Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நோர்வே அரசு புதிய தலையீட்டுக்குத் தயார் : புதிய அச்சங்களின் ஆரம்பம்

புலம்பெயர் தமிழர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்கள் அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் நாடு கடந்த தமிழீழ இராச்சிய உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈழப் போராட்டத்தை முழுமையாகச் சிதைவடைவதற்கும் காட்டிக்கொடுப்பதற்கும் தனாலான அனைத்துப் பங்களிப்பையும் மேற்கொண்ட நோர்வே அரசு உலகின் பல நாடுகளில் போராட்டங்களை அழிப்பதில் முன்நின்று செயற்பட்ட நாடாகத் திகழ்கிறது.
இன்றைய தேவை மத்தியஸ்தமல்ல இலங்கை அரசின் போர்க்குற்றங்களை உலக அரங்கில் வெளிப்படுத்துவதாகும். இன்னும் பல நாடுகள் இனப்படுகொலையையும் போர்க்குற்றங்களையும் மேற்கொண்ட பின்னரும் ஆட்சியதிகாரத்தில் நிலைப்பதற்கு இது வழிவகுக்கும் என்பதெல்லாம் நாடுகடந்த அரசிற்கும் எரிக் சொல்கைமிற்கும் ஒரு பொருட்டே அல்ல.
இன்று வரை இலங்கை அரசிற்கு எதிரான செயற்பாடுகள் எதனையும் மேற்கொள்ளாத நாடுகடந்த அரசு இனப்படுகொலைகளையும் போர்க்குற்ரங்களையும் அங்கீகரிக்கிறதா என்ற கேள்வியெழுப்பப்படும் இன்றைய நிலையில் நோர்வே அரசின் இந்தக் இச் செய்தி சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அமைகிறது.

Exit mobile version