
ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அனுப்பிய குழுவினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு.
யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கேப்பாபிலவு கிராம மக்கள் இன்னமும் மீள்குடியமர அனுமதிப்படவில்லை. அக்கிராமம் உள்ளிட்ட 2500 ஏக்கர் நிலத்தில் நிரந்தரமாக இராணுவ தலைiமையகம் ஒன்றினை அமைத்துள்ளதுடன், இக் கிராம மக்களை அவர்களது விருப்பங்களுக்கு மாறாக வேறு இடங்களில் குடியேற்றுவதற்கும் அரச இயந்திரம் வலுக்கட்டாயப்படுத்தி வருவதாகவும் அம்மக்கள் எம்மிடம் தெரிவித்துள்ளனர்.
அந்தக் கிராமத்திற்குச் சொந்தமான மக்கள் வவுனியா செட்டிகுளத்திலுள்ள தடுப்பு முகாமில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி அடிமைகள் போல் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்குச் சொந்தமான இந்தப்பகுதிகளை நிரந்தரமாக ஆக்கிரமித்து இராணுவமயமாக்குவதற்கும், சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்குமான முயற்சிகளில் சிறீலங்கா அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அரசின் இச் செயற்பாடுகளானது தமிழ்த் தேசிய இருப்பை இல்லாது அழிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் பரவிப்பாஞ்சான் பகுதி மக்களுடன் அண்மைக்காலமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி மேற்கொண்டுவந்த கலந்துரையாடல்களின் அடிப்படையில் அந்தமக்களது சொந்த வீடுகளில் மீள்குடியமர அனுமதிக்க வேண்டுமெனக்கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணி வழக்கொன்றினைத் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றது.
இந்த மக்கள் உடனடியாக மீள்குடியமர்த்தப்பட சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் குழுவினர் சிறீலங்காவிற்கு விஐயம் செய்துள்ள இச்சமயத்தில் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து இழைக்கப்பட்டுவரும் அநீதிகள் தொடர்பாக அவர்களது கவனத்தை ஈர்க்கும் பொருட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு பிரதேச மக்களை உடனடியாக மீள்குடியமர்த்தக் கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21-09-2012) அன்று முல்லைத்தீவு அரசாங்க அதிபர் பணிமனை முன்பாக நண்பகல் 12.00 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடாத்தப்படவுள்ளது. இப்பபோராட்டதில் சகல அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு உரிமையுடன் அழைப்பு விடுக்கின்றோம்.
இடம்:- முல்லைத்தீவு அரசாங்க அதிபர் பணிமனை முன்பாக
நேரம்:- நண்பகல் 12.00 மணி
திகதி:- 21-09-2012
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செ.கNஐந்திரன்
தலைவர் பொதுச் செயலாளர்