Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரபாகரன் இலங்கைப் படைகளால் கொல்லப்பட்டமை குறித்து சனல் 4 ஆவணப்படத்தில்

இலங்கை அரச படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான இறுதி யுத்தத்தில் போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கு ஆதாரமாக சனல் 4 புதிய வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளது.
இதன் பெயர் இலங்கையின் கொலைக்களம் – தண்டனைக்கு உட்படுத்தப்படாத போர்க் குற்றங்கள் என்பது. 60 நிமிட வீடியோ ஆவணம். இங்கிலாந்து கிறிக்கெற் அணி இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டு வருவதற்கு முதல் நாள் திரையிடப்பட உள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன், சிவிலியன்கள் உட்பட ஏராளமானோர் அரச படையினரால் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர் என்பதற்கு முன்பு வெளிவந்து இராத வீடியோ ஆதாரங்கள் இப்படத்தில் காண்பிக்கப்படுகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கை அரச படையினரால் படுகொலை செய்யப்பட்டு உள்ளார் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி.
புலி சார் அரசியல் வியாபாரிகள் தமிழ் நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் பிரபாகரன் உயிரோடு வாழ்கிறார் என்று இதுவரை நடத்திய நாடகம் இந்த ஆவணப்படத்தின் பின்னர்முடிவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version