
“வையாதே வையாதே எம் மீது கை வையாதே”, “பல்கலைக்கழகங்களுக்கு உள்ளே இராணுவம் செல்வதை உடன் நிறுத்து” இ “கைது செய்த மாணவர்களை உடன் விடுதலை செய்” போன்ற முழக்கங்களை எழுப்பினர்.
யாழ்.பல்கலைக்கழகப் பகுதியில் ஆயுதங்களோடு நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினரை வெளியேறுவார்கள் என்ற உறுதிமொழி வழங்கப்பட்ட போதும் அவர்கள் அங்கேயே நிலைகொண்டுள்ளனர்.
இந்த நிலையில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் சிங்கள மாணவர்களோடு இணைந்த எழுச்சிகள் நம்பிக்கைதருவன.
உலகில் மிகப்பெரும் இன அழிப்பையே தடுத்து நிறுத்தமுடியாத தோல்விகண்ட அதே வழிமுறைகளையே புலம் பெயர் அமைப்புக்கள் பயன்படுத்துகின்றன.இலங்கை அரசு ஒரு புறத்திலும் புலம் பெயர் அமைப்புக்கள் மறு புறத்திலும் ஒன்றிணைந்து பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை புலிகளின் போராட்டம் என்ற தோற்றப்பாட்டை வழங்க முற்படுகின்றன. இந்த நிலையில் பேராதனைப் பல்கலைகழக மாணவர்களின் போராட்டம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைப்போருக்கு திட்டமிட்டு வழங்கப்படும் ‘புலி’ சாயத்தை வெளுக்கச் செய்யும் என்பதோடு இலங்கை அரசின் புலிப் பிரச்சாரத்திற்கு சாவுமணியடிக்கும்.