
02.09.2011 செவ்வாய் மாலையிலிருந்து ஏழுமணிவரை இப் போராட்டம் நடத்தப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போராட்டம் இந்திய அரசை இரஞ்சும் வகையில் நடைபெறுமா அன்றி இந்திய அரச பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக அமைந்திருக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
இந்திய அரசு பழங்குடி மக்களை வேட்டையாடுகின்ற செய்தி வருகின்ற போதெல்லாம் உணர்ச்சி பூர்வமான போராட்டங்கள் இந்தியத் பிரித்தானியாவிலுள்ள இந்தியத் தூதரகத்திற்கு முன்னால் நடைபெற்றது. நேபாள மாவோயிஸ்டுக்களின் ஆதரவாளர்கள் ஐரோப்பாவில் போராட்டம் நடத்துகிறார்கள் என்று செய்தி வந்தால் அது இந்தியத் தூதரகத்தின் முன்னால் நடக்கும் ஆர்ப்பாட்டமாகத் தானிருக்கும்.
பிரித்தானியாவில் முன்னதாக சிலர் போராட்டங்கள் நடத்த முயன்ற போதும் பொலீஸ் அனுமதி வழங்க மறுத்திருந்தது. இப்போது போராட்டத்திற்கான அனுமதியாவது வழங்கப்பட்டுள்ளது. இப் போராட்டம் நாடுகடந்த தமிழீழத்தின் போராட்டம் என்பதற்கு அப்பால் ஏனைய அமைப்புக்களும் இச் சந்ததர்பத்தைப் பயன்படுத்தித் தாமும் கலந்துகொள்வதும் சுயாதீனமான சுலோகங்களை முன்வைப்பதும் இந்திய அரசை அம்பலப்படுத்துவதும் அவசியமானது.