
இலங்கையின் வட பகுதிகளில் புலம் பெயர் நாடுகளைச் சார்ந்தோரதும், இந்திய, இலங்கை முதலீட்டாளர்களின் அதிக விலையுயர்ந்த உணவு விடுதிகளும் உல்லாசப் பயண விடுதிகளையும் தவிர புனர் வாழ்வு, மீள் கட்டமைப்பு, அபிவிருத்தி குறித்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
நல்லூர் பின் வீதியிலுள்ள மங்கயற்கரசி பாடசாலையில் தங்கியிருக்கும் அகதிகளுக்கு கடந்த பல மாதங்களாக ஒரு நேர உணவே வழங்கப்படுவதாகவும், பலர் தொடர்ச்சியான கண்காணிப்பிற்கு உட்படுத்தபடுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர்கள் மீதான திட்டமிட்ட கொடுமைகளுக்கு எதிரான பொது அபிப்பிராயம் புலம் பெயர் தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் இலங்கை அரசிற்கு எதிரான அழுத்தங்களை வழங்குவதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்பதையும் இலங்கையிலிருந்து பலரும் எதிர்பார்ப்பதாகத் தெரியவருகிறது.