Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பியர் விலைக்குறைப்பால், கள்ளு விற்பனையில் வீழ்ச்சி!

பியர் விலைக் குறைப்பினால் நாட்டில் கள்ளுவிற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக வடமாகாண பனை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் 50 வீதமான கள்ளுப்போத்தல்கள் விற்பனையின்றி தேங்கிக் கிடப்பதாகவும் அக்கூட்டுறவுச் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொர்பாக பனை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் வலிகாமப் பிரதேசத்தின் தலைவர் செல்வராசா தெரிவிக்கையில்,

பியரின் விலையை அரசாங்கம் குறைத்துள்ளதால் உள்ளூர் உற்பத்திக் கள்ளின் நுகர்வு குறைவடைந்துள்ளதுடன், தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த கள்ளின் அளவும் குறைவடைந்துள்ளது எனத் தெரிவித்தார்.

இதனால் கள்ளு இறக்கி தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் பல குடும்பங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மைத்திரிபால சிறிசேன ‘போதையற்ற நாட்டினை ‘ உருவாக்குவோம் எனக் கூறிக்கொண்டு நாடுபூராகவும் பல நிகழ்வுகளை நடத்தி வருகின்றார்.

ஆனால் மறுபுறம் வரவு-செலவுத் திட்டத்தில் பியரின் விலைiயைக் குறைக்கின்றது அரசாங்கம்.

ஒருபுறம் மக்களுக்கு போதையற்ற நாட்டை உருவாக்குவதற்கு தாம் போராடுவதாகக் காட்டிக்கொண்டு மறுபுறம் பியரின் விலையைக் குறைத்து மக்களை போதைக்கு அடிமையாக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியுள்ளது.

நாட்டைக் கடனில் தள்ளிய அரசாங்கம், ஒருபுறம் மக்களின் பணத்தினைக் கொள்ளையடித்து, மக்களை போதைக்கு அடிமையாக்குவதுடன், ஆட்சியிலுள்ளவர்கள் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி சொத்துக்களைக் கொள்ளையடிப்பதுடன், கொள்ளை இலாபம் ஈட்டுவதற்காக நாடுதழுவிய ரீதியில் பல மதுபான உற்பத்தி நிலையங்களைத் திறந்து வருகின்றனர் என்பது வெளிப்படை.

அத்துடன், உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் கள்ளுக்கு வரி விதிக்கும் அரசாங்கம், இயற்கையான கள்ளுக்கு தடைவிதித்து அத்தொழிலில் ஈடுபட்டு வரும் மக்களை மேலும் வறுமைக்கோட்டுக்குப்படுத்தும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.

Exit mobile version