Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ்ப்பாண மேலாதிக்க சமூகம்: புறக்கணிக்கப்படும் முன்நாள் போராளிகள்

புலம்பெயர் நாடுகளின் பணத்தை பிரதானவருவாயாகக் கொண்ட உற்பத்தித் திறனற்ற யாழ் வேளாள மேலாதிக்க சமூகம் முன்னை நாள் போராளிகளை மீது கீழ்த்தரமான புறக்கணிப்பு யுத்ததை நடத்திவருவதாகத் தெரியவருகிறது.

கொலைசெய்யப்பட்ட போராளிகள் தவிர்ந்த ஏனையோரைதெருவோரங்களில் அனாதரவாகத் கைவிட்ட இலங்கை அரச பாசிசம் அவர்களுக்கு உதவிபுரியும் நிறுவனங்கள் மீதும் அழுத்தங்களைப் பிரயோகித்துவருகிறது.

தவிர சுய நலம்மிக்க உற்பத்தித் திறனற்ற யாழ்ப்பாண சமூகம் இவர்களை சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட அங்கமாகவே நடத்திவருகிறது.

அதிலும் குறிப்பாக இளம் வயதினரும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தோரும் சமூகத்தின் புறக்கணிப்பிற்கும் உளவியல் பாதிப்பிற்கும் உள்ளாவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வேலை வாய்ப்பு, பாடசாலை அனுமதி போன்ற அனைத்து அடிப்படைத் துறைகளிலும் புறக்கணிக்கப்படும் இவர்கள் குறித்து அரசியல்வாதிகளோ, புலம் பெயர் பிரமுகர்களோ துயர்கொள்வதில்லை. அடிமைகள் போன்றும் பாலியல் நோக்கங்களுக்காகவும் இவர்கள் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகின்றனர்.

இவர்களுக்கான சமூக அங்கீகாரம் கோரி பிரச்சாரங்களும் போராட்டங்களும் நடத்தப்பட வேண்டும் என சமூக அக்கறையுள்ளவர்கள் மத்தியில் பொதுவான கருத்து நிலவுகிறது.

Exit mobile version