Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளின் அழிவும் ஒஸாமாவின் அழிவும் ஒப்பிடத் தக்கவை : டியூ குணசேகர

அல்-கைதா அமைப்பின் தலைவர் ஒஸாமா பின்லேடனின் மரணத்தின் பின்னர் அமெரிக்கர்கள் கொண்டாடும் மகிழ்ச்சிக்கும், நந்திக்கடலில் புலிகளின் அழிவுக்குப் பின்னர் இலங்கையில் நடத்தப்பட்ட மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களுக்கும் இடையில் எந்த வித்தியாசத்தையும் காணமுடியவில்லை என்று சிரேஷ்ட அமைச்சரும், சந்தர்ப்பவத,  போலி  கம்யூனிஸ்ட்  கட்சியின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளருமான டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.
பின்லேடனின் மரணத்துக்குப் பின்னர் அமெரிக்கர்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது குறித்துக் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் வெற்றியைக் கொண்டாடிய இலங்கையை இகழ்ந்தவர்கள் தற்போது பின்லேடனின் மரணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
அல்-கைதா அமைப்பை தோற்கடிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கையில் பின்லேடனின் மரணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த்து என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

Exit mobile version