பிரபாகரன் சரணடைந்த பின்னர் அரசபடைகளால் கொல்லப்பட்டார் என மனித உரிமைகளுக்கான யாழ்.பல்கலைகழக ஆசிரியர் சங்கம் அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது.
சரணடைந்த பின்னரே கோரமாகக் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் பிரபாகரன் கொலை குறித்த போர்க் குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரேலிய ஊடகமான வை நெட் நியூசிற்கு டொனால்ட் பெரேரா வழங்கிய செவ்வி ஒரு ஆதாரமாகும்.
முன்னை நாள் விமானப்படை அதிகாரியான இவர் இப்போது இஸ்ரேலில் வசிக்கும் தூதர். இவரது மனைவி இராணுவ பல்வைத்தியர். இஸ்ரேலில் மனைவி மற்றும் மகளோடு சுற்றுப்பயணம் செய்யப்போவதாக உற்சாகமாகக் கூறுகிறார்.
இவர் பிரபாகரனின் இரத்தம் தோய்ந்து உறந்த படுக்கை ஒன்றில் பிரபாகரனின் உடல் காட்ட்டின் ஊடாகத் தூக்கிவரப்படுவதைக் கண்ணுற்றதாகக் கூறுகிறார். அதன் பின்னர் பிரபாகரனின் கைத் துப்பாக்கியை காட்டுமாறு கேட்கிறார். அதன் இலக்க்கம் 001 என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறார். அதன் பின்னரே பிரபாகரன் இறந்ததை உறுதிப்படுத்திகொண்டேன் என்கிறார். அதன் பின்னர் வீடு சென்ற அவர் தனது மனையிவிடம் தான் ஓய்வெடுக்கப் போவதாகக் கூறுகிறார்.
இவரின் இந்தக் கூற்று, பிரபாகரன் சரணடைந்த பின்னரே கொல்லப்பட்டதற்கான போர்க்குற்ற ஆதாரமாகக் கருதப்படலாம்.