Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போர்க்குற்றவாளி நியோயோர்க் செல்கிறார்!

போர்க்குற்றவாளி என்றும் தண்டிக்கப் போவதாகவும் மேற்கு நாடுகள் அவ்வப்போது கூறிக்கொள்ளும் மகிந்த ராஜபக்ச இன்று நியோர்க்கிற்குப் புறப்பட்டார். இன்று அதிகாலை விசேட விமானமொன்றின் மூலம் ஜனாதிபதியும், பிரதிநிதிகள் குழுவினரும் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மகிந்த ராஜபக்ச நியூயோர்க் விஜயம் செய்துள்ளார்.

எதிர்வரும் 23ம் திகதி ஜனாதிபதி மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
ராஜபக்ச மட்டுமன்றி உலகின் பல போர்க்குற்றவாளிகளின் தரிப்பிடம் அமரிக்காவும் அதன் நேச நாடுகளுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version