Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மலையகம் தேசியம் சர்வதேசம்- முன்னுரையாக சிலக் குறிப்புகள் : கலாநிதி. ந. இரவீந்திரன்

அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு, கொடிய அடக்குமுறைச் சட்டங்களின் கீழ் சுரண்டப்பட்டவர்கள் மலையக மக்கள். வேறு எவரிலும் தங்கியில்லாமல் தமக்கான வாழ்வாதாரங்களுக்கும் உரிமைகளுக்கும் தாமே போராடி ஒவ்வொன்றையும் வென்றெடுத்தவர்கள். அவர்களிடமிருந்து வெளிப்பட்ட நாட்டார் இலக்கியத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அந்தப்பலத்தில் காலூன்றியபடி தேசிய – சர்வதேச விவகாரங்களிலும் கலை இலக்கியப் போக்குகளிலும் பயணிக்க உதவுகிறது இந்நூல்.

மார்க்சியத்தை எனது உலக நோக்காக வரித்தபடி ஆசிரியத்தொழிலுக்கான முதல் நியமனத்தை மலையகத்தில் பூண்டுலோயா தமிழ் மகாவித்தியாலயத்தில் பெற்றுக்கொண்டு, முப்பது வருடங்களின் முன்னர் மலையகமக்களோடான தொடர்பாடலை ஏற்படுத்திக்கொண்டேன். மார்க்சியப் பார்வையை விசாலப்படுத்தும் பலகை அனுபவங்களுக்கான களடமாக மலையகம் திகழ்ந்தது. அப்போது மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள தோட்டங்களுக்கும் சென்றிருக்கிறேன். அது மலையகத் தோட்டங்களைப் பிரிக்க முனைனந்த பேரினவாத அரச நடவடிக்கையை வீரஞ் செறிந்த போராட்டங்கள் வாயிலாகவும் சிவனு லட்சுமணனின் உயிர்த்தியாகத்தினாலும் முறியத்திருந்த காலப்பகுதி.

வளம் கொழித்த மண்ணில் வந்து உழைப்பை ஆக்கிரமித்தவர்களல்ல மலையக மக்கள் விண்முட்டும் மலைகளில் மண்டிக்கிடந்த காடுகள் அழித்துப் பணப்பயிர்களான கோப்பி, கொக்கோ, தேயிலை, இருப்பர் நாட்டி வளர்த்து அந்த மண்ணுக்கே உரமானவர்கள். அந்த மண்ணைப் பேரினவாதிகள் களவாட

முனைந்ததைத் தடுத்து, இது எமது உழைப்பாலும் உதிர்த்தாலும் உரமேறிய எமது சொந்த மண் என்ற திடமனதோடும் நம்பிக்கையுடனும் மலையகமக்கள் இருந்த எழுபதுகளின் இறுதி இரண்டரை வருடங்களும், பின்னரும், இன்று வரையிலும் மலையகத்துக்குச் சென்று வருகின்றேன். இந்த மூன்று காலப்பகுதிகளும் தரும் படிப்பினைகள் சிந்தனையைக் கூர்மைப்படுத்த உதவுவன.

வீறுகொண்டெழுந்த தோட்டத்தொழிலாளர்கள் பிளவுப்பட்டுக்கிடந்த தொழிற்சங்கங்களுக்கு அப்பால் மார்க்சிய அரசியல் அணி திரட்டலில் முன்னோற்றத்தொடங்கினர். எண்பதுகளின் தொடக்கத்தில் தலையகம் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டுக் கொண்டிருக்கையில் அரசோடு கூடிக்குலாவிய தலைமையை அரசியல் விழிப்புணர்வுபெற்ற வந்த இசாந்தலைமுறையினர் தம்பிலிருந்து சமூகப் பிரஷ்டம் செய்து வந்த இசாந்தலைமுறையினர் தம்மிலிருந்து சமூக பிரஷ்டம் செய்து கொண்டனர்.

எந்தவொரு வளர்ச்சியும் நேர்கோட்டுப்பாதையில் முன்னேறிவிடுவதில்லை. தோட்டத்துறையின் உழைக்கும் இளந்தலைமுறை தமது சொந்தக்கால்களில் தங்கியபடி மார்சிய நாட்டத்தில் முன்னேறுவதைத் தடுப்பதற்கு எண்பதுகளில் புற்றிசல்கள் நுழைந்ததைப்போல அரசாரா நிறுவணங்கள் மலையகத்தை நிறைத்துக்கொண்டன. புலவர்களது கொடைகளைக் கொண்டே உங்கள் தேவைகளை நிறைவு செய்துதருகிறோம். என்றார்கள். சொந்தக்கால்கள் முடமாக்கப்பட்டபோது சிந்தனைகளும் முடமாக்கிவிடும் அவலம் தொடர்ந்தது.

அண்மையில் அட்டன் சென்றபோது மூன்றாம் கட்டத்திலான இந்தச் சிந்தனை முடமாக்கலைக்காண முடிந்தது. வீறுகொண்ட மலையகமக்களை வரலாறு படைப்பதிலிருந்து ஓதுக்கப்படுவதற்குப் பணத்தை இறைக்கும் இரண்டாம் கட்டத்துக்குறிய தொண்டு நிறுவனம் ஒன்றில் இதனைக் காண முடிந்தது (இந்தத்தொண்டு நிறுவனம் தொடக்காலத்தில் இருந்ததா, இப்போது இதன் தொழிற்பாடுகள் எத்தகையன என்ற தேடலுக்கு அவசியமிருக்கவில்லை. எழுந்த குரல் முடமான சிந்தனைக்கு உதாரணமாயிருந்ததே கவனிப்புக்குரியது. இந்தியாவிலிருந்து வருகைத்தந்திருந்த முற்போக்குச் சஞ்சிகையொன்றின் ஆசிரியரிடம் கேட்கப்பட்டது இந்தக் கேள்வி எங்களுக்கு இலங்கையில் உள்ள எவரோடுமுள்ள உறவைவிட இந்தியாதான் எங்களுக்கு நெருக்கமானது, எங்களுக்காக நீங்கள் எதைச் செய்யப்போகிறீர்கள்?

அடியந்தரமான மாற்றம்ளூ இது எங்களது சொந்தமன் என்ற உணர்வோடு போராடி உரிமைகளை வென்றெடுத்தபடி இலங்கையின் தேசிய நீரோட்டத்தில் ஆளுமையுடன் இணையத் துடித்த முப்பது வருடங்களின் முந்திய வீரியம் எங்கே போனது? அது இன்னமும் உழைக்கும் மக்களிடம் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டுதான் உள்ளது. இந்தக்குரல் மக்களைப்பிரிந்த புத்திஜீவிகளின் நபுஞ்சக ஓலம், இலங்கைத் தமிழர் மத்தியில் போராட்டம் என்ற போரிலும் சிங்கள உழைக்கும் மக்களிடம் பயங்கரவாத ஒழிப்பு என்ற பேரிலும் எழுச்சிபெற்ற இனவாத சக்திகள் அந்தந்த மக்களின் வரலாறு படைக்கும் ஆற்றல்களைச் சிதைக்கலாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தனளூ மலையகத்தில் தொண்டு நிறுவனங்கள் அந்தக் கைங்கரியத்தை நிறைவு செய்துள்ளது.

இது போன்றதான எத்தனையோ சூழ்ச்சிகளை முரியடித்தே உழைக்கும் மக்கள் தமது விடுதலைக்காகப் போராடி வரலாறு படைத்தத்திருக்கிறார்கள். மூன்று தசாப்தங்கள் எதிரியாகிய சுரண்டற்கும் பல்கள் செய்த எத்தனம் இன்று மக்களை முடக்கியுள்ள போதிலும் தடைகளைத்தகர்;த்தபடி புதிய சக்திகள் எழுச்சி பெற்று மீண்டும் வீறுகொண்டெழும் விடுதலை முழக்கங்களை அரங்குக்கு கொண் வரும் நாள் தொலைவில்லை. அதற்கான ஒரு விடிவெள்ளியாக லெனின் மதிவானம் வெளிப்படுத்தும் இந்தக் கட்டுரைத்தொகுப்பு அமைந்துள்ளது.

அண்மித்த காலத்தில் மலையகத்தில் ஒரு தவிர்க்கவியலாத குரல் எழுந்ததுண்டு. எப்போதுமே தோட்டத்துறைக்குள் நாங்கள் அழுந்திக்கிடக்க வேண்டுமா? எழுச்சியுடன் வெளியேவந்து பல்துறைகளில் பரந்து வளர்வோம் என்ற புதியதலைமுறைப் புத்திஜீவிகள் முழக்க மிட்டார்கள். என்பதுகளில் பிரசாவுரிமை வழங்கப்பட்ட பின்னர் பத்துப்பாராளுமன்ற உறுப்பினருக்கு மேல் பெற்றுக்கொள்ள முடிந்த சூழலில் பெருந்தோட்டத்துறை என்ற அமைப்பைத் தகர்த்துப் பன்மைப் பரிமாணச் சமூக ஒழுங்கைப்பெறும் கோரிக்கை எழுவது தவிர்க்கவியலாததுதான் அந்தவளர்ச்சிக்கான எத்தனங்களை முடக்கக் கூடாது.

அதேவேளை, அந்தக் குரல்களுக்குரியவர்கள் மலையகத் தோட்டத்தொழிலாளர்களுத்தாம் துரோகம் இழைக்காமல் தமது போராட்டங்களை முன்னெடுப்பதை உறுதிப்படுத்துவது அவசியம். இன்னமும் லட்சக்கணக்கான மக்கள் மலைகளைக் குடைந்து வியர்வை சிந்தித்தமது உழைப்பால் இந்தத் தேசத்துக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிதந்து வளம் சேர்த்துத் தந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். சில ஆயிரம் பேர் போனவர்போக லட்சக்கக்கானோர் அவ்வாறு வாழும் போது அவர்களது உரிமைக் குரல்களை எழவிடாமல் தடுக்க முயலாதிருங்கள்.

அந்த உழைக்கும் மக்களின் தொழிற்சங்க சந்தர்ப்பணத்தில் அரசியல் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களும், ஷமுன்னேறும்| புத்திஜீவிகளைக் கொண்டே தங்களது பிழைப்புல்லாத அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக மலையக உழைக்கும் மக்கள் வரப்போவதில்லை – நீங்கள் அவர்களது பிள்ளைகள். நீஞ்கள் எங்கிருந்தாலும் வாழ்க என்றபடி இந்த மண்ணில் உழைத்துழைத்து ஓடாக ஒடுங்கும் அவர்களது மீட்சிக்கான குரல்களை எழுலொட்டாமல் தடுக்காதிருங்கள். அண்மைக் காலங்களில் அரசியலாளர்களாகிவிட்ட தொழிற்சங்கத்தலைவர்கள் காட்டிகொடுக்கும் துரோகங்களைத் தொடர்ந்து செய்த போதிலும் தோட்டத்தொழிலாளர்கள் தன்குணர்வாகக் கிளர்தெழுந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கு உதவ உங்களால் முடியாவிட்டாலும் பரவாயில்லை, தோட்டத்துறையென்று எதுவுமில்லை எல்லாம் மாறிவந்துவிட்டோம் என்று பசப்புலார்த்தைகள் பேசித்துரோகமிழைக்காது இருங்கள்.

புதிய தலைமுறைப் புத்திஜீவிகளில் இலையக மக்களோடு இணங்கி இயங்கி வளரும் சக்திகள் இல்லாமல் இல்லை என்பதற்கு இந்நூல் சிறந்த உதாரணம். பெருந்தோட்டத் துறைசார்ந்த மக்களோடு நெருங்கிய உறவைப்பேணும் உணர்வுடன் கலை இலக்கியச் செயற்பாட்டை முன்னெடுப்பவராக வெலின் மதிவானம் உள்ளார். இங்குள்ள கட்டுரைகள் மலையக மக்களது விடுதலை மார்க்கத்துக்கான விரிந்து பரந்த தளங்களை விஸ்தீரரணப்படுத்திக் காட்டுவனவாய் உள்ளன. முன்னருங் கூட தோட்டத் தொழிலாளர்கள் பிரதேசவாதத்தினுள் முடங்கிவிடாமல் தேசிய சர்வதேசப் பாட்டாளி வர்க்க எழுச்சிகளுடன் கைகோர்த்து இயங்கியிருக்கிறார்கள். செங்கொடிச் சங்கம், புதிய செங்கொடிச் சங்கம் உள்ளிட்ட இடதுசாரித் தொழிற் சங்கங்கள் அத்திசை வழியில் ஆற்றுப்படுத்தி மார்க்சியப் போதமூட்ட முயன்றுள்ளன.

இந்த மூன்று தசாப்தங்களாகப் பிற்போக்குவாதம் மேலாங்கியதும் முந்திய எழுச்சிப்போராட்ட அவை ஓய்ந்ததும் இலங்கைக்கு மட்டும் உரியதல்ல. உலகளாவியது. மக்கள் வரலாறு படைக்கும் இயங்காற்றில் இருந்து ஓராங்கட்டப்பட்டபோது பின் நவீனத்துவக் கட்டச் சிந்தனைகள் புகுந்தன. புதிய உலகைப் படைக்கும் உத்வேகத்தில் முயன்ற மேலைத்தேசம் இரு பெரும் யுத்தங்களுடாகச் சிதைந்தபோது அந்தப்பொது இலட்சிய வீறும் குன்றி வலுவிழந்தது. தனது ஆற்றல் இழப்பால் வரலாறென்றே ஒன்றில்லை என்பது உள்ளிpட்டு நம்பிக்கையீனங்களால் அழுங்கிப் போய்ப் பின் நவீனத்துவம் எனக் குழப்பங்களே நியதியெனவும், ஒட்டு மொத்தச் சமூக மாற்றங்கள் என்ற சாராம்சப்படுத்தல் சாத்தியமில்லை எனவும் கையறு நிலையடைந்தது.

இத்தகைய குழப்பத்துக்கு மார்க்சியர் உள்ளாக வேண்டியதில்லை. குழப்பச் சிந்தனைகளுடாகவும் முதலாளியப் புத்திஜீவிகள் புதிய விடயங்களைக் கண்டறிந்திருக்க முடியுமாயினும், மார்க்சியரிடம் அவ்வழியின்றித் தெளிந்த உணர்வுடன் விடயங்களைப் பகுத்தாராயவும் உலகை மாற்றியமைத்து உழைப்பவர் அதிகாரத்தை வென்றெடுப்பதூடாக வர்க்கபேதங்களை ஒழிக்க வழி தேடவும் இயலுமாயுள்ளது. எப்படி மேலைத்தேச, கீழைத்தேச மார்க்சியங்கள் என்றில்லையோ அவ்வாறே நவீனத்துவ பின் நவீனத்துவ மாக்சியங்கள் என்றும் எவையும் இல்லை. மார்க்சியம் மாற்றத்துக்கு இடமற்ற மதநூல அல்ல  கால – இட வேறுபாட்டை உத்தேசித்து மக்களை விலஙிகிட்டுள்ள அதிகாரங்களைத் தர்க்க ஏற்ற இயங்கியல் – பொருள் முதல்வாத உலகப் பார்வைத் தருகின்ற ஒரு சிந்தனைமுறையே மார்க்சியம் அதனைக்கையேற்றுத் தத்தம் கால – இடச் சூழலில் பிரயோத்த பல நாட்டு மக்களின் அனுபவத்தொகுப்பைக் கற்கும்போது, அவை எம்மை விலங்கிடப்போவதில்லை. அவற்றிலிருந்து கற்றுக் கொண்டு வளத்தெடுக்கும் எமக்கான போராட்ட உத்திகளும் மார்க்கங்களும் எம்மை வழிநடத்தி முன்னேறும்.

அந்தவகையில் சாதியச் சமூகமொன்றில் மார்க்சியப் பிரயோகத்துக்கான அனுபவச் செழுமை அறுபதுகளில் இலங்கை;கு வாய்த்திருந்தது. சாதியத்தகர்ப்புப் போராட்ட அனுபவங்களை இந்நூல் விரிவாக ஆராய்கிறது. அதன் இலக்கிய எழுச்சியாகப் பரிமணமித்த டானியல் தமிழகத்தில் தமிழழின் தலித் இலக்கிய முன்னோடியாகக் கொண்டாப்புடுவர். அந்தப்போராட்ட அனுபவச் செழுமையை எந்தளவுக்கு மார்க்சிய நிலைப்பட்டு (வர்க்கப்பார்வையில்) படைக்கபாக்கம் செய்ய டானியலால் முடிந்திருக்கிறது என்பது குறித்த சர்ச்சை அவர் வாழ்ந்த காலத்திலும் எழுந்த துண்டுளூ இங்கும் மீள்பார்வையில் மறுமதிப்பீட்டுக்கு உள்ளாகியுள்ளது.

மார்க்சியத்தைப் பின் நவீனத்துவப் போரால் திரிபுபடுத்துவது ஒரு பக்கம் நடந்தபோது, சாதியச் சமூகத்துக்கு மார்க்சியம் பொருந்தாது எனக்கூறித் தலித்தியவாதித்தினுள் முடங்கியவர்கள் மற்றொருபக்கம் உருவாகினர். சாதியச் சமூகம் என்ற புரிதல் ஏற்பட்டால் பின்னர் எப்படி வர்க்கப்பார்வை பற்றிப் பேசலாம், சாதியப்பார்வை தானே சாதியம் எனத் தலித்தியவாதிகள் கூறுவர். இது தனியே சாதிகளின் சமூகமல்லளூ சாதியவர்க்க சமூகம் ஐரோப்பாவைப்போலத் தனிமனிதர்கள் வர்க்கங்களாய் இல்லைளூ ஒரு தனியாள் அடையாளம் சாத்தியமற்றவகையில் ஒவ்வொருவருக்கும் சாதியடையாளம் இங்கே வலுவாக உண்டு. பாட்டாளிவர்க்கத்தில் ஐம்பது வீதத்துக்குமேல் ஒடுக்கப்பட்ட (தலித்) மக்களேயுள்ளனர். முதலாளிகளாக ஒருவீதம் இரண்டுவீதம் (எங்குமே ஐந்து வீதத்திக்கு மேற்படாமல்) மட்டுமே ஒடுக்கப்பட்டுள்ளனர். சுரண்டும் வர்க்கத்திலும் அதிகார பீடத்திலும் ஆதிக்க சாதியினரே எழுப்து வீதத்திற்கு மேல் நிறைந்துள்ளனர்ளூ மிகுதி இடங்களும் இடைச்சாதியினரால் நிரப்பப்பட்டிருக்குமு;. ஆக, நிலப்பிரபுத்தில் மட்டுமன்றி முதலாளித்துவத்திலும் குறித்த சாதிகளுக்கு குறித்த வர்க்க அடையாளம் சாத்தியமாதித்தான் உள்ளது.

ஆயினும் வர்க்கப்பார்வையே விடுதலைக்கு மார்க்கமாக முடியும். பாட்டாளி வர்க்கத்தலைமையில் நிலப் பிரபுத்துவ, முதலாளிச் சுரண்டல் வர்க்கங்ககளை அழித்தொழிப்பது எனக் கொள்கை வகுப்பதைப்போல ஒடுக்கப்பட்டோர் தலைமையில் ஆதிக்க சாதியினரை முறியடிப்பது எனக் கொள்கை வகுத்துவிட முடியாது. சாதிய முறையைத் தகர்ப்பது எனும்போது இயல்பாக ஒடுக்கப்பட்ட மக்களே முழுதாகத்திரள்வர்ளூ உயர்சாதியினரிலும் அதிகாரத்தைத்தகர்த்துச் சமத்துவ சமூகம் படைக்க உள்ள அவசியம் பலருக்கு உள்ள வாழ்கின்ற நிலவதனால் பலரும் அணிதிரள்வர். அணிதிரண்டார்கள் என்பதாலேயே தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைமை அமைப்பில் வெள்ளபளர் உட்பட்ட பல்வேறு சாதியினர் இடம் பெற்றிருந்தனர். அந்தப் போராட்டத்திலும் பல்வேறு சாதியினர் பங்கெடுத்தனர்.

சாதியத்தகர்ப்பை சாதியப்பார்வையில் எட்ட முடியாது, ஒடுக்கப்பட்ட சாதியினர் அதிகாரத்தைக் கைப்பற்றுவது எனில், முன்னர் ஒடுங்கிய சாதியினரை அடக்குவது என்றாகி, வேறொரு வடிவில் சாதியம் தொடர்வதாகவே அமையும். எந்தச்சாதி ஆள்வது – ஆளப்படுவது என்பதல்லப் பிரச்சினைளூ சாதிமுறையே தகர்க்கப்படவேண்டும் என்பதே அவசியம். பாட்டாளி வர்க்கம் தனக்கு என எதுவுமற்றது, வர்க்கங்களே அற்றுப்போவதனால் மட்டுமே தனக்கான விடுதலையை எட்ட முடிவது. சிறு உடமை உள்ள வேறெந்த சக்தியின் அதிகாரமும் தன் நலனை விருத்தி செய்ய மார்க்கந்தேடும் என்பதனாலேயே பாட்டாளிவர்க்கத் தலைமையிலான வர்க்க ஒழிப்பு மார்க்கம் பற்றி மார்க்சியம் கரிசனம் கொள்கிறது. முதலாளித்துவத் தந்திரோபாயங்கள் பாட்டாளிவர்க்க இருப்பில் சிதைவுகளை ஏற்படுத்திய போதிலும் மார்க்சியத்தினூடாகப் பெறப்பட்ட பாட்டாளி வர்க்கச் சிந்தனை முறை மக்கள் விடுதலைக்கான வழிகாட்டலாய் அமைய முடியும். விவசாயப் புரட்சிக்குப் பாட்டாளி வர்க்கச் சிந்தனையைப் பிரயோகித்த சீனப் புரட்சி இவ்வகையில் டா ஒ சேதுங் சிந்தனையை வழங்கிய நிலையிலேயே இலங்கை லெனினிய – மா ஒ சேதுங் சிந்தனை வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டது.

டானியலின் படைப்பாக்கத்தில் அவர் விரும்பியவாறு பாட்டாளிவர்க்கப் பார்வை வெளிப்படாமல் சாதிய வாதத்தவறு தலைதூக்கி இருந்த போதிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வையும் போராட்டங்களையும் அவரளவுக்கு வேறொருவரும் எழுதவில்லை என்ற வகையில் மக்கள் இலக்கியத்துக்கான அவரது பங்களிப்புக் குறைத்து மதிப்பிடத்தக்க ஒன்றல்ல. அவ்வாறே முற்போக்கு இலக்கியச் செல்நெறியில் முனைப்பாகச் செயலாற்றிய பலரது ஆக்க முயற்சிகள் குறித்தும் இந்நூல் அலசுகின்றது. குறிப்பாக சாருமதி, முருகையன் போன்றோர் குறித்த தனியான கட்டுரைகள் இங்கு இடம்பெற்றிருக்கக் காணலாம். சாதியத் தகர்ப்புப் போராட்டம் பரந்துபட்;ட ஜக்கிய முன்னணியைக் கட்டியெழுப்பிய சூழலில் இலங்கைத் தேசியம் முனைப்படைந்திருந்தது. அதனுள் இனத்தேசியர்களின் சுய நிர்ணயத்துக்கான குரலை முருகையன் சாருமதி போன்றோர் முன்வைத்தனர். அவர்களது மார்க்கமே எமக்கான ஈடேற்றத்தைச் சாத்தியப்படுத்தும் என்பது இன்றைய நிதர்சன அனுபவமாகி வருகிறது.

இவற்றை ஆய்வடிப்படையில் வெளிப்படுத்தியவர் கைலாசபதி. அவரது மக்கள் இலக்கிய முன்னேடுப்பும் சோஷலிச நாட்டமும் மக்களின் தேடலுக்குரிய பேசு பொருட்கள் ஆகிவிடக் கூடாது என ஏதோவொரு வகையில் கருதுகின்றவர்களே கைலாசபதியை தாக்குகின்றவர்களாயுள்ளனர். நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பரந்து பட்ட ஜக்கிய முன்னணியூடாக சோஷலிச அமைப்புக்கு மாற்றப்படும் புதிய உலகொன்றிலேயே வென்றெடுக்கச் சாத்தியமுள்ளது. அதற்கான மார்க்கங்களைத் தேடவும் செயற்படவும் ஏற்றதாகக் கலை இலக்கியங்கள் அமைவதற்கு ஆற்றுப்படுத்தியவர் கைலாசபதி. அவரைத் தாக்குதலோ திரிபுபடுத்தவதாலோ அவர் காணவிழந்த புதிய உலகை வென்றெடுப்பதிலிருந்து வரலாற்றைத் திசை திருப்பிவிட முடியாது.

ஆயினும் திசை திருப்புவதற்கான எத்தனங்களை விரோதிகள் இறுதிவரை முன்னெடுத்தவாறு தான் இருப்பர். அவர்களுடைய தாக்குதலுக்கு கைலாசபதியைப் போலவே பாரதியும் இலக்கானார். இலங்கையின் தனித்துவ இயங்காற்றலையும் சொந்த மக்களது அடிப்படை பிரச்சினைகளையும் எமது கலை இலக்கியங்கள் வெளிப்படுத்த வேண்டும் என்ற முற்போக்கு எழுத்தாளர் சங்க பிரகடனம் எழுந்த போது தவிர்க்கவியலாமல் பாரதியை மன்னிருத்திய தேசிய இலக்கியக் கோட்பாடு மேலெழத் தொடங்கியது. முற்போக்கு சக்திகளின் போர்வாளாக பாரதி இலங்கையில் திகழ்ந்துள்ளார். லெனின் மதிவாணம் பாரதி குறித்துக் கொள்ளும் அக்கறை தேசிய இலக்கியக் கோட்பாடு வாயிலாக மக்கள் இலக்கியத்தை வந்தடைந்த கைலாசபதியின் தொடர்ச்சியாக அமைவதைக் காணமுடிகிறது. இன்று சிலர் இந்திய வம்சா வழியினர். என்ற அடையாளத்துக்கு ஏங்குவதைப் போலன்றி பாரதியை இலங்கைத் தேசிய எழுச்சியின் குரலாகப் பார்க்கும் பண்பு இது. மலையக விடுதலையை இலங்கை தேசியத்தின் விடுதலைப் பண்பின் பகுதியாக அமையும் சுயநிர்ணயத்தின் வடிவமாகக் காண்பதன்’ பேறு இது.

அதனாற் போலும் அவரது பார்வை உடனடியாகவே தேசியத்தின் முற்போக்குப் பரிணாமமாக லிஸ்திரணமடையும் சர்வத பாட்டாளி வர்க்க அனுபவங்களைத் தேடிச் செல்கின்றது. தேசியத்தின் மறுபக்கமான பிற்போக்கு அம்சங்கள் மேலோங்கும் போதுதான் பிரதேசவாதமும் அதன் உடன்போக்கான இந்தியக்கனவும் உருவாகும். இந்தியத் தேசியத்தின் புரட்சிப் பரிணாமமாகிய பாரதியை அடியொற்றிச் சர்வதேச நோக்கில் இந்நூல் பரிணமிப்பது கவனிப்புக்குரியது. அவ்வகையில் பாஜியத்துக்கு எதிரான வலுவான அபலப்படுத்தலூடாக சோஷலிசத்தின் உறுதிப்படுத்தலை வெளிப்படுத்திய ஜீலியன் பூசிக்கை அவர் காட்டுவது பொருத்தமாய் அமைகிறது.

இந்திய மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து மலையக மக்கள் இங்கே வந்ததைப் போன்றே மலேசிய மண்ணிலும் மலேசியத் தமிழர் எனும் மக்கள் பிரிவினர் பல இன்னல்களை அனுபவித்தபடி போராட்டங்கள் வாயிலாக முன்னேறி வருகின்றனர். மலேசியத் தமிழர் குறித்த லெனின் மதிவானத்தினது பார்வை ஏனையவர்களிலிருந்து அடியந்தமாய் மாற்றம் பெற்று வந்தள்ளது. மேலே காட்டிவந்தவாறு உழகை;கும் மக்களது போர்க்குணாம்சத்தில் காலூன்றிய படி மலையக மக்களது சுய நிர்ணயத்திற்கும் இலங்கைத் தேசியத்துக்கும் சர்வதேச பாட்டாளியத்திற்கும் பார்வை விசாலிப்பை அவர் விரிவுபடுத்தி வந்ததன் நோக்கு நுட்பம் மலேசியத் தமிழரை தனித்துவப்பண்போடு காட்டவதற்கு உதவியள்ளது.

இறுதியாக அவரது பார்வை வீச்சின் உச்சமான அமையம் பல்லோல் பற்றிய கட்டுரை இந்நூலின் கண் இடம்பெற்றுள்ளது. ஒரு உளவியாளராக மட்டும் பல்லொவை அறிந்தவர்களுக்குப் பல்வேறு பரிணாமங்களில் தரிசிக்க உதவுகிறது இக்கட்ரை. கூடவே சோஷலிச சமூகம் தனது அறிவியலாளரை மாறுபட்டுச் செயற்பட்ட போதிலும் எவ்வளவு கனம் பண்ணி நடாத்தியுள்ளது என்பதும் காட்டப்பட்டிருக்கிறது. பல்லொலில் ஏற்படும் நுண்ணுணர்வு சார் மாற்றம் அழகாக இங்கே காட்டப்பட்டுள்ளது.

மக்கள் கலை இலக்கிய எழுச்சி வலுவோடு தொடர்ந்து விறுநடைபோடும் என்பதற்கு தீர்க்கமான எடுத்துக்காட்டாக இந்நூல் திகழும். இப்படிச் செய்வதால் இங்கு விவாதிக்கப்படும் விடயங்கள் அப்படியே ஏற்றாக வேண்டும். என்றில்லை. இவற்றை பன்மைப் பரிணாம நோக்கில் தொடர்ந்து விவாதிப்போம். அது மக்கள் நலன் சார்ந்த தளத்தக்குரியதாக அமையும் போது மேலும் செழுமை பெற்ற பார்வையைக் கண்டடைவோம். இந்தக் கூட்டு முயற்சியோடு இறுக்கமான ஜக்கிய முன்னணியில் திடமாகச் செயற்படவோம்.

குமரன் இல்ல வெளியீடு, விலை. 450ரூபா.

Exit mobile version