Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்த ராஜபக்ச தலைமையில் மக்களுக்கு துரோகமிழைக்கின்றோம் : ஹக்கீம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இந்த நாட்டின் குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும், கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் அபிலாஷைகளைப் நிறைவேற்றுவதற்காக ஒன்றினைந்து செயற்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சிறீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் இன் சுய ரூபத்தை வட கிழக்க்குத் தமிழர்கள் போன்று ஒடுக்கப்படும் தேசிய இனமான முஸ்லீம் தேசிய இனம் உணர்ந்துகொள்ள அக்கட்சி இப்போது உரிய சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.

மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட புதிய முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டது போன்ற மூஸ்லீம் காங்கிரஸ் வாக்குக்களைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டுமெ மேடைகளில் பேசினார்கள் என்பதை நிறுவியுள்ளார்கள்.

தமிழ்ப் பேசும் மூஸ்லீம்கள் ஏனைய ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களோடு இணைந்து மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் காலம் நெருங்கிக்கொண்டிர்பதை இந்த பிழைப்புவாதக் கட்சிகள் உணர்ந்துகொள்ளும் காலம் விரைவில் உருவாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லீம் காங்கிரசும் மக்களால் நிராகரிக்கப்பட்டு புதிய ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் தலைமை உருவாகும் என்பதை கிழக்கு மக்கள் உறுதிசெய்வார்கள்.

Exit mobile version