
இன்றும் இலங்கை அரசிசோடு பேரம் பேசுவதற்காக அமரிக்க தரப்பு அலைகிறது. பொருளாதார நெருக்கடியில் மூழ்கும் அமரிக்கா மாலைதீவு போன்ற சிறியநாடுகளைக்கூட விட்டுவைத்ததில்லை. ராஜபக்ச போன்று மற்றொரு இனக் கொலையாளியை ஆட்சிக்கு அமர்த்தி இனப்படுகொலையை அமரிக்கா திவிரப்படுத்த முயற்சித்தாலும் ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களுக்கு ஆதரவாக அவர்கள் முன்வர மாட்டார்கள். இதே வேளை மக்களை மாயைக்குள் வைத்திருக்க முற்படும் குறுந்தேசிய தமிழ் ஊடகங்கள் அமரிக்க தமிழ் மக்களுக்கு உதவப்போவதாகப் பொய்ப்பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.