Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாகாணசபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக களமிறங்குகின்றார் விக்னேஸ்வரன்!

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பாகப் போட்டியிடவுள்ள அக்கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜாவுக்கு எதிராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போட்டியிடவுள்ளதாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் செயலாளரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

ஆனால், இது பற்றி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எந்தக் கருத்தினையும் வெளியிடவில்லை.

இருந்தபோதிலும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் ஊடகங்களுக்கு வாரம் ஒரு கேள்வி பதிலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் பல அதிருப்திகளை வெளியிட்டு வருகின்றார்.

அதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, கொள்கைக்கும், யதார்த்த நிலைக்கும் முற்றிலும் மாறுபட்டுச் செயலாற்றுவதாகக் குற்றஞ்சாட்டிய வடமாகாண முதலமைச்சர், சி.விவிக்னேஸ்வரன், தேர்தல் காலங்களில் தமது கொள்கைகளை மக்களுக்கு தெரிவிக்கும் இவர்கள் தேர்தல் முடிந்த பின்பு , மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு பணக் கையாடல்களை மாத்திரம் தாமே மேற்கொண்டுவருகின்றனர் எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

இது தவிர, உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள புளொட் மற்றும் ரெலோ அமைப்புக்களும் எதிர்வரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடப்போவதில்லையென  அறிவித்துள்ளன.

Exit mobile version