Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலம்பெயர் வன்முறை அரசியல் : நிறுத்தக் கோருகிறோம்! – அப்துல் அலீம்

மூன்றாமுலக நாடுகளின் காலனியத்திற்குப் பின்னதான விடுதலை இயக்கங்களும் அதற்கான கருத்தாக்கங்களும் ஏதோ ஒருவகையில் வன்முறையோடு தொடர்புடைதாகவே அமைந்திருக்கிறது.

இயல்பான முதலாளித்துவப் புரட்சியும், தேசிய மூலதன வளர்ச்சியுமின்றிய சமூககப் பொருளாதாரச் சூழலில், மக்களை அமைப்பாக்குதல் என்பதும் ஏற்கனவே காலனிய ஆட்சியாளர்களின் நலன்களுக்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட, முதலாளித்துவ சமூக அமைப்பில் காணப்பட முடியாத, சாதி, பிரதேச முரண்பாடுகள் போன்றவற்றை தேசியப்போராட்டக் காலகட்டத்திலும் அதன் தொடர்ச்சியாக சோசலிசத்திற்கான போராட்டத் தளத்திலும் கையாளுதல் என்பதும் சிக்கலானதாக அமைந்துள்ள சமூக, சிந்தனை அமைப்பு முறையுள், மக்கள் திரள் மீதான நம்பிக்கையும் பெரும்பான்மை மக்கள் சார்ந்த மக்கள் போராட்டத்தின் மீதான நம்பிக்கையுமற்று வன்முறையின் மீதும் தனி நபர் சாகசங்கள் மீதான நம்பிக்கையுமே போராட்டங்களின் பொது வடிவமைப்பாக மாறியது.

மார்க்சிய ஆய்வு முறையின் மீதும் மக்கள் போராட்டத்தின் மீதும் நம்பிக்கையற்ற சிந்தனைப் போக்கானது 70 களின் பின்னர் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஏகாதிபத்தியக் கல்விமுறை, கலாச்சாரம் என்பவற்றின் தவிர்க்கவியலாத தொடர்ச்சியாகவே அமைகிறது.

ஏகதிபத்தியச் சுரண்டலுக்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சிந்தனை மரபும் அதன் செயற்பட்டுத் தளமும் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் பாசிசத்தின் சமூகக் கூறுகளாகவும், வன்முறையாகவும் வெளிப்படுகின்றன.

அதிகாரத்திற்கெதிராகப் போராடும் பின் நவீனத்துவ வாதிகளின் கலகக்குரல்களும் பெருங்கதையாடலை சமூக மாற்றத்திற்கெதிரான போராட்டத்தில் எதிர் நிறுத்தும் போக்கும் ஏகாதிபத்தியங்களின் இந்த நோக்கத்திற்குக் கணிசமான பங்கு வகித்திருக்கிறது.

பாரிய கொலை ஆயுதங்கள் சித்திரவதை முகாம்கள் என அனைத்து அதிகாரங்களுடனும் ஒரு சிறு தொகைக் கூட்டத்திற்காக மக்களைக் கொன்று குவிக்கும் அதிகரத்திற்கெதிராக குரெலெளுப்பும் போதெல்லாம் இவர்கள் மார்க்சியர்களுக்கெதிராகக் கலகம் செய்கிறார்கள்.

மக்கள் மீது நம்பிக்கை கொள்தல் என்றால் பெரும் பாலானோருக்கு வேடிக்கையாகவும் வியப்பாகவும் அமைந்து விடுகிறது. இது ஒரு நீண்ட போராட்டப்பாதை என்பதால் மக்கள் போராட்டங்களையும் ஜனநாயகப் போராட்டங்களையும் கருத்திற்கொள்ளவே மறுக்கிறார்கள்.

புலிகள் மக்கள் மீதான நம்பிக்கையற்று தனி நபர் தலைமை மீது நம்பிக்கை கொண்ட ஆரம்பமானது போராட்டமே மக்களுக்கெதிரானவொன்றாக மாறிப் போக வழிசெய்தது.

மக்கள் மீதான நம்பிக்கை என்பது எதோ மக்கள் தலைவர்களது புகைப்படங்களை விருந்தினர் அறையில் மாட்டிவைத்துக் கொண்டு பூஜை போடுவதல்ல.

புலிகளின் பாசிசத்திற்கெதிராக பேரினவாத இலங்கை அரசை நிறுத்துவதும், இலங்கை அரசின் இனப்படுகொலைக்கெதிராக சொந்த நாட்டிலேயே கொசுக்களைப்போல இலட்சக்கணக்கில் வறிய விவசாயிகள் சாகடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது கண்டுகொளளத் திரணியற்ற இந்திய அரசை நம்புவதும், இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல சர்வதேச பயங்கரவாதத்தை உலக மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட்டிருக்கும் அமரிக்கவின் ஜனாதிபதி வேட்பளர் ஒபாமாவை எதிர்கால இரட்சகனாக கனவு காண்பதும் மக்களை புறக்கணிக்கும் அணுகுமுறைகளே. வன்முறைகக்கன ஆரம்பமே இங்கிருந்து தான் உருவாகிறது.

ஐரோப்பிய நாட்டிலிருந்து அதன் தன்னார்வ நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் நிதியில் தங்கிநிற்கும் ஒருமக்கள் கூட்டம் எமது நாடுகளில் உருவாகிக் கொண்டிருக்கிறது.

சார்க் மாநாடு நடத்தப்படுவதற்காக மட்டுமே கொழும்பு புறநகர்ப் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தமது சொந்த நாட்டிலேயே அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டார்கள். இவர்கள் அரசிற்கெதிராகப் போராட முற்பட்டபோது, தன்னார்வ நிறுவனக்கள் தலையிட்டன. போராட்டத்தை நிறுத்தக் கோரியதுடன் அவர்களின் மறு குடியேற்றத்திற்குத் தாம் உதவுவதாகவும் உறுதியளித்தன.

அரசு தான் விரும்பியதையெல்லாம் செய்து முடிக்கட்டும், என்.ஜீ.ஓ கள் இருக்கின்றன, மக்கள் அமைதியாக அவர்கள் போடும் எலும்புத்துண்டுகளை வாங்கிக் கொண்டு மௌனிகளாக இருந்து விடுங்கள் என்பதுதான் இதன் சாராம்சம்.

அரசும் அதன் அமைப்பும் மாறாது, ஏகாதிபத்தியங்கள் தாம் விரும்பியபடியே சுரண்டிக்கொண்டு போவார்கள் அதனால் மக்கள் பாதிக்கப்படும் போது தற்காலிகமாக உதவிபுரிய என்.ஜீ.ஓ கள் என்ற அரச சாரா தன்னார்வ அமைப்புக்கள் உள்ளன. ஜீரணித்துக் கொள்ளமுடியாத நியாயம்.

மக்களை அமைப்புமயப்படுத்தி அரசின் அடக்குமுறைக்கெதிரான போராட்டங்கள் இங்கே முன்னெடுக்கபடுவதிலை.

மக்கள் மீதான நம்பிக்கையும் மக்கள் போராட்டமும் திட்டமிட்டுச் சீரழிக்கப்படுகிறது. ஒரு புறத்தில் பின் நவீனத்துவம் அதன் அதிகாரசமரசம் போன்ற அழகான புத்திஜீவிப் போதையும் அதன் வன் முறையும், இன்னும் பிரதேச சாதி முரண்பாடுகள் என்பவற்றை கூர்மைப்படுத்தி மக்கள் போராட்டங்களைப் பிரித்துச் சிதறடிப்பதும், மறு புறத்தில் தன்னார்வ அமைப்புக்களூடான தங்கியிருக்கும் மக்கள் கூட்டம் ஒன்றை உருவாக்குதலும் ஏகாதிபத்திப் பணச்சுரண்டலின் திட்டமிட்ட நிகழ்ச்சினிரலின் ஒருபகுதியே என்பதைத் தவிர வேறென்ன?

இவ்வாறு மக்கள் மீதானதும், மக்கள் போராட்டத்தின் மீதானதுமான நம்பிக்கையற்ற ஒரு கூட்டத்தின் புகலிட அரசியற் தொடர்ச்சி தான் நாம் இன்று காணும் வன்முறை தாதா பாணி அரசியல்.

இவ்வாறு மக்கள் மீதானதும், மக்கள் போராட்டத்தின் மீதானதுமான நம்பிக்கையற்ற ஒரு கூட்டத்தின் புகலிட அரசியற் தொடர்ச்சி தான் நாம் இன்று காணும் வன்முறை தாதா பாணி அரசியல்.
ஜனநாயகமென்றும், தலித்தியமென்றும், மக்கள்போராட்டமென்றும் பேசிக்கொள்ளும் புகலிட அரசியலில் ஒரு கூட்டம் வன்முறை என்பதையே அரசிலாக்க முயல்கிறது.

இலங்கையிலும் இந்தியாவிலும் இடதுசாரிகளும் ஊடகத்துறையினரும் தேடித் தேடி அழிக்கப்படுகிறார்கள். அரசுக்கெதிரானவர்களும், புலிகளின் பாசிசத்திற்கெதிரான சமூக உணர்வுகொண்ட சக்திகள்ும் ஒன்றில் என்.ஜீ.ஓ களால் உள்வாங்கப்பட்டுச் சீரழிக்கப்படுகிறார்கள் அல்லது தெருவோரத்து அனாதைகளாகக் கொலைசெய்யப்படுகிறார்கள்.

இலங்கையில் இன்று மக்கள் நலன் சார்ந்து பேசுவதற்கு யாரும் இல்லை. ஊடகத் துறை ஒன்றில் அரசு சார்ந்தோ அல்லது புலிகள் சார்ந்தோ மட்டும் தான் இயங்கமுடியும். பெரும் பகுதியினர் இல்லாமல் அழிக்கபபட மறுபகுதியினர் அன்னியதேசங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் புகலிடத்திலிருந்து மட்டும் தான் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை எதிரொலிக்க முடியும் என்ற நிலை உருவாகியிருந்தது.

சோவியத் ரஷ்யாவிலிருந்து வியட்நாம் வரை வெற்றிபெற்ற போராட்டங்களில் பெரும்பாலானவை தனது கருத்துப்பலத்தின் பின்புலமாக அன்னிய தேசங்களையே கொண்டிருந்தன.

ஆனால் இன்று அது தலைகீழாகிவிட்டது. ஈராகின் இன்றைய அமரிக்க ஏஜன்டுகள் பிரித்தானியாவிலும் அமரிக்காவிலுமிருந்துதான் உருவாக்கப்பட்டவர்கள். சுனி முஸ்லீம்களுக்கும் ஷியா முஸ்லீம்களுக்குமான புகலிடக்குழுக்கள் சதாமின் சர்வாதிகாரத்திற்கெதிரான ஜனநாயக முற்போக்காளர்களாக சதாம் காலகட்டத்தில் சித்தரிக்கப்பட்டவர்கள். இதே ஜனநாயக முன்னணிகளைத்தான் இன்று ஈராகில் தனது இராணுவ கொலை வெறிக்கு அமரிக்க அணி பயன்படுத்திக் கொள்கிறது.

ஆக, போர்ச் சூழல் ஏற்படுத்தவல்ல இராணுவமயச் சூழலிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளும் அரசியல் சக்திகளை மறுகாலனியாக்கத்திற்கான திறவுகோலாக ஏகாதிபத்தியங்கள் பயன் படுத்திக்கொள்வது மட்டுமன்றி இதற்கு இயைவடைய மறுப்பவர்கள் மீது வன்முறையையும் சேறடிப்புக்களையும் மேற்கொண்டு அவர்களை அன்னியப்படுதும் புதிய தந்திரோபாயம் புகலிட சூழலிலும் கையாளப்படுகின்றது என்பதை அவதானிக்கலாம்..

இந்த அரசியல் பகைப் புலத்திலிருந்துதான் புலிகள் நாடாத்திய சபாலிங்கம் கொலைச்சம்பவம் ஈறாக இன்றைய தாதா பாணியிலான அரசியல் வன்முறைகளையும் நோக்கமுடியும்.

2002 ஆம் ஆண்டு பிரான்சில் வசிக்கும் அஷோக் யோகன் கண்ணமுத்துடனான கருத்துமுரண்பாட்டைத் தீர்த்துக் கொள்வதற்காக சுகன், ஷோபா ச்க்தி, தேவதாசன், ஞானம் போன்ற முரண்பாடுகளை அரசியலாக்கும் புகலிட அரசியலாளர்கள் தாதா பாணியில் அஷோக்கின் மீது குண்டர்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதே நபர்கள் மறுபடியும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டபோது அது அம்பலத்திற்கு வந்து புலம்பெயர் சூழலில் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திற்று. பரிஸ் சார் இலக்கிய அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் இன்று இது அறியப்பட்ட சம்பவமாகிவிட்டது.

பாரிசின் தமிழர்கள் கூடும் இன்னொரு அறியப்பட்ட பகுதியான மார்கதே புவாசனியே என்ற இடத்திலுள்ள உணவு விடுதியையும் இதே குழுவினர் சிறிய முரண்பாட்டின் விளைவாக அடித்து சேதப்படுத்தினர்.

புலிகளுக்கெதிரானதும் யுத்தத்திற்கெதிரானதுமான சுவரொட்டிகள் பாரிஸ் தமிழர்கல் கூடுமிடங்களில் ஒட்டப்பட்டபோது அதை கிழித்தெறிந்த இதே குழுவினர் தம்மைப் புலிகளுக்கெதிரானவர்களாகவும் தீவிர ஜனநாயகவாதிகளாகவும் பிம்பத்தைக் கட்டமைத்துக் கொள்கின்றனர்.

இவை எல்லாவற்றினதும் உச்ச வடிவமாக புலியெதிர்ப்பாளர்கள் எனக் கூறிகொள்ளும் இந்த எஸ்.எல்.டி.எப் என்ற குழுவைச் சேர்ந்த சில நபர்கள் தீவிர புலியெதிர்ப்பு வானொலியான ரீ.பீசீ ஐக் கொள்ளையடித்து சேதப்படுத்தியதாக செய்திகள் கசிய ஆரம்பித்துள்ளன.

இதே நபர்களின் வன்முறையையும் மிரட்டல்களையும் முன்னதாகவே பல சமூக உணர்வுள்ள அரசியல் ஆர்வலர்கள் சந்தித்துள்ளார்கள்.

இந்த இலண்டன் குழுவினரும் பாரிஸ் குழுவினரும் வன்முறை, தனிநபர் மீதான தாக்குதல் என்ற ஒருங்கு புள்ளியில் இணைந்து கொள்ள, முதலில் தலித் முன்னணி உன்றுகூடல் பரிசிலும் இலண்டனிலும் நடந்து முடிய, அதன் தொடர் நிகழ்வாக “நெடுங்குருதி” நிறைவேறியது.

இந்னிகழ்வின் பிரதம ஏற்பாட்டாளரன குகன் தெய்வேந்திரன் என்ற நன்கறியப்பட்ட பாரிஸ் தமிழ் தாதா, நெடுங்குருதி நிகழ்வின் சற்று முன்னதாக துபாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் பிரஞ்சு குற்றத்தடுப்புப் பொலீசாரால் கைதுசெய்யப்பட, ஷோபா சக்தி ஏற்பாட்டாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள, இலண்டனிலிருந்து வருகைதந்த ராகவன் தலைமையில் நெடுங்குருதி நிகழ்ந்தேறியது.

குகன் கைதைத் தொடர்ந்து அதே தாதாக்கள் பாணியில் ஏனைய வன்முறையாளர்களால் கூட்டம் நடாத்திமுடிக்கப்பட்டது.

இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த அ.மார்க்ஸ் என்ற எழுத்தாளர் ஏனைய எஸ்.எல்.டி.எப் உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு முதலமச்சர் பிள்ளையானின் ஆலோசகரான ஞானம் ஆகியோரை முன் நிலைப்படுத்திய இந்ந்திகழ்வில் வன்முறையின் எதிரொலியாக மிகக் குறைவான எண்ணிக்கையினரே கலந்து கொண்டனர்.

புலம் பெயர் சூழலில் முதலாளித்துவ ஜனநாயகம் வழ்ங்கும் இடைவெளியை ஆரோக்கியமான, ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்திக் கொள்ளும் நம்பிக்கை படிப்படியாகச் சிதறடிக்கப்படுகிறது,
வரலாற்றை மனிதர்கள் படைப்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் குறித்த வரலாற்றுக்கட்டத்தினது உருவாக்கமே. ஆக கருத்தைப் படைப்பதில், வரலாற்றைப் படைப்பதில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒரு குறித்த எல்லைவரையான பாத்திரமுண்டு. இது கருத்திற்கும், வரலாற்றுக் கட்டத்திற்குமான ஒரு இயங்கியல் தொடர்பை உருவாக்கிறது. மாறுனிலை கொண்ட இத்தொடர்பானது இறுதியாக கருத்திற்கும் மனித வாழ்னிலைக்கும், சமூகத்திற்கும் இடையிலான தொடர்பாகிறது. தொடர்ச்சியான நிலையற்ற இந்தத் தன்மையின் வெளிப்பாடே மனிதன். நேற்றைய எனது தவறுகள் நிறைந்த கருத்துக்களை இன்று நான் செழுமைப்படுத்திக் கொள்ளமுடியும், என்னை விமர்சனத்திற் குட்படுத்துவதூடாக!
கருத்துச் சுதந்தித்தை மறுக்கும் வன்முறையாளர்கள் இனியாவது தம்மைச் சுய விமர்சனத்திற்குட்படுத்துவதனூடாக புதிய ஜனநாயவெளியைச் சுதந்திரமானதாக கட்டமைக்க உதவ வேண்டும்.
 நாம் இழந்தவை ஏராளம். மாறாகப் பெற்றுக்கொண்டவை பூஜ்யமே. இழப்புக்களிலிருந்து கற்றுக்கொண்டு எதிர்காலத்தை நம்பிக்கையோடு நோக்குவோம்.

Exit mobile version