Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பெரியார் சிலையை அவமதித்த இருவர் கைது!

பாஜக தமிழ்நாட்டில் காலூன்றுவதற்காக பல விதமான பதட்ட அரசியலை செய்து வருகிறது. திராவிட இயக்க வெறுப்பு, பெரியார் எதிர்ப்பு என்பதே பாஜகவினரின் தமிழ்நாடு அரசு. அதை கருத்தியல் ரீதியில் நாம் தமிழர் கட்சியும் எதிர்ப்பதால்  பாஜக- நாம் தமிழரை இணைக்கும் புள்ளியாக திராவிட வெறுப்பு இருக்கிறது. இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுக்க பாஜகவினர் செருப்பு மாலை அணிந்தனர். ஆனால் அவர்கள் மீது அரசு நடவடிக்கைகள் எதனையும் உருப்படியாக எடுக்கவில்லை.

இந்நிலையில், கோவை வெள்ளலூர் பகுதியில் தந்தை பெரியாரின் சிலைக்கு சிலர் செருப்பு மாலை அணிவித்தனர். இதனையொட்டி திராவிடர் கழகம், திமுகவினர் குற்றவாளிகளை கைது செய்யுமாறு போராட்டம் நடத்தினார்கள். இந்நிலையில் அருள் கார்த்திக், மோகன்ராஜ் என்ற இந்துமுண்ணணி ரௌடிகள் இருவர் நள்ளிரவில் பெரியார் சிலை மீது செருப்பு மாலை போட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

பாஜக ஆதரவோடு இவர்கள் தந்தை பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போட்டுள்ளதாக தெரிகிறது.

Exit mobile version