Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தூக்குத் தண்டனை – நாடுகடந்த தமிழீழம் இந்தியத் தூதரகத்தின் முன்னால் போராட்டம் அறிவிப்பு

நாடுகடந்த தமிழீழத்தைச் சேர்ந்தோர் லண்டன் இந்தியத் தூதரகத்தின் முன்பாக போராட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். ரஜீவ் கொலையுடன் தொடர்பற்ற மூன்று சாமானியர்களான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரைக் கொலைசெய்யத் திட்டமிட்டிருக்கும் இந்திய அரசிற்கு எதிராகவும் அதனை மௌனமாக அங்கீகரிக்கும் தமிழக அரசுக்கு எதிராகவும் பரவலான போராட்டங்கள் தமிழகம் எங்கும் நடைபெற்று வருகின்றன.

02.09.2011 செவ்வாய் மாலையிலிருந்து ஏழுமணிவரை இப் போராட்டம் நடத்தப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போராட்டம் இந்திய அரசை இரஞ்சும் வகையில் நடைபெறுமா அன்றி இந்திய அரச பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக அமைந்திருக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

இந்திய அரசு பழங்குடி மக்களை வேட்டையாடுகின்ற செய்தி வருகின்ற போதெல்லாம் உணர்ச்சி பூர்வமான போராட்டங்கள் இந்தியத் பிரித்தானியாவிலுள்ள இந்தியத் தூதரகத்திற்கு முன்னால் நடைபெற்றது. நேபாள மாவோயிஸ்டுக்களின் ஆதரவாளர்கள்  ஐரோப்பாவில் போராட்டம் நடத்துகிறார்கள் என்று செய்தி வந்தால் அது இந்தியத் தூதரகத்தின் முன்னால் நடக்கும் ஆர்ப்பாட்டமாகத் தானிருக்கும்.

பிரித்தானியாவில் முன்னதாக சிலர் போராட்டங்கள் நடத்த முயன்ற போதும் பொலீஸ் அனுமதி வழங்க மறுத்திருந்தது. இப்போது போராட்டத்திற்கான அனுமதியாவது வழங்கப்பட்டுள்ளது. இப் போராட்டம் நாடுகடந்த தமிழீழத்தின் போராட்டம் என்பதற்கு அப்பால் ஏனைய அமைப்புக்களும் இச் சந்ததர்பத்தைப் பயன்படுத்தித் தாமும் கலந்துகொள்வதும் சுயாதீனமான சுலோகங்களை முன்வைப்பதும் இந்திய அரசை அம்பலப்படுத்துவதும் அவசியமானது.

Exit mobile version