Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புதுடில்லியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி அலுவலகம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் புதுடில்லியில் தமது கட்சி அலுவலகம் ஒன்றை திறக்கவிருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் கட்சி அலுவலகம் திறப்பது தொடர்பில் பேச்சு நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் கொழும்பிலும் புதிய காரியாலயம் ஒன்று திறக்கப்படவுள்ளது.

எனினும் கொழும்பில் தமது காரியாலயத்தை நிர்மாணிப்பதற்கு யாருடைய அனுமதியையும் கோரத் தேவை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு பல்வேறு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பில் கூட்டமைப்பு பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர் , மனோகணேசன் உள்ளிட்டவர்களுடனும் பேச்சு நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version