாளருமான சிவானந்தன்.

மேற்கில் வெறும் குறிகளாக எஞ்சும் நுகர்பொருட்கள் எமது நாடுகளில் குறைந்த கூலியாகவும் சுரண்டலாகவும் காசநோயாகவும் எஞ்சிநிற்கிறது எனும் யதார்த்தம் போத்ரிலாரின் அன்றாட வாழ்வு யதார்த்தம் இல்லைதான். போரினால் சிதறிய உடல்களும மரணமுறும் அநாதைக் குழந்தைகளும் அகதிவாழ்வும் போத்ரிலாரின் அன்றாட யதார்த்தங்கள் இல்லைதான். போத்ரிலாரின் கருத்தாக்கங்கள கிராமங்களும் விவசாயக் கூலிமக்களும் வியர்வைத் தொழிலாளர்களும் நிறைந்த எமது நாடுகளின் யதார்த்தத்திற்குப் பொநுந்திவரும் யதாரத்தம் அல்ல. போத்ரிலார் மேற்கத்திய் அமெரிக்க உலகில் இரைந்து கிடக்கும் பிம்பங்களை முதன்மைப்படுத்தியே சகல விசயங்களையும் ஆய்வு செய்கிறார்.

தொலைக்காட்சிப் பிம்பங்கள் புகைப்படங்கள் போன்றவை குறித்து அதிகமாகப் பகுப்பாய்வில் ஈடுபட்ட பிரெஞ்சுச் சிந்தனையாளரென போத்ரிலாரையே சொல்லலாம். செப்டம்பர் தாக்குதலின் பின் கருத்தியலோ இலட்சியங்களோ கோருதல்களோ எதிர்ப்புணர்வோ எதுவும் இல்லையென்கிறார் இவர். செப்டம்பர் தாக்குதல் தனக்குத் தானே அழிவைத் தேடிக்கொண்ட அமெரிக்க சமூகத்தின் மீதான குறியீட்டுத் தாக்குதல் என அவர் குறிப்பிடுகிறார். தொலைக் காட்சிகளில் நிறைத்துக் கொண்டு நின்ற ஆதீத பிம்பங்களாகவே வளைகுடா யுத்தம் நடந்து முடிந்திருக்கிறது. தகவல் தொழல்நுட்ப விளையாட்டை திரையில் நிகழ்த்துவதாகவே போர் நடந்து முடிந்திருக்கிறது. காட்டப்பட்ட போர் அமெரிக்காவினால் முன்பே திட்டமிடப்பட்ட போர். நிஜமான போர் அல்ல எனும் அவர் நிஜமான போரைப் பாரக்கவோ புரிந்து கொள்ளவோ முடியாது எனவும் தெரிவிக்கிறார். போத்ரிலாரைப் பொறுத்த அளவில் அனைத்தையும் உறைநிலையில் வைத்தே விவரிக்கிறார்.

போர் என்பது ஒரு தொடர் நடவடிக்கையென்றோ போரில் மனிதர்கள் மரணிக்கிறார்கள் தகவல் மேலாதிக்கம் கொண்டவர்கள் மறைத்த பிம்பங்கள் இருக்கின்றன என்பதையோ அவர் காண்பதில்லை. போருக்கு எதிரான இயக்கங்கள் இருக்கிறது அதில் மனிதர்கள் பங்கு பெறுகிறார்கள் என்பதனை அவர் காண்பதில்லை. அவரைப் பொறுத்து சமூகத்தின் மேல்கட்டுமானமே கீழ்க்கட்டுமானத்தினைத் தன் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. கீழ்க்கட்டுமானத்தின் ஆதாரங்;களை இனி காண்பது என்பது சாத்தியமில்லை. இவ்வகையில் எதிர்ப்பு நடவடிக்கைகள் அர்த்தமில்லை. வர்க்கப் போராட்டம் அர்த்தமில்லை. பயங்கரவாதததிற்கு ஒரு நோக்கமும் இல்லை என்கிற நிலைபாடுகளை வந்தடைகிறார்.

நிகழ்வுக்கும் பிம்பத்திற்கும் நிஜத்திற்கும் புனைவுக்கும் ஆன உறவுகளை கார்ல் மாரக்ஸ் தனது அன்னியமாதல் மற்றும் முதலாளிய சமூகத்தில் சரக்குவழிபாடு போன்ற கருத்தாக்கங்களின் வழி பயன்மதிப்பு-பரிவர்த்தனை மதிப்பு போன்ற கருத்தாக்கங்களின் வழி தீவிரமாகவே அலசியிருக்கிறார். அவரது பகுப்பாய்வு முறையை அறுபதுகளில் தோன்றிய தகவல் தொழில்நுட்பம் நுகர்வுக் கலாச்சாரம் விளம்பரங்கள் போன்றவற்றால் உருவாக்கப்படும் நுகர்வுக் கலாச்சாரத்திற்குப் பொறுத்திப் பாரத்தவர்களென ஜெர்மனியில் பிராங்க்பரட் சிந்தனைப் பள்ளியைச் சேர்நத ஹெர்பர்ட் மார்க்யூசும் அதார்னோவும் பிரான்சில் கை டெபோர்டும் இருந்திருக்கிறார்கள். அமெரிக்க வகை நுகர் கலாச்சாரம் எவ்வாறு ஓற்றைப் பரிமாண மனிதனை உருவாக்குகிறது என மார்க்யூஸ் விவரித்தார். ஆதிக்க வகை கலாச்சாரத்திற்கு ஆட்பட்ட செயலிலிகளாக எவ்வாறு மனிதர்கள் ஆக்கப்படுகிறார்கள் என்பதனை இத்தாலிய மார்க்சியரான அந்தோனியோ கிராம்சியின் மேலாதிக்கம் ( hநபநஅழலெ) எனும் கோட்பாட்டு அடிப்படையிலும் மார்க்சினது அந்நியமாதல் எனும் கருத்தாக்கத்தின் அடிப்படையிலும் கை டெபோர்ட் முன்வைத்தார். இந்தச் செயலின்மைக்கு எதிராக கலாச்சார வெளியிலும் அன்றாட வாழ்விலும் எழுத்திலும் அன்றாட நிலவும் வாழ்வுக்கு எதிரான நடவடிக்கைகளை ‘மாற்றாக’ கை டெபோர்ட் முன்வைத்தார். பிம்பங்களின் சமூகத்திற்கு எதிராக நிகழ்வை மீட்டெடுக்க களியாட்டங்களையும் திருவிழாக்களையும் எதிர்ப்பு வடிவங்களாகவும் அவர் முன்வைத்தார்.

நிகழ்வுக்கும் புனைவுக்கும் நிஜத்துக்கும் போலிக்குமான இடைவெளியை இனம் காணமுடியாது என்பதால் பிம்ப அரசியலை அதீதமான எல்லைகளுக்கும் போத்ரிலார் எடுத்துச் சென்றார். ஓரு வகையில் மனிதனின் அழிவு குறித்துக் கொஞ்சமும் பொறுப்பற்று தூய கோட்பாட்டுச் சர்ச்சைகளில் மட்டுமே ஈடுபடுகிற உறைந்த மனம் கொண்டவராக அவரது மூனறு காலகட்டத்திய எழுத்துக்கள் பார்க்கப்படுகின்றன. பொஸ்னிய யுத்தம் வளைகுடாப் போர் செப்டம்பர் 11 தாக்குதல் போன்றவை குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் குரூரமான தன்மை கொண்டவை என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

பொதுவாக அவரது கட்டுரைகளைக் குறித்துப் பேசவருகிறவர்கள் அனைவருமே அவரது எழுத்துகள் எளிமையாகப் புரிந்து கொள்ள முடியாதவை எனகிறார்கள். தகவல்யுகம் குறித்து எழுதுகிற ஒரு வகை தீரக்கதரிசி என அவரை விதந்தோதுகிற ஊடகத்துறைசார் கல்வியாளர்களும் உண்டு. தீர்க்கதரிசிகள் கடந்த காலத்தை விதிவசம் என்பவர்கள் மட்டுமல்ல எதிர்காலமும் அவர்களைப் பொறுத்துக் கடக்கமுடியாத விதிகளால் ஆனதுதான் என்பார்கள். இந்த வகையில் போத்ரிலாரும் ஒரு விதிவாதிதான். உடனடிக் கவனிப்பையும் அதிர்ச்சியையும் உருவாக்கும் தன்மை கொண்டவை போத்ரிலாரின் எழுத்துக்கள் என்பதில் எவருக்கும் மாறுபாடு இருக்கமுடியாது.

குவைத்தை ஈராக் ஆக்கிரமித்ததையடுத்து ஈராக்கின் மீது அமெரிக்க மேற்கத்தியப் படைகள் போர் தொடுத்த வளைகுடாப் போர் பற்றிக் குறிப்பிடும்போது ‘அந்தப் போரே நடக்கவில்லை’ என போத்ரிலார் எழுதினார். ‘போர் நடக்கவில்லை நடக்காது நடக்கப் போவதில்லை’ என அவர் எழுதினார். சம்பந்தப்பட்ட கட்டுரைகளை ஆழ்ந்து வாசிக்கிறபோது மோம்போக்காகவேனும் அவர் சொல்ல வருகிற விசயம் இது அல்ல எனச் சாதாணமானவர்களே புரிந்து கொள்ள முடியம். ஆனால் அதிர்ச்சி மதிப்புக்காக அவர் இவ்வாறான தலைப்புகளை எடுத்துக் கொள்கிறார். அந்தக் கட்டுரையில் அவர் சொல்ல விரும்பும் விஷயம் இதுதான் : ஈராக் யுத்தம் தொலைக்காட்சிகளில் வாணவேடிக்கை போல நடந்து முடிந்த ஒரு விசயம். முன்பாகவே திட்டமிட்டு நடத்தி முடிக்கப்பட்ட ஒரு விசயம். பிம்பங்களாகவே எஞ்சிப்போன ஒரு விசயம் என்பதுதான். உண்மையான போருக்கும் இதற்குமான இடைவெளியையோ வித்தியாசத்தையோ காணவியலாது என அவர் தெரிவிக்கிறார். அதாவது தொலைக்காட்சி பிம்பங்;களின் நகல்போலித் தன்மையை மட்டுமே முன்னிறுத்தி போருக்கு எதிராக மக்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் அகதிமக்களுக்கு நேர்ந்த இடப்பெயர்வின் துயரம் மாற்று ஊடகங்கள் அமெரிக்க மேற்கத்திய ஊடகங்களுக்கு மாற்றாக முன்வைத்த சிறிய அளவிலான செய்திகள் பிம்பங்கள் போன்றவை அனைத்தையும் நிராகரித்ததாகவே அவரது அணுகுமுறை இருக்கிறது.

போத்ரிலார் பயங்கரவாத்திற்கும் உலகவயமாக்கலுக்கும் நேரடியான உறவைக் காண்கிறார். அதைப் போலவே மேற்கத்திய நவீனத்துவ மதிப்பீடுகளாள சுதந்திரம் ஜனநாயகம் மனித உரிமை போன்ற நவீனத்துவ மதிப்பீடுகளின் அடிப்படையிலான மறுமலர்ச்சி யுகக் கருத்தையொட்டிய பிரபஞ்சமயமாதலுக்கும் உலகவயமாதலுக்கும் இணக்கப்படுத்த முடியாத முரணையும் அவர் காண்கிறார். பிரபஞ்சமயமாதலுக்குமான பரிவர்த்தனையாக தறபோது அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் உலகவயமாதலை முன்வைக்கின்றன. மனித உரிமை விடுதலை ஜனநாயகம் போன்ற பிரபஞ்சமயமான மதிப்பீடுகளை முன்வைத்து அமெரிக்கா போரில் ஈடுபட்டாலும் அதனது நோக்கம் வன்முறையான உலகவயமாதல் என்கிறார் போத்ரிலார். நகல்போலிகள் நிறைந்த பொருளியல் ஆதிக்கத்தை பிரபஞ்ச மதிப்பீடுகள் எனும் போர்வையில் அமெரிக்கா மற்ற நாடுகளின் மீது திணிக்கிறது என்கிறார் அவர். உலகவயமாதலின் வன்முறை என்பதை அமெரிக்கா பிரபஞ்சமயமானது எனும் மதிப்பீடுகளின் போர்வையில் வைப்பதால் மேற்கத்திய மதிப்பீடுகளும் அழிந்து அது கட்டற்ற வன்முறைச் சூழலை உருவாக்குகிறது என்கிறார் போத்ரிலார்.

எந்தக் குறிப்பிட்ட கலாச்சார மதிப்பீடுகளும் பிரபஞ்சத் தன்மை கொண்டவை அல்ல. காலனியாதிக்கம் பிற பல் கலாச்சாரங்களை தன்வயப்படுத்தி பிரபஞ்சமட்டத்திற்குக் கொண்டு வந்ததால் தனது தனித்துவத்தைப் பேணுவதன் பொருட்டு அக்கலாச்சாரங்கள் மரணமுற்றது. அது அழகான மரணம் என அவர் குறிப்பிடுகிறார். இதே மாதிரியில் தறபோது மறுமலர்ச்சிக்கால மதிப்பீடுகளையும் அமெரிக்க மதிப்பீடுகளையும் தனித்துவமான புவியியல்சார் மதிப்பீடுகளை பிற மக்களின்மீது உலகவயமாதல் எனத் திணிப்பதால் இரண்டு விளைவுகள் ஏற்படுகிறது. தன்னழிவை அமெரிக்க மேற்கத்திய சமூகங்கள் நோக்கிச் செல்கிறது தன் மதிப்பீடுகளின் அழிவை இச்சமூகங்கள் நோக்கிச் செல்கிறது. அதே வேளையில் பிற காலச்சாரங்களிலிருந்து தற்பாதுகாப்புக்கான வன்முறையை அது தோற்றுவிக்கிறது. செப்டம்பர் 11 தாக்குதல் அத்தகையைதுதான் என்கிறார் போத்ரிலார். உலகவயமாதலின் வன்முறையே பயங்கரவாத்திற்கான அடிப்படை என்பதனை அவர் முன்வைக்கிறார்.

கலாச்சாரச்சார்புவாத நிலைபாட்டையும் உலகவயமாதலையும் இணைத்து பயங்கரவாத்தின் தோற்றத்திற்கான காரணத்தை அவர் முன்வைக்க விளைகிறார். ஆனால் கலாச்சாரங்கள் முற்றிலும் பிளவுண்டவை அல்ல என்பதும் மனித உரிமை ஜனநாயகம் சுதந்திரம் போன்றவை பிற சமூகங்களுக்கு ஒவ்வாதவை அல்ல என்பதனையும் இங்கு புரிந்து கொள்ள வேண்டும்.

போத்ரிலாரின் பகுப்பாய்வில் ஒரு பகுதி உண்மையே இருக்கிறது. பிரபஞ்சமதிப்பீடுகளை முன்வைத்ததாக அமெரிக்கா தனது உலகவயமாதலின் பொருளியல் நலன்களை உலகின் சகல இடங்களுக்கும் விஸ்தரிக்கிறது என்பதுதான் அந்தப் பகுதி உண்மை. ஆனால் கலாச்சாரங்கள் தீவுகளாக இல்லை என்பதனையும் முற்றிலும் இணங்கவே முடியாது என்பதனையும் ஒப்பமுடியாது என அமர்த்யா சென் போன்ற தத்துவம் கற்ற கிழக்கத்தியப் பொருளியலாளர்கள் வலியுறுத்துகிறார்கள். இவ்வகையில் பின்லேடன் ஜோர்ஸ் புஸ் இருவருமே ஒரே வகையிலான அடிப்படைவாதிகள்தான் என இவ்வகையிலேயெ ஆப்ரிக்க இலக்கியவாதியும் மனித உரிமையாளருமான வோலே சோயிங்கா குறிப்பிடுவதும் பரிந்து கொள்ளத் தக்கது. ஸதாம் குசைன் பின்லேடன் மட்டுமல்ல ஜோர்ஜ் புஸ்சும் டோனி பிளேயரும் இத்தாலியப் பிரதமர் பெர்லுஸ்கானியும் கூட மனித உரிமை மீறலாளர்கள்தான் என ஆப்கான் ஈராக் அமெரிக்க பிரித்தானிய மனித உரிமையாளர்கள் அனைவரும் குறிப்பிடுகிறார்கள்.

பிம்ப மைய வழிபாடு கொண்ட போத்ரிலாரின் பின்நவீனத்துவத் தலைகீழ் அணுகுமுறையே அவரது அனைத்துக் குளறுபடிகளுக்கும் காரணமாக அமைகிறது. மேற்கத்திய மையவாதக் கண்ணோட்டத்திலிருந்தும் தொலைக்காட்சீப் பிம்ப மையவாதக் கண்ணோட்டத்திலிருந்தும் மனித காரணி மற்றும் போரின் விளைவுகளாக மறுத்ததாக பேத்ரிலாரின் அணுகுமுறை இருப்பதால் நடவடிக்கையை மறுக்கும் செயல்முடக்க நிலைபாட்டுக்காக பேத்ரிலாரை விமர்சிக்;கிற மாரக்சியர்களும் உண்டு. அதே வேளையில் அறுபதுகளில் தோன்றி பல்வேறு பிரெஞ்சுச் சிந்தனையாளரகளின் தொடர்ச்சியாகவும் நம்காலத்தில் தோன்றியிருக்கும் தகவல் தொழில்நுட்ப ஊடகப் பிம்பங்களைத் தீவிரமாக அலசிய பகுப்பாய்வாளராகவும் அவரைப் பகுதியளவு ஒப்புக்கொள்கிற மாரக்சியர்களும் உண்டு. முன்னதற்கு பிரித்தானிய சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் கோட்பாட்டாளரான அலக்ஸ் கொலின்னி கோஸையும் இரண்டாவது நிலைபாட்டுக்கு அமெரிக்க மார்க்சியரான டக்ளஸ் கெல்னரையும் குறிப்பிடலாம்.

அமெரிக்காவில் போத்ரிலார் குறித்து அதிகமும் எழுதியவரும் போத்ரிலாரின் புத்தகங்களை முன்னுரையோடு பதிப்பித்தவரும் டக்ளஸ் கெல்னர்தான். கெல்னரின் கண்ணோட்டமே மிகப் பொறுத்தமானது என்பதை நாம் போத்ரிலாரைக் குறித்த வாசிப்பில் நாம் அறியமுடியும். தகவல் தொழில்நுட்ப உலகில் தொலைக்காட்சி பிம்பம் புகைப்படத்தின் அரசியல் போன்றவற்றின் நம்பகத்தன்மை குறித்த கேள்வியை மிகத் தீவிரமாக எழுப்பியவர் ழான் போத்ரிலார்தான். போத்ரிலாரில் இருந்த பகுப்பாய்வாளர் எனும் பகுதியை நாம் ஏற்பதில் பிரச்சினையிருப்பதில்லை. ஆனால் பகுப்பாய்வின் அடிப்படையில் அவர் முன்வைக்கிற ‘தரிசனம்’ விதிவாதமின்றி வேறில்லை.

எதிர்ப்பு அரசியல் மற்றும் மாற்றம் கடந்ததாக அவர் தனது பிம்ப அரசியலை முன்வைக்கிறார். நிகழ்வு நிஜம் ஆதாரம் போன்றவைகள் இனி இல்லை. அனைத்தும் பிம்பங்களின் விளையாட்டே என அவர் குறிப்பிடுகிறார். போரில் பிம்பத்தின் ஆதிக்கத்தை நிறுவுவதற்கு அவர் எடுத்துக்கொள்ளும் தர்க்கத்தில் போரின் விளைவுகளோ மனிதத் துயரமோ அதனது தொடர்ச்சியோ இடம் பெறுவதில்லை. இவ்வகையில்தான் போத்ரிலாரின் கண்ணோட்டத்தைக் குறித்து அலக்ஸ் கொலின்னி கோஸ் ‘போத்ரிலாரின் பார்வையில் ஆழ்கண்ணோட்டமும் இருக்கிறது சமமாக மாட்டுச்சாணமும் (டிரடடளாவை) இருக்கிறது’ எனக் கடுமையாகச் சொல்கிறார்.

போத்ரிலாரை சமூகவியலாளராகவோ தொலைக்காட்சி பிம்பம் குறித்துப் பேசிய கோட்பாட்டாளராகவோ மட்டும் புரிந்து கொள்ள முடியாது. அவரை நீட்சேவின் அடியொற்றியவராகப் பார்க்கிறவர்கள் அதிகமும் இருக்கிறார்கள். அவரது சொல்லாடல்களில் நீட்சே போலவே இறந்துவிட்ட கடவுளும் அவநம்பிக்கையும் செயல்முடக்கமும் இருப்பதனை நாம் காணமுடியும். மேற்கத்திய அமெரிக்கச் சமூகங்களில் தற்போது கலாச்சாரத்துறையும் சரி பல்கலைக் கழகங்களும் சரி தொழிற்சாலைப் பண்டங்களை உற்பத்தி செய்கிற அமைப்பு சார்ந்த நிறுவனங்களாக ஆகிவிட்டன. இதில் செயல்படுபவர்கள் பண்டங்களைத் திரும்பத் திரும்ப உற்பத்தி செய்பவர்களாகவும் செயல்நோக்கிய விமர்சனப் பண்பற்ற பகுப்பாய்வாளர்களாகவும் செயலுக்கு முன்வராதவர்களாகவுமே இருக்கிறார்கள்.

ரெப் மியூசிக் எவ்வாறாக அதனது அரசியல் எதிர்ப்புப் பரிமாணமும் கலகக் கலாச்சாரப் பண்பும் விலக்கப்பட்டு எம்டிவியினால் நுகர் பொருளாக ஆக்கப்பட்டிருக்கிறதோ அதைக் போலவே பல்கலைக்கழகம் சார்ந்த பகுப்பாய்வுமுறைகளும் எதிர்ப்பு நீக்கப்பட்டதாக கலகப் பண்புகள் தவிர்த்த வெறும் பகுப்பாய்வுகளாக ஆகியிருக்கிறது என்கிறார் பிரித்தானியாவின் இடதுசாரிக் கலாச்சாரக் கோட்பாட்டாளரான பீட்டர் ஒஸ்போர்ன்.

3.

ஈராக்கில் பஸ்ரா பிரதேசத்திலுள்ள பிரித்தானியப் படைவீரர்களும் இதே வகையிலான சித்திரவதைகளிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டார்கள்; எனும் செய்தியை பிரத்தானியாவில்pருந்து வெளியாகும் டெய்லி மிரர் பத்திரிக்கை அதே ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டது.

தம்மிடமுள்ள ஈராக்கிய யுத்தக் கைதியொருவரின் மீது மூத்திரம் பெய்தபடி கைதியின் தலையின் பக்கவாட்டில் துப்பாக்கி முனையை அழுத்தியபடி நிற்கும் பிரித்தானியப் படைவீரர் ஒருவரின் புகைப் படங்களை டெய்லி மிரர் வெளியிட்டது. தொலைக் காட்சிப் பிம்பம் பத்திரிக்கைப் புகைப்படம் என வெளியான இவ்விரண்டு ஊடகச் செய்திகளும் அமெரிக்க பிரித்தானிய அரசுகளுக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தைக் கொண்டு வந்தன. எந்த மனித உரிமை மீறல்களைத் தடுத்து றிறுத்துவதற்காக அல்லது இல்லாதொழிப்பதற்காக அவர்கள் ஈராக்கிற்குச் சென்றார்கள் எனக் கோரிக்; கொண்டிருந்தார்களோ அதே சித்திரவதைகளைத் தமது படையினரே மேற்கொள்கின்றனர் எனச் சொல்லப்பட்டபோது உடனடியாகவே அமெரிக்க பிரித்தானிய அரசுத் தலைவர்கள் தமது படையினரின் இந்தச் சித்திரவதை நடவடிக்கை உண்மையாக இருக்கமானால் தாம் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் இந்த அவமானகரமான நடத்தை பொறுத்துக்கொள்ள முடியாதது எனவும் அறிவித்தார்;கள்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்சும; பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேரும் பகிரங்கமாகவே தமது படையினரின் நடவடிக்கையை வெளிப்படையாக விமர்சித்தார்கள். இந்நடவடிக்கை அமெரிக்க மதிப்பீடுகளின் அடியொற்றிய நடவடிக்கை அல்ல என ஜோர்ஜ் புஸ் அறிவித்தார். இந்நடவடிக்கை அமெரிக்க மதிப்பீடல்லாதது (un-american) என இதனை அழைத்தார் பென்டகனிலிருந்த பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட். இதே சொற்றொடரின் அடிப்படையில்தான் மெக்கார்த்தியின் காலத்தில் பெர்டோல்ட பிரெக்ட் சார்லி சாப்ளின் போன்ற கலைஞர்கள் அமெரிக்காவில்; வேட்டையாடப்பட்டார்கள் என்பது வரலாறு.

நடந்த சம்பவம் அறுவறுப்பானது எனச் சொன்னார் பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேர். சதாம் குசைனது சித்திரவதைகளை விட மோசமில்லை என பாதுகாப்பு அமைச்சக அதிகாரி சப்பைக் கட்டு கட்டினார். இருநாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் அரபு வெகுமக்களிடம் மன்னிப்புக் கோருமளவு நிர்ப்பந்தத்தற்கு உள்ளானார்கள்.

பிரித்தானியாவில் இனவாதப் பத்தரிக்கையான தி சன் பத்திரி;க்கையும் டெய்லி மிரருக்கு எதிராக போலியான சில புகைப்படங்களைப் பிரசுரித்திருக்கிறது. இருநூறு பவுண்கள் செலவழி;த்தால் இம்மாதிரி போலிப் புகைப் படங்;களை எவரும் எடுக்கலாம் எனவும் ஸன் பத்திரிக்கை தெரிவித்திருந்தது. டெய்லி மிரர் பத்திரிக்கை வெளியிட்ட புகைப்படங்கள் தொடர்பான நம்பகத் தன்மை பிரித்தானியப் படைத்துறை உளவு அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டது. வெளியிடப்பட்ட புகைப்படங்கள் நிச்சயமானது எனவும்; புகைப்படங்கள் தமக்கு பிரித்தானியப் படைவீரர்கள் மூவர்; மூலமே கிடைத்தாகவும் டெய்லி மிரர் பிரதம ஆசிரியர் பீட்டர் மோர்கன் தெரிவித்திருந்தார்.

சமகாலத்தில் ஈராக்கில் பிரித்தானியப் படையினர் வேண்டுமென்றெ பொதுமக்களைச் சுட்டுக்கொன்றிருப்பதாக அம்னஸ்டி இன்டர்நேசனல் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியிருந்தது. கொல்லப்பட்டவர்களில் ஹனன் வலா மாத்ருத் எனப் பெயர் கொண்ட 8 வயதுப் பெண்குழந்தையும் 22 வயதுள்ள கானம் காதிம் கதி எனப் பெயர்கொண்ட புதிதாக மணம் முடித்த ஒரு இளைஞரும்; அடங்குவார்கள் என அம்னஸ்டி தெரிவித்திருந்தது. 8 வயதுப் பெண்குழந்தை தெருவில் நடந்து செல்லும்போது 60 அடி தூரத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் 22 வயது இளைஞன் ஒரு சவ அடக்கத்தில் கலந்து கொண்டிருந்த வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அறிக்கை தெரிவித்திருந்தது. அம்னஸ்டியினால் சுட்டிக் காட்டப்பட்ட 38 சம்பவங்களில் 18 சம்பவங்கள் மட்டுமே விசாரணை செய்யப்பட்டிருப்பதாகவும் அவ்விசாரணைகள் கூட பகிரங்க விசாரணைகளாக அல்லாமல் படைத்துறைக் காவல்துறையினரால் ரகசியமாகவே மேற்கொள்ளபட்டிருப்பதாகவும் அம்னஸ்டி இன்டர்நேசனலின் அறிக்கை மேலும் சுட்டிக் காட்டியிருந்தது.

சுpபிஎஸ்; தொலைக்;காட்சி பிம்பங்கள் நியூயார்க்கர்டெய்லி மிரர்ஸன் பத்திரிக்கைகளின் புகைப்படங்கள் ஏற்படுத்தியிருக்கும் அரசியல் நெருக்கடி சில விடயங்;களைத் தெளிவுபடுத்தியிருக்கிறது.

1.முதலாவதாக தகவல் தொழல்நுட்ப ஊடகத்துறையின் சக்தியை இந்நெருக்கடி நிரூபித்திருக்கிறது.

2.இரண்டாவதாக உலகிற்குத் தெரியவராமல் நிறைய கொடுமைகளும் சித்திரவதைகளும் பொஸ்னிய வளைகுடா ஆப்கான் மற்றும் ஈராக் போர்களில் இடம் பெற்று வருகிறது என்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கத்திய அமெரிக்க அரசுத்துறைசார் பிபம்பங்கள் அக்கொடுமைகளை மறைத்து வருகின்றன என்பதும் சுயாதீனமான ஊடகங்கள் இதனை வெளிக்கொணராவிட்டால் இவை உலகின் கவனத்திற்கு வராமலே போயிருக்கும் என்பதும் தெளிவுபட்டிருக்கிறது.

3.மூன்றாவதாக இந்தப் பிம்பங்கள் உருவாக்கக் கூடிய விளைவுகள் வெகுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் அரசியல் மாற்றத்தைக் கோருமளவு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்பதனை இரு ஆக்கிரமிப்பு நாடுகளினதும் தலைவர்கள்; உணர்ந்திருக்கிறார்கள் என்பது தெளிவுபட்டிருக்கிறது.

4.நான்காவதாக மறைக்கப்பட்ட நிஜங்களை வெளியிடும் புகைப்படங்கள் திட்டமிட்டுக் கட்டப்படும்; மாதிரிப் புகைப்படங்கள் போலிப் புகைப்படங்கள் போலிப் புகைப்படங்கள் போல உருவாக்கபட்ட நகல் போலிப் புகைப்படங்கள் போன்றவற்றுக்கிடையிலான வித்தியாசங்களை எவ்வாறு பகுத்தாய்ந்து நிஜத்திற்கும் பிம்பத்திற்குமான உறவையும் பிம்பத்தின் பின்னுள்ள நிகழ்வின் ஆதாரத்தையும் கண்டடையமுடியும் என்பதும் கேள்விக்குரிய விசயமாக ஆகியிருக்கிறது. எதிர்காலத்தில் தகவல் தொழில்நுடப் ஊடகவியலாளர்கள் உண்மை பொய்யை எவ்வாறு பகுத்தறிய முடியும் எனும் கேள்வியும் இன்று பலமாக எழுந்திருக்கிறது.

பொஸ்னிய யுத்தத்தின் விளைவுகள் என வந்திருக்கும் சில செய்திகள் இங்கு முக்கியமானவை. முதலில் 20 இரவு விடுதிகள் மட்டுமே இருந்த கொசவா பிரதேசத்தில் தற்போது 250 இரவு விடுதிகள் இருக்கின்றன. இதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கிழக்கு ஐரோப்பிய இளம் பெண்கள் பணிரெண்டு வயதுக்கும் உட்பட்டவர்கள் கடத்தி வரப்பட்டு பாலியல் தொழிலாளிகளாக்கப்பட்டுள்ளனர். கொசவா மக்கள் தொகையில் ஒரு சதவீதமாக இருக்கும் ஐக்கிய நாடுகள் மற்றும் நேட்டோ நாடுகளின் படையினர் இந்த பாலுறவுத் தொழிலாளிகளில்; இருபது சதவீதமான பெண்களின் பாவனையாளர்களாக இருக்கின்றனர் என்கிறது சர்வதேசப் பொது மன்னிப்புச் சபையின் அறிக்கை. ஓரு லட்சத்துக்கும் மேலான ஜிப்ஸி ரோமா இன மக்கள் அங்கிருந்து விரட்டப்பட்டுள்ளார்கள் எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நகர்ந்து கொண்டிருந்த அகதிகள் மீது குண்டு போட்டுக் கொன்றது தவறுதலாக நிகழந்;துவிட்டது என அறிவிக்கிறது அமெரிக்க அரசு. ஆப்கானி;தானில் குழந்தைகள் இருந்த வீட்டின் மீது குண்டு போட்டுவிட்டு தீவிரவாதிகள் எனத் தவறாகக் குண்டு போட்டுக் கொன்றுவிட்டோம் என்கிறார் ஆப்கானிய அமெரிக்கப் படையதிகாரி;.

செஞ்சிலுவைச் சங்க அறிக்கையும் சர்வதேசப் பொதுமன்னிப்புச்சபையின் அறிக்கையும் தணக்குக் கிடைக்கவிலை;ல என அறிவித்திருக்கிறார் பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சர். அறிக்கை 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதமே அமைச்சருக்கு அனுபப்பட்டுவிட்டது என அறிவித்திருக்கிறார்கள் சர்வதேசப் பொதுமன்னிப்புச் சபையினர். புpரித்தானியப் படையினரால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள; பதினைந்து ஈராக்கியக் குடும்பத்தவர்கள் பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் மீது நட்டஈடு கோரி வழக்குத் தொடுத்திருக்கிறார்கள். ஐரோப்பிய யூனியன்; மனித உரிமைகள் யாப்பின் அடிப்படையில் அவ்வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது.

ஐரோப்பிய யூனியன் மனித உரிமைச் சட்டங்கள் ஐரோப்பிய யூனியன் நிலப்பரப்புக்குள்தான் பொருந்தும். ஈராக் ஐரோப்பிய யூனியனின்; பகுதியில்லை ஆகவே ஈராக்கில் பிரித்தானியப் படைகள் புரிந்த மனிதஉரிமை மீறல்களை ஐரோப்பிய யூனியன் சட்டத்தின் அடிப்படையில் விசாரிக்க முடியாது என பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சகம் வாதித்து வருகிறது. சமகாலத்தில் அமெரிக்க உளவுத்துறையின் அதிகாரிகள் ஈராக் சித்திரவதைப் புகைப்படங்கள் வெளியானபின்; பீதியில் ஆழ்த்தப்பட்டிருப்பதாகச் அமெரிக்கச் செய்திகள் தெரிவித்திருக்கின்றன. சித்திரவதை என்பது அமெரிக்க சிறை அமைப்பின் ஒரு அங்கம் எனவும் கைதியைப் பட்டினி போட்டு உடலை நலியச் செய்து உயிர்பீதியூட்டி அவர்களை விசாரிப்பது அமெரிக்க உளவுத்துறையின் விசாரணை முறை எனவும் செய்திகள் வந்திருக்கினறன. பயங்கரவாதிகள் என கைது செய்யப்பட்டிருக்கும் பெரும்பாலானவர்கள் அமெரிக்க நிலப்பரப்பில் வைக்கப்படாமல் எங்கேயிருக்கிறார்கள் எனச் சொல்லப்;படாமல் விசாரிப்பதுதான் அமெரிக்கர்களின் முறையெனவும் தற்போதைய ஈராக் சித்திரவதைப் புகைப்படங்கள் வெளியானதையடுத்துத் தங்கள் மீதான கேள்விகளும் எழுப்பப்படுமானால் தங்களில் பெரும்பாலுமானோர் மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுக்களில் சிக்குப்படுவோம் என சிஐஏவினர் அஞ்சுவதாக பேர் (கயசை) எனும் அமெரிக்க மாற்று ஊடக அமைப்பின் அறிக்கை தெரிவித்திருக்கிறது.

கோட்பாட்டாளர்கள் புகைப்படக் கலைஞர்கள; தொலைக்காட்சி வல்லுனர்கள; அரசுத் தலைவர்கள் என அனைவரையும் நடுத்தெருவுக்கு இழுத்து வந்து உலகின் முன் உண்மைகளைப் பேசவைத்த இந்த நிகழ்வு எதனால் ஏற்பட்டது என்பதற்கான பதில் வெளிப்படையானது.

அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக் காட்சி அபுகாரிப் சிறை சித்திரவதை தொடர்பாக சில புகைப்பட்ஙகளை ஒளிபரப்பியது.; தொடர்நது நியூயார்க்கர் மேகசினும; வாசிங்டன் போஸட்டும் சில புகைப் படங்களை வெளியிட்டன. சித்திரவதை பிம்பங்கள்; முழு அரபு மக்களிடமும் அமெரிக்க வெறுப்பைத் தூண்டியது. ஐரோப்பிய மக்களிடம் மிகப் பெரிய தார்மீக நெருக்கடியை அப்பிம்பங்கள் உருவாக்கியிருக்கின்றன. அமெரிக்கா போருக்குச்சென்றது தவறு எனத் தற்போது பெரும்பான்மையான அமெரிக்க மக்கள் தெரிவித்திருப்பதாக பிபிசி வலைத்தளம் தெரிவிக்கிறது. ஸ்பெயின் டொமினிகன் குடியரசு ஹாண்டுரஸ் போன்ற நாடுகள் தமது ஈராக்கிலிருந்து படைகளை திரும்ப அழைத்துக்கொண்டு விட்டன. ஈராக்கை முன்மாதிரியாக வைத்து மத்தியக் கிழக்கில் தனது பொருளியல் ஆதிக்கத்தை நிலைநாட்ட முனைந்த அமெரிக்காவின் திட்டம; எதிர்விளைவாக அரபு தேசியவாதத்தை அம்மக்களிடம் மறுபடி தோற்றுவித்துவிட்டது. பிம்பங்கள் தோற்றுவித்த எதிர்ப்பின் பின்பான நிஜமாக பாலஸ்தீனப் பிரச்சினை அனைத்து அரபு மக்கிள் மனதிலும் நிறுபூத்த நெருப்பாக இருக்கிறது

புகைப்படம் அசையும் பிம்பம் முன்வைக்கும் அலையும் அர்த்தத்தை விடவும் துல்லியமான உறைந்த உண்மைகளை முன்வைக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது. புகைப்படம் தெரிவிக்கும் அர்த்தம் அதனது பிம்பங்கள் தரும் மௌன வாசிப்பிலானது. புகைப்படத்தில் புகைப்படத்தின் பொருள் புகைப்பட ஆடி புகைப்படம் எடுப்பவன் என மூன்று நிலைகள்; இருக்கின்றன. புகைப்படம் எடுப்பவனின் மனநிலை புகைப்படத்தின் ஆதாரப் பொருளின் தன்மையையும் புகைப்படத்தின் காட்சித் தேர்வையும் தீர்மானிக்கிறது. இதனால்தான் தேந்தெடுக்கப்பட்ட பிம்பங்களில் விளையும் படத்தொகுப்பை கருத்தியல் வடிவம் என்றான் ஸெர்ஜி ஐஸன்ஸ்டீன்.

சித்திரவதையில் சந்தோசம் காண்பவன் எடுக்கும் புகைப்படம் தன்னளவில் சித்திரவதையாகவும் புகைப்படத்தின் பொருளை குரூரப்படுத்தவதாகவும் இருப்பது கண்கூடு. அரக்கர்களை மேற்கத்திய சமூகம் உருவாக்கி அதனைக் கொண்டாடுமானால; அவர்களது வெற்றிகரமான புகைப்படங்கள் கூட அரக்கத்தினத்தின் சாட்சியமாகவே இருக்கும் என்பதற்கான சாட்சியமாக அபுகாரிப் சிறையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இருக்கிறது. இந்த அர்த்தத்தில்தான் இட்லரின் கொலை முகாம்களுக்கு அனுபப்ப்;படவிருந்த மனிதர்களைத் தெரிந்து கொண்டு அதற்கு முன்பு அம்மனிதர்களது உடல்களைத் தனது திரைப்படத்தில் பாவித்த லெனி ரீப்செந்தால் எடுத்த கூபா கறுப்பின மக்கள் பற்றிய லெனியின் புகைப்படங்களை வெள்ளை நிறவெறி கொண்டவை என அனுமானித்தார் சுசன் சொன்டாக்.

ஈராக்கில் அமெரிக்கப் படைவீரர்கள் உல்லாசப் பயணியின் மனோபாவத்தில் எடுத்த பல்லாயிரம் படங்களில் சிலவாகத்தான் இப்படங்கள் இருக்கின்றன என்பதும் இப்படங்களை தங்கள் நினைவுச் சின்னம் போல அமெரிக்கப் படையினர் எடுத்தனர் எனவும் பிபிசி செய்தியாளர் குறிப்பிட்டதும் தற்செயலானதல்ல.

இன்று மேலாதிக்க தகவல் தொழில்நுட்ப ஊடகப் பிம்பங்களுக்கு மாற்றாக எதிர் பிம்பங்களை எடுக்க முடியும் என்பது மட்டுமல்ல வெகுளியாகத் தோற்றமளிக்கும் பிம்பங்களையே கூட எதிர்வியாக்யானத்துக்கு நாம் உட்படுத்த முடியும்.

எதிர் அரசியலுக்கான மிக முக்கியமான ஊடகமாக இன்று இருப்பது வலைத்தளம். வலைத்தளத்தில் அமெரிக்க பிரித்தானிய அரசுத் தகவல் மேலாதிக்கமும் அவர்களது பிம்பங்களும் மட்டுமே பரவியிருக்கவில்லை. கலாச்சாரம் அரசியல் கோட்பாடு என அனைத்துவிதமான எதிர்ப்பு அரசியலின் வடிவமாகவும் இன்று வலைத்தளம் விளங்குகிறது. கணணிப் புரட்சி தோற்றுவித்திருக்கும் சாதகங்களை இன்று எதிர்ப்பு அரசியலாளர்கள் சாதகமாகப் பாவிக்கிறார்கள். இதனது காரணமாகவே சீன அரசாங்கத்திலிருந்து அமெரிக்க பிரித்தானிய அரசாங்கங்கள் வரை வலைத்தளத்தின் மீது கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது மட்டுமல்ல தனிநபரை உளவு புரிவதற்கெனவே உளவு மென்பொருள்களையும் இவர்கள் உருவாக்கி வருகிறார்கள். முதலாளித்துவ எதிர்ப்பு இயக்க நடவடிக்கைகளில் நடவடிக்கையாளர்களைத் திரட்டுவதற்கான மிகப்பெரும் தகவல் பரிவர்த்தனை ஊடகமாகக் கணணி இருக்கிறது.

4.

பொஸ்னிய யுத்தத்தின் போதோ முதல் ஈராக் யுத்தின்போதோ அல்ஜிஜீரா தொலைக் காட்சி என்பது இல்லை. அது மட்டுமல்ல மேற்கத்திய் அமெரிக்கத் தொலைக் காட்சிப் பிம்பங்கள் வெளிப்படுத்துவதற்கு மாற்றான பிம்பங்கள் அல்லது எதிர்பிம்மபங்கள் என்பது இல்லை. நிறநிறங்களாக விரியும் வாணவேடிக்கை என்பதான களியாட்டமாக இரவுக் குண்டுத் தாக்குதல்கள் சிஎன்என்னிலும் பிபிசியிலும் காண்பிக்கப்பட்டதற்கு மாற்றாக கீழே பூமியில் என்ன நிகழ்ந்தது என்பது பற்றிய இரத்தமும் நிணமும் நாறிய கோரம் பிம்பங்களில் வெளியாகவில்லை. நேரடி விளைவுகளின் பிம்பங்கள் காண்பிக்கப்படவில்லை. மாறாக பரிவர்த்தனையான போலி பிம்பங்களே இருந்தன. ஆனால் இன்று பூமியில் என்ன நடக்கிறது என்பது அல்ஜிஜீரா தொலைக் காட்சியின் பிம்ங்களின் வழியும் கலக அரசியல் இயக்கத்தவர்களின் வலைத்தளங்களின் வழியிலும் நிலம் பிளந்து வரும் ஊற்றுப்போல் பூமியிலுள்ள அனைவரையும் எட்டுகிறது.

தொண்ணூறுகளில் மாறிவந்திருக்கிற போரின் தன்மையை நாம் அவதானிக்க வேண்டும். போரை உலகுக்கு அறிவிப்பதில் தகவல் தொழில்நுட்பத்தின் பாத்திரம் எவ்வாறு மாற்றம் பெற்றிருக்கிறது எனவும் பார்க்க வேண்டும். இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் படையினர் எழுதும் கடிதங்கள் கூட தளபதிகளால் தணிக்கை செய்யப்படும். வியட்நாம் காலத்தில் போரை உலகத்திற்கு அறிவித்ததற்கும் முதலாம் ஈராக் யுத்தத்தில் அறிவித்தற்கும் இரண்டாம் ஈராக் போரின் போது உலகிற்கு போர் அறிவிக்கப்படுவதற்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் இருக்கிறது.

உலகத்தினால் அறியப்பட்ட வியட்நாம் போர் என்பது அமெரிக்கா தனது பகாசுர தகவல் ஊடகங்களில் முன்வைத்த வியட்நாம் போர்தான். இன்று தொலைக் காட்சிகளை பிறமொழிகளில் அமெரிக்க அரசு தொடங்குவது மாதிரி அறுபதுகளில் சுதந்திர வானொலிகள் எனும் பெயரில் வியட்நாமுக்கும் கியூபாவுக்கும் என தனி வானொலிகளை அமெரிக்கா துவங்கியது. வியட்நாம் போரை அதிஉக்கிரமாகவும் அளப்பரிய மனித விலை கொடுத்தும் எதிர்கொண்ட வியட்நாமிய மக்களின் பக்கச் சித்திரம் வெளியானதை விடவும் அமெரிக்க மக்களின் வாழ்வில் அமெரிக்கப் படைவீரர்களின் மரணத்தின்வழி அவை ஏற்படுத்திய மாற்றம்தான் அன்று வியட்நாம் போருக்கு எதிரான மனோபாவததை உலகில் ஏற்படுத்தியது. வியட்நாம் போரில் ஈடுபட்ட அமெரிக்கப் படையினர் பிற்பாடு சினிமா இயக்குனர்களாக எழுத்தாளர்களாக ஆனபோது போரின் இன்னொரு முகம் வெளியானது.

பிரான்சிஸ் போர்ட் கொப்போலா ஆலிவர் ஸ்டோன் போன்றவர்களின் திரைப்படங்கள் அமெரிக்கா வியட்நாம் மக்களின் மிது புரிந்த கொடுமைகளைத் திரையில் சொன்னது. அமெரிக்கப் படையினரின் மனங்களில் அந்த மனிதப் பேரழிவு விளைவித்த சிதைவுகள் இவர்களது படங்களில் வெளியானது. அமெரிக்கர்கள் புரிந்த பாலியல் பலாத்காரங்கள் உலகுக்குத் தெரிந்தது. பிளட்டுன் அபோகலிப்ஸ் நவ் டியர் ஹன்டர் டாக்ஸி டிரைவர் ஹெவன் அன்ட எர்த் என இப்படங்கள் அனைத்தும் அமெரிக்கப் படையினரின் அனுபவங்கள் அதிலிருந்து கிளைத்த இலக்கியங்களின் திரைப்பதிவுகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 11 க்கு முன்னாக அமெரிக்க இலக்கியத்தையும் திரைப்படத்தினையும் அமெரிக்க மக்களின் மனசாட்சியையும் வியட்நாம் யுத்தம் போலப் பாதித்த நிகழ்வு பிறிதொன்றி;ல்லை.

முதலாம் ஈராக்கிய யுத்தத்தையடுத்து அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதால் போசாக்கின்மையினாலும் போதிய மருத்துவ வசதிகள் இன்மையினாலும் ஐந்து லட்சம் ஈராக்கியக் குழந்தைகள் மரணமடைந்திருப்பதாக ஜான் பில்ஜரின் விவரணப்படம் சொல்கிறது. போத்ரிலாரைப் போல தொலைக்காட்சியில் அமெரிக்க மேற்கத்தியப் பிம்பங்களைப் பார்த்துவிட்டு கோட்பாடு செய்து கொண்டிருந்தவரல்ல ஜான் பில்ஜர். ஜான்பில்ஜர் ஈராக்குக்கும் இந்தோனேசியாவுக்கும் கிழக்குத் திமோருக்கும் மெக்ஸிக்கோவுக்கும் நேரில் சென்று ஆங்சன்; சூகியையும் சனானோ குசாமோவையும் காமான்டன்ட் மார்க்கோஸையும் நேரில் சந்தித்து மாற்று அரசியலின் பிம்பத்தை எதிர்ப்பு அரசியலின் தொலைக் காட்சிப் பிம்பங்களை முன்வைப்பவர்.

செப்டம்பருக்குப் பிற்பாடான இரண்டாம் ஈராக் யுத்தம் பற்றி அமெரிக்க ஊடகங்களில் சொல்லப்பட்ட விடயங்களும் அல்ஜிஜீரா ஊடகத்தில் சொல்லப்பட்ட விடயங்களும் வித்தியாசமானது. அமெரிக்காவின் மூரக்கத்தனத்தினால் வெல்லப்பட்ட யுத்தமாகவே ஈராக யுத்தம் அமெரிக்க ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டது. ஸதாம் குசைனின் கைது குறியீட்டளவில் வெற்றியாக அமர்;க்களப்படுத்தப்பட்டது. பாக்தாத்தைக் கைப்பற்றுகிறபோது தலைமறைவாகிப்போன ஈராக்கின் குடியரசுப் பாதுகாப்புப் படையினர் ஐம்பதாயிரம் பேர் மறக்கப்பட்டுவிட்டார்கள். ஈராக்கில் இதுவரை அமெரிக்காவை எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள் ஈராக்கிய சமூகத்திற்கு அன்னியர்கள் குற்றவாளிகள் பயங்கரவாதிகள் எனச் சொல்லிக் கொண்டு வந்த அமெரிக்க ஊடகங்களின் பொய்கள் பலூஜா நகரத்தில் பொய்த்துப்போனது. அந்த நகரத்தைத் தம் வசம் கொண்டுவர முடியாமலேயே பின்வாங்கினர் அமெரிக்கப் படையினர். பலூஜா நகர எதிர்ப்பில் கடைசி வரை நின்றவரகள் ஈராக்கியர்கள். சன்னி இனத்தைச் சேர்ந்த ஈராக்கியர்கள் என்பது தற்போது பட்டவர்த்தனமாகயிருக்கிறது. முழு ஈராக்கும் இன்று ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராகக் கிளர்ந்திருக்கிறது.

அபுகாரிப் சிறையில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்களையும் சித்திரவதைகளையும் குறித்துப் பேசுகிறபோது நாகரிகம் சுதந்திரம் விடுதலை ஜனநாயகம் போன்ற சொல்லாடல்கள் இவர்களது அறிக்கைகளில் இடம் பெறுவதில்லை. அபுகாரிப் சித்திரவதைகள் 2003 ஆம் ஆண்டு ஆரமபத்திலிருந்தே நடந்துவருவதாகத் இத்தாலியப் படைத்தலைவர் தெரிவிக்கிறார். நடந்தவை இன்னும் கோரமானவை என அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சரும் அமெரிக்க ஜனாதிபதியும் தெரிவிக்கிறார்கள். இன்னும் பல ஒளி நாடாக்களும் இருக்கின்றன. கொடுரமான புகைப்படங்கள் இருக்கின்றன எனக்கு அதனை வெளியிட விருப்பம் ஆனால் பாதுகாப்புத்துறை வழக்குறைஞர்கள் அதனை வெளியிட வேண்டாம் என வலியுறுத்துகிறார்கள் என்கிறார் டொனால்ட் ரொம்ஸ்பீல்ட்.

காரணம் விநோதமானது : அந்தப் புகைப்படஙகள் வெளியிடப்பட்டால் கைதிகளின் கண்ணியம் அவமானப்படுத்தப்படும் கைதிகள் மனவருத்தமடைவார்கள் என்பதால் அஞ்சுகிறோம் என்கிறார் அவர். மேலதிகாரிகளின் கட்டளைப்படியே தான் கைதிகளை நிர்வாணமாக்கி அவர்களேடு புகைப்படங்களில் சித்திரவதை புரிந்தேன் என்கிறார் சித்திரவதைப் புகைப்படங்களில் இடம் பெறும் அமெரிக்க படைத்துறையைச் சேர்ந்த லிண்டி லண்டன். சித்திரவதைகளுக்குக் காரணம் சரியான திட்டவட்டமான தலைமை இன்மையே என்கிறார் விசாரண அதிகாரி அந்தோனிய தகூபா.

அபுகாரிப் சிறை பற்றிய அறிக்கை 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதமே முடிக்கப்பட்டும் ஏப்ரல் மத்திவரை தான் படிக்கவில்லை என்கிறார் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர். இதனடிப்படையில் இவர்கள் அமைக்கும் விசாரணைக் கமிசன்களின் லட்சணத்தை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

சமகாலத்தில் அமெரிக்க உளவுத்துறையான சிஐஏவின் அதிகாரிகள் ஈராக் சித்திரவதைப் புகைப்படங்கள் வெளியானபின் பீதியில் ஆழ்த்தப்பட்டிருப்பதாகச் அமெரிக்கச் செய்திகள் தெரிவித்திருக்கின்றன. சித்திரவதை என்பது அமெரிக்க சிறை அமைப்பின் ஒரு அங்கம் எனவும் கைதியைப் பட்டினி போட்டு உடலை நலியச் செய்து உயிர்பீதியூட்டி அவர்களை விசாரிப்பது அமெரிக்க உளவுத்துறையின் விசாரணை முறை எனவும் செய்திகள் வந்திருக்கினறன. பயங்கரவாதிகள் என கைது செய்யப்பட்டிருக்கும் பெரும்பாலானவர்கள் அமெரிக்க நிலப்பரப்பில் வைக்கப்படாமல் எங்கேயிருக்கிறார்கள் எனச் சொல்லப்படாமல் விசாரிப்பதுதான் அமெரிக்கர்களின் முறையெனவும் தற்போதைய ஈராக் சித்திரவதைப் புகைப்படங்கள் வெளியானதையடுத்துத் தங்கள் மீதான கேள்விகளும் எழுப்பப்படுமானால் தங்களில் பெரும்பாலுமானோர் மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுக்களில் சிக்குப்படுவோம் என சிஐஏவினர் அஞ்சுவதாக பேர் ( கயசை ) எனும் அமெரிக்க மாற்று ஊடக அமைப்பின் அறிக்கை தெரிவித்திருக்கிறது.

5.

2004 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி லண்டன் டெ;யிலி மிரர் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் பீட்டர் மோர்கள் அப்பத்திரிக்கையிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார். பிரித்தானியப் படையினருக்கு அவப்பெயரை உருவாக்கியதற்காகவும் இட்டுக்கட்டிய புகைப்படங்களை வெளியிட்டதற்காகவும் டெய்லி மிரர் பத்திரிக்கையின் முதலீட்டாளர்கள் பிரித்தானியாவின் குயின் லங்காசயர் படைப்பிரிவினரிடம் மன்னிப்புக்; கோரியிருக்கிறார்கள். பீட்டர் மோர்கனின் ராஜினாமாவைச் சமர்ப்பிக்கச் சொல்லி முதலீட்டாளர்கள் நிர்ப்பந்தித்தபோது மோர்கன் அதனை மறுத்து பத்திரிக்கை அலுவலகத்தை விட்டு வெளியேறியிருக்கிறார். இரு மெய்க்காவலர்கள் அவர் கட்டிடத்த்pலிருந்து வெள்pயேறும் வரையிலும் அவரோடு வாசல் வரை வந்திருக்கிறார்கள்.

தான் தவறு செய்யவில்லையெனவும் கிருமிகள்; நிறைந்த பாத்திரமொன்றினை மட்டுமே தான் கவிழ்த்திருப்பதாகுவும் கிருமிகள் எங்கெங்கும் இருக்கிறதெனவும் மோர்கன்; தெரிவித்திருக்கிறார். உண்மையை வெளியிட்டதற்காக மோர்கள்; வெளியேற்றப்பட்டிருக்கிறார் என அவரின் உதவி ஆசிரியர்கள் தெவித்திருக்கிறார்கள். பீட்டர் மோர்கன் மன்னித்துவிடுங்கள் என ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் பிரச்சினை தீரந்திருக்கும் என வலதுசாரிப் பத்திரிக்கையான ஸன் பத்தரிக்கை ஆசிரியர் கருத்துத் தெரிவித்திருக்கிhர். பிரச்சினை தற்காலிகமாகத் தீரந்துவிட்டது போலத் தோனறினாலும் நடந்து முடிந்த சம்பவங்களைப் பார்க்கிறபோது இது தொடரும் விவாதம் என்பதில் எவருக்கும் சந்தேகமிருக்கப் போவதில்லை.

டெய்லி மிரர் பத்திரிக்கையின் புகைப்படங்கள் பிரித்தானியப் படை முகாமினருகில் பெட்போர்ட் நகரின் அருகில் நகருக்கு வெளியில் ஒரு ராணுவ வாகனத்தில் வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது எனவும் அவை ஈராக்கிலுள்ள பஸ்ராவில் எடுக்கப்பட்டதல்ல எனவும் தாம் கண்டுபிடித்திருப்பதாக பிரித்தானியப் படைத்துறைக் காவலர்கள் தெரிவித்திருக்கிறார்கள். புகைப்படத்திலுள்ள படைத்துறை வாகனத்தில் காணப்பட்ட கீறல்களையும் கண்டுபிடிக்கப்பட்ட வாகனத்தில் காணப்பட்ட கீறல்களையும் ஒப்பிட்டு தாம் இம்முடிவுக்கு வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த ஆதாரத்தை மோர்கனோ அல்லது கார்டியன் போன்ற பத்திரிக்கைகளோ மறுக்கவில்லை. ஆனாலும் மோர்கன் பிடிவாதமாகத் தான் உண்மையைத் தான் சொன்னேன் எனச் சொல்வதற்கும் அவரது சக ஊழியர்கள் அவர் உண்மையைச் சொன்னதற்காக வெளியேற்றப்பட்டிருக்கிறார் எனக் குறிப்பிடுவதற்கும் என்னதான் காரணம்?

இதற்கான விடையைக் காண்பது பிரித்தானிய அரசியலைக் கவனித்து வந்திருப்பவர்களுக்கு மிகவும் சாதாரணம். அமெரிக்கப் படையினரின் மனித உரிமை மீறல்களை அடுத்து ஒரு பொது விவாதம் அமெரிக்காவிலும் மேற்கிலும் எழுந்தது போல பிரித்தானியப் படையினரின் மனித உரிமை மீறல்கள் குறித்த விவாதமொன்றைத் தூண்டுவதுதான் மோர்கனின் நோக்கம். டெய்லி; மிரர் பத்திரிக்கையில் பிரித்தானியப் படையினரின் சித்திரவதை தொடர்பான புகைப் படங்கள் – அது திட்டமிட்டு இட்டுக்கட்டப் பட்டதே ஆயினும் – வெளியான பின்பே பிரித்தானியப் படையினரின் மனித உரிமை மீறல்கள் குறித்த பல விடயங்கள் சமூகத்தின் முன்னுக்கு வந்தன.

2003 ஆம் ஆண்டு இறுதியிலேயே பிரித்தானிய அரசினிடம் கையளிக்கப்பட்ட அம்னஸ்டி இன்டர்நேசனல் செஞ்சிலுவைச்சங்கம் போன்றவற்றின் அறிக்கைகள் தொடர்பான விவாதங்களும் அதனைத் தொடர்ந்து தான் அவ்வகையிலான அறிக்கைகளைப் படிக்கவில்லை எனும் பாதுகாப்பு அமைச்சரின்; பதிலும் வெளியாகின. சமவேளையில் பர்மிங்ஹாமில் இயங்கும் பெதுமக்களின் நலன்நாடும்; வழக்குரைஞர்கள் எம் அமைப்பினர் அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் கொன்றதற்காகப் பிரித்தானியப் படையினர் மீது பிரித்தானிய உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அப்பாவிகள் கொல்லப்பட்டதற்காக பிரித்தானியப்; படையினர் சம்ப்ந்தப்பட்டவர்களுக்கு சிறு தொகையினை அவ்வப்போது அளித்திருப்பதனை ஒப்புக்கொண்டதனயைடுத்து அம்மக்கள் கொல்லப்பட்டதற்குப் பொறப்பேற்று பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சகம் அவர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டுமென வழக்கறிஞர்கள் கோரியிருக்கிறார்கள்.

இந்த வ்pவாதங்கள் அனைத்துமே மோர்கனது டெய்லி மிரர் பத்திரிக்கைப் புகைப்படங்கள் பிரசுரமானதைத் தொடர்ந்தே பிரித்தனியாவில்; இடம் பெற்றன என்பதனை எவரும் மறுதளித்துவிடமுடியாது. மோர்கன் இட்டுக்கட்டி ‘கிருமிகளின் ஒரு பாத்திரத்தைக் கவிழ்த்தபோது’ பிரித்தானிய அரசின் ‘பற்பல கிருமிப் பாத்திரங்கள் கவிழ்க்கப்பட்டதனை’ ஒருவர் சாதாரணமாகவே அறிந்து கொள்ள முடியும்.

மோர்கன் முன்னதாக பிரித்தானியாவைக் குலுக்கிய இருபது லட்சம் மக்கள் பங்கு பற்றிய லண்டன் யுத்த எதிர்ப்பு ஊர்வலத்தினைத் தனது பத்திரி;க்கையின் சார்பாக ஸ்பான்சர் செய்த யுத்த எதிர்ப்புப் பத்திரி;க்கையாளர் என்பது இங்கு குறிப்பிடத்தகக்து. அவரைப் பொறுத்து அவரது நடவடிக்கை என்பது அவரது யுத்த எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு அங்கம். அவர் இந்தப் புகைப்படங்களை வெளிடுவதற்கு முன்பாக மூன்று நாட்கள் தனது அறையை விட்டு வெளியே வராது நீண்ட யோசனையின் பின்பே புகைப்படங்களை வெளியிட முடிவு செய்தார் எனத் தெரிவிக்கிறார் அவரது உதவி ஆசிரியர். அவரற்ற லண்டன் பத்திரிக்கையுலகு முன்னைப் போல் இருக்கப் போவதில்லை என அவரது வெளியேற்றம் குறித்து லண்டன் பத்திரி;ககைகள் கருத்துத் தெரிவித்திருக்கின்றன.

டெய்லி மிரர் பத்திரிக்கையின் நிர்வாகிகளில் மூன்றில் ஒரு பகுதியாக இருக்கிற அமெரிக்கர்களே அப்பத்திரி;க்கையின் இரண்டில் மூன்று பகுதி முதலீட்டைக் கொண்டிருப்பவர்கள் எனவும் அவர்களே பீட்டர் மோர்கனை வெளியேற்றியிருக்கிறார்கள் எனவும் லணடன் கார்டியன் பத்திரி;க்கை செய்தி வெளியிட்டிருக்கிறது.

யுத்தம் விளைவிக்கும் கோரம்; ஓரு சில பிம்பங்களின் உண்மை பொய்யைத் தீர்மானிப்பதால் முற்றுப்பெற்றுவிடும் விசயம் இல்லை என்பதையே மோர்கனது நிலைபாடு தெளிவுபடுத்துகிறது. மேலாகத் திட்டவட்டமான ஆதாரங்களைக் கொண்டு போருக்குச் செல்வதாக பாரிய அழிவு ஆயுதங்கள் குறித்து அறிவித்த அரசுத் தலைவர்கள் அது முற்றிலும் பொய் என அவர்களது உளவுத்துறைகளே அறிவித்த பின்னரும் உண்மை விளம்பிகளாக இருந்து கொண்டு ஈராக்கிய மக்களைக் கொன்றொழித்துவரும் ச10ழலில் மோர்கனது நிலைபாட்டை வெறுமனே கறுப்பு வெள்ளையாக மட்டுமே கொண்டு நாம் புரிந்;து கொள்ள முடியாது.

முன்பாக பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் விஞ்ஞானியன டேவிட் கெல்லியின்; தற்கொலையை ஒட்டி நிகழ்ந்த விவாதத்தையும் இதனோடு பொறுத்திப் பார்ப்பது பொறுத்தமாக இருக்கும். பிரித்தானிய அரசு மட்டத்திலிருந்தவர்கள் பிரித்தானிய உளவுத்துறை அதிகாரிகளை நிர்ப்பந்தப்படுத்தியதாகவும் சதாம் குசைன் 45 நிமிடத்தில் பாரிய அழிவு ஆயுதங்களால் பிரித்தானியாவைத் தாக்கும் நிலையில் இருக்கிறார் எனச் சொல்லுமாறு உளவுத் துறையினரைத் தூண்டினார்கள் எனும் செய்தியொன்றினை டேவிட் கெல்லி தெரிவித்தார் என பிபிசியின் செய்தியாளர் ஜில்லியன் அறிவித்திருந்தார்.

இந்த விவாதத்pன் ஆதாரமான பிரச்சினை என்ன?

பிரித்தானியாவோ அமெரிக்காவோ சொன்னபடி பாரிய அழிவு ஆயுதங்கள் ஈராக்கில் இல்லை. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் சோதனiயாளர் ஹான்ஸ் பிலிக்சும்; இதனைத் தெளிவு படுத்தியிருக்கிறார். அமெரிக்க பிரித்தானிய உளவுத் துறைகள் ஈராக் பாரிய அணுஆயுதங்கள் கொண்டிருக்கிறது எனத் திட்டவிட்டமாகச் சொல்லவில்லை எனறும் தெரிவித்திருக்கிறது. தவறான அரசியல் உள்நோக்கத்தின் அடிப்படையிலேயே இரு அரசுகளும் யுத்தத்திற்குச் சென்றிருக்கின்றன எனும் விவாதத்தின் பகுதியாகவே இந்தப் பிரச்சினையும் பிரித்தானியாவில் எழுந்தது.

பத்திரி;க்கைகளில்; வெளியான ஆதாரங்கள் அனைத்தையும் வைத்துப் பார்க்கிறபோது பிரித்தானியாவும் அமெரிக்காவும் தவறான இட்டுக்கட்டிய ஆதாரங்களின் அடிப்படையிலேயே யத்தத்திற்குச் சென்றன என்பது தற்போது உலகுக்குத் தெளிவுபட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினை தொடர்பாக அரசால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு பாரிய அணு ஆயுதங்கள் இருக்கிறதா இல்லையா எனும் ஆதாரத்தை விசாரணை செய்வதற்கு மாறாக இந்தப் பிரச்சினையில் உளவுத்துறையை அரசுப் பதவியில் உள்ளவர்கள் தூண்டினார்களா இல்லையா என மட்டுமே விசாரணை செய்தது. பிரதமருக்கு நேரடியாக இதில் தொடர்பு இல்லையென அறிக்கை கூறியுள்ளது. தற்போது இரு அரசுகளும் மற்றொரு விசாரணையை யோசித்துக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வருகிறது.

எவ்வாறு உளவுத்துறை தவறான முடிவுகளுக்கு வந்தது என்பதுதான் அந்த விசாரணையாக இருக்கப் போகிறது. அமெரிக்க ஐரோப்பிய அரசியலின் வேடிக்கை இது. தவறான தகவல்களின் அடிப்படையில் இரு வல்லரசுகள் ஆயுதங்கள் கொண்டு பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்திருக்கிறது. அந்தத் தவறு எப்படி நேர்ந்தது என இப்போது இவர்கள் நிஜக் காரணங்களைக் கண்டுபிடிக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.

நிகழ்வு நிஜம் புனைவு உண்மை பொய; ஆதாரம் போலி தொடர்பான விவாதங்கள் இப்படித்தான் கட்டப்பெறுகிறது. இதனடிப்படையில்தான் மேலாதிக்க அரசுகளால் தொலைக்காட்சிpப் பிம்பங்களும்; கட்டப்படுகிறது. புகைப்பட பிம்பங்களும் கட்டப்படுகிறது. இந்தப் போலிகளுக்கு எதிராகச் சில சமயங்களில் போலிகளை இட்டுக்கட்டி முன்வைப்பதன் மூலமே ஆதாரங்கள் தொடர்பான விவாதங்களையும் எழுப்ப முடிகிறது. மோர்கன் வெளியிட்ட பிம்பங்களும் அதனது தொடரச்சியாக வெளியான அம்னஸ்டி இன்டர் நேசனல் அறிக்கை வெஞ்சிலுவைச் சங்க அறிக்கை பர்மிங்ஹாம் வழக்குரைஞர்களின் பாதுகாப்பு அமைச்சகம் மீதான வழக்கு போன்றவை இதனையே தெளிவு படுத்துகின்றன.

வரலாறு போத்ரிலார்; கருதிக்கொள்வது போல மாயங்கள் கொண்டதல்ல அது இரத்தமும் சதையுமாக காலத்திலும் வெளியிலும் நிகழ்வதாகும். ஈராக்கிய மக்கள் அனுபவித்துவரும் துன்பங்கள் வெறுமனே அலையும் பிம்பங்களல்ல என்பதனை அதே பிம்பங்கள் தற்போது உலகுக்கு;ப் பட்டவர்த்தனமாக்கியிருக்கிறது.

6.

பிம்பத்தினதும் தொலைக்காட்சி ஊடகங்களினதும் டிஜிடல் கேமராக்களினதும் வலிமையை போத்ரிலார் மட்டுமல்ல அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரொமஸ்பீல்ட்டும் தெளிவாக உணர்ந்திருக்கிறார். பிம்ப உலகில் எதிர்ப்பு நடவடிக்கை அர்த்தமில்லை என போத்ரிலார் தெரிவிக்க இன்றைய டிஜிட்டல் கேமரா யுகத்தில் எதிர்ப்பு ஊற்றுக்களை அடைப்பது தமக்குச் சாத்தியமில்லாமல் இருக்கிறது ரொம்ஸ் பீலட் தெரிவிக்கிறார்.

ரொம்ஸ் பீல்ட் சொல்கிறார் : ‘சமாதான கால நெருக்கடிகளில் நாம் செய்ல்படுகிறோம். சர்வதேசச் சட்டங்களுக்கு உட்பட்டுச் செயல்பட வேண்டியவர்களாக இருக்கிறோம். தகவல் தொழில்நுட்ப யுகத்தில் யுத்ததருணத்தில் நாம் செயல்பட வேண்டியிருக்கிறது. இங்கே சிலர் டிஜிட்டல் கேமராக்களோடு அங்குமிங்கும் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இப்படி நம்பத்தகாத அளவிலான புகைப்படங்களை எடுக்கிறார்கள். எமக்கு அதிர்ச்சியளிக்கும்படி அவர்கள் அதனைப் பிறருக்கு அனுப்பவும் செய்கிறார்கள். அமெரிக்கச் சட்டத்திற்கு விரோதமாக ஊடகங்களுக்கும் அவர்கள் அனுப்பி விடுகிறார்கள்’ என வருத்தப்படுகிறார் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரொம்ஸ்பீல்ட்.

மனித உரிமை மீறல்கள் செய்தாலும் கண்டுபிடிக்க முடியாதபடியிலான மாற்று விவரங்களைச் சேகரிக்க முடியாதபடியிலான காலமொன்ற இருந்தது. பிரெஞ்சு சினிமா மேதை கோடார்ட் ‘காமெரா காகிதமும் எழுதுகோலும் போலச் சுலபமாகக் கிடைக்கிற வரை தான் படமெடுக்கப்போவதில்லை’ என அறுபதுகளில் பாரிசின் நிழலடர்ந்த சாலைகளில் திரிந்தார் என்பதை நாம் நினைத்துப் பாரக்கிறபோது தகவல் ஊடகங்கள் எதிர்ப்பு அரசியலுக்கு அப்போது கிடைக்கவில்லை என்பதனை நாம் புரிந்து கொள்ளலாம்.

வியட்நாம் யுத்தத்தின் மறுபக்கத்தை நாம் பல பத்தாண்டுகளின் பின் அமெரிக்கத் திரைப்படங்களில் தரிசித்தோம். பொஸ்னிய யுத்தத்தினையும் முதலாம் ஈராக் யுத்தத்தினையும் கூட பெரும்பாலானவர்கள் பிரஞ்சுக் கோட்பாட்டாளர் பெலிக்ஸ் கித்தாரி போல ‘செய்வதறியாது பேச்சற்றுத்தான் பார்த்துக் கொண்டிருந்தோம்;’. ஆனால் டிஜிட்டல் கேமராக்கள் இன்று எதிர்ப்பியக்கம் சார்ந்தவர்களுக்கு மலிவாகக் கிடைககின்றன. மேற்கின் தகவல் ஊடக மேலாதிக்கத்திற்கெதிரான மேற்கல்லாத ஊடகங்கள் இன்று வளர்ச்சி பெற்றிருக்கின்றன. எதிர்ப்பு அரசியலில் உலக விரிவு வலையும் தனிமனிதர்களின் கணணிகளும் மிகப் பெரிய பங்காற்றுகின்றன.

அரபு உலகத்தின் வெகுஜன அப்பிராங்களை உருவாக்கும் தொலைக்காட்சியாகத் தற்போது அல்ஜிஜீரா தொலைக் காட்சி இருக்கிறது. அமெரிக்க மேற்கத்திய ஊடகங்கள் முன்வைக்கும் பிம்பங்களுக்கு மாற்றான பிம்பங்களை இன்று உலகின முன்பு அரபுத் தொலைக்காட்சிகளும் சிறுபான்மையினச் சமூகங்களின் தொலைக்காட்சிகளும் முன்வைக்கின்றன. எதிர் அரசியலுக்கான மிக முக்கியமான ஊடகமாக இன்று இருப்பது வலைத்தளம். வலைத்தளத்தில் அமெரிக்க பிரித்தானிய அரசுத் தகவல் மேலாதிக்கமும் அவர்களது பிம்பங்களும் மட்டுமே பரவியிருக்கவில்லை. கலாச்சாரம் அரசியல் கோட்பாடு என அனைத்துவிதமான எதிர்ப்பு அரசியலின் வடிவமாகவும் இன்று வலைத்தளம் விளங்குகிறது. கணணிப் புரட்சி தோற்றுவித்திருக்கும் சாதகங்களை இன்று எதிர்ப்பு அரசியலாளர்கள் சாதகமாகப் பாவிக்கிறார்கள்.

தன்னுடைய நூல்களை இருபது ஆண்டுகளாக ஜப்பானிய மொழியில் வெளியிட்டுவந்த ஒரு ஜப்பானியரிடம் ஏன் ஜப்பானியர்களிடமிருந்து என் கருத்துக்கள் தொடர்பாக எதுவும் செய்திகள் வருவதில்லை எனக் கேட்டிருக்கிறார் போத்ரிலார்.

ஜப்பானியர் சிரித்துக்கொண்டே பதில் சொல்லியிருக்கிறார் : ‘இதற்கான பதில் வெகு சாதாரணம். தற்போது நீஙகள் சொன்ன நகல்போலிகளின் உலகம் தொடர்பான கருத்துக்கள் ஜப்பானில் நடைமறைக்கு வந்துவிட்டது. நீங்கள் சொன்னது மெத்தச் சரி. உலகம் நீஙகள் சொன்னது போலாகி விட்டது. ஆகவே தற்போது உங்களின் தேவை எஙகளுக்க அவசியமில்லை. நீங்கள் யதாரத்தத்தில் கலந்துவிட்டீர்கள். ஹைபர் ரியலிட்டியில் நடைமுறையாகிவிட்டீர்கள். அந்தச் செயல்போக்கு முடிந்துவிட்டது. ஆகவே நீங்கள் மறைந்து விட்டீர்கள். கோட்பாட்டளவில் நீங்கள் இப்போது அவசியமில்லை. உங்களது கோட்பாட்டை எவரும் இப்போது வாதித்து நிலைநிறுத்த வேண்டிய அவசியமும் இல்லை’ என்றிருக்கிறார் போத்ரிலாரின் ஜப்பானிய மொழிபெயர்ப்பாளர்.

போத்ரிலாரின் தொடர்ந்த எதிர்விணை இவ்வாறு அமைகிறது : ‘இப்படித்தான் கற்பனைகள் நிஜமாகிவிடுகிறது. மிகத் தெளிவாக அனைத்து வகையிலான கற்பனைப் பரிமாணங்களும் பயனற்றவை’. 1996 ஆம் ஆண்டு தன் கருத்துக்கள் ஜப்பானில் பயனற்றுப் போய்விட்டதாக ஒப்புக்கொண்ட போத்ரிலார் 2002 ஆம் ஆண்டு செப்டம்பரிலும் அதன் பயன்குறித்த நம்பிக்கையோடுதான் எழுதிக் கொண்டிருந்தார்.

போத்ரிலாரின் அவதானங்களை முதலாம் இரண்டாம் ஈராக் போர்களில் தமது உறவுகளைப் பறிகொடுத்த மனிதர்கள் தமது வீடுகள் உறவுகளை இழந்து போனவர்கள் கொசவாவில் வாழும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்ட சிறுமியர்கள் விரட்டப்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேலான ஜிப்ஸி மக்கள் நாடு நாடக அலைந்து திரியும் ஈராக்கிய அகதிகள் மரணமுற்ற ஈராக்கியக் குழந்தைகளுக்காக வாதிடும் பர்மிங்ஹாமிலுள்ள பொதுநல வழக்குரைஞர்கள் போன்றோர் ஒப்புக் கொள்ளப் போவதில்லை.

போத்ரிலாரின் அவதானத்தை செஞ்சிலுவைச் சங்க அறிக்கையோ அம்னஸ்டி இன்டர்நேசனலின் அறிக்கையோ அல்ஜிஜீராவோ நியூயார்க்கர் பத்திரிக்கையோ ஒப்புக்கொள்ளப்போவதில்லை.

பேரழிவின் விளைவுகளைப் போல மேற்கின் மீதான வெறுப்பாக மத்தியக் கிழக்கு மக்களிடையில் வன்முறை தோன்றியிருக்கிறது. போத்ரிலாருக்கு இன்று அவசியமில்லை. செய்மோர் ஹார்ஸ் போன்று அமெரிக்க ஐரோப்பிய அரசுகளின் தகவல் பொய்களைத் தோலுரிக்கிற ஊடகவியலாளர்களே இன்று அவசியம்.

மத்தியக்கிழக்கு அரபு மக்களின் பிரச்சினைகள் அனைத்தினதும் ஆதாரமாகவும் அரபு மக்களது கோபத்தின் கொதிகளனாகவும் இருக்கிற பாலஸ்தீனப் பிரச்சினை தீரக்கப்படாத வரையிலும் இந்த மக்களின எதிர்ப்புக்களும் அரத்தமற்றுப் போகப்போவதில்லை.

முதல் வலைத்தளப் புரடசி என ஜபடிஸ்டாக்களின் புரட்சியைச் சொல்வார்கள். மெக்ஸிக்கப் புரட்சியாளன் கமாண்டன்ட் மார்க்கோஸ் தனது சியாபஸ் பூர்வகுடி மக்களுக்கான விடுதலைப் பிரகடனத்தை வலைத்தளத்தில்தான் முதலாக வெளியிட்டார். அடுத்த நொடி அது எதிர்ப்பு அரசியல் இயக்கத்தின் பகுதியாகி உலகெங்கும் பரவியது. மெக்ஸிக்கக் கவியான ஆக்டேவியா பாஸ் கை டெபோர்டை மேற்கோள்காட்டி ஜபடிஸ்டாக்களின் எழுச்சியை மெக்ஸிக்கோவில் தகவல் ஊடக பிம்பத்தின் வருகை என எழுதுகிறார். மார்க்கோஸின் பிம்பம் வெறுமனே அலையும் பிம்பமல்ல கலக பிம்பம் எனவும் எழுதுகிறார் அவர்.

நெருதாவின் கவிதையும் புரட்சிகரச் சொல்லணிகளும் நாடகீயத் தன்மையும் மொசார்ட்டின் இசையும் பிணைந்ததாக மெக்ஸிக்க வெளியில் எழுந்த கலக பிம்பம்தான் கமான்டன்ட மார்க்கோஸ். பின்நவீPனத்துவ யுகத்தின் நகல்போலிகளாக ஈராக்கியக் கைதிகளின் பிம்பம் இருக்கிறது என்பதால் அல்ல மாறாக ஈராக்கிய மக்களின் கூட்டு நினைவுகளுக்கும் அவர்களது துயர்களுக்கும் சாடசியமாக கைதிகளின் பிம்பங்கள் இருப்பதாலேயே அவர்களது பிம்பங்கள் முக்கியத்துவமடைகின்றன.

குருதி தெறிக்கும் மௌன எதிரப்பை வெளியிடும் ஈராக்கிய சிறைக் கைதிகளின் பிம்பங்கள் ஒரு பேரழிவின் விளைவான எதிர்பிம்பங்கள்தான்.

ஆதாரங்கள் :

1.The Spirit of Terrorism by Jean baudrillard.  Verso.  11 September 2002. United Kingdom. 
2.Vivisecting the 90s: An Interview with Jean Baudrillard. Semiotic Inquiry. Volume 16 No. 1 : 1996.United States.  
3.This is the Fourth World War: The Der Spiegel Interview With Jean Baudrillard.Journal of Baudrilalrd Studies .Volume 1 Number 1. January 2004. United States. 
4. Debord and the postmodern Turn New Stages of the Spectacle.By Steven Best and Douglas Kellner. Douglas Kellner Wesite. United States. 
5.US [Powerless to halt Iraq net images by Robert plummer.BBC News Online.2004/05/08 10:33:54 GMT. United Kingdom.
6.US powerless to halt Iraq net images byRobert Plummer.BBC News Online.2004/05/08 10:33:54 GMT. United Kingdom.
7. Stunned Staff mourn loss of editor who ‘told the truth’ about Iraqi abuse. The Guardian. 15.05.2004. United Kingdom
8. Mirror(UK). Sun(UK) Washington Post( USA) Newyorker Magazine( USA) CBS Teevision(USA) and BBC News Online websites about Abu Gharib Priosion torture articles. websites and Print Copiesof April-May 2004.  

Exit mobile version