Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தீவிரமடைந்துள்ள தேசியக்கொடிப் பிரச்சனை – சர்வேஸ்வரனுகு மறைமுக அச்சுறுத்தல் விடுத்தார் கூரே!

கடந்த வாரம் வவுனியா மாவட்டத்திலமைந்துள்ள பரக்கும்பா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தேசியக் கொடி ஏற்றாமை தொடர்பில் பலத்த விமர்சனங்களை வெளியிட்டு வரும் சிங்கள இனவாத அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் போன்றவர்கள் உட்பட வடமாகாண ஆளுநரும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையானது ஒரு ஜனநாயக சோசலிசக் குடியரசு நாடாகும். இவ்வாறான ஜனநாயக நாட்டில் தேசியக் கொடியை ஏற்றாமல் விடுவதற்கு கல்வி அமைச்சர் சர்வேஸ்வரனுக்கு முழு உரிமையும் உண்டு. இருந்தாலும், (இலங்கை ஒரு சோசலிச நாடு எனக் கூறிக்கொள்ளும் சிங்கள ஏகாதிபத்திய அரசாங்கம் இங்கு வாழும் பிற இனங்களை விலங்குகளைப்போல் வேட்டையாடி வந்தநிலையில் தற்போது,, அவ்வினங்களை அடக்கி ஒடுக்கி, அவர்களின் உழைப்பையும் சுரண்டி உல்லாச ஆட்சி செய்துவருகின்றமை கண்கூடு.

ஆனால், சிங்கள இனவாதிகள் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் சிறிலங்கா அரசியலமைப்பை மீறிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கருத்துக்களை வெளியிட்டுவரும்நிலையில், அதற்கேற்றாற்போல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் சர்வேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கொதித்தெழுந்துள்ளார்.

மேலும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட சர்வேஸ்வரன் தேசியக் கொடி ஏற்றாதது தவறு எனத் தெரிவித்தமையும் வேடிக்கையானதே.

இவை இவ்வாறிருக்க, வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, சர்வேஸ்வரன் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளதுடன், இதனால் சர்வேஸ்வரன்மீது எடுக்கப்படும் நடவடிக்கையானது பாரதூரமாக இருக்கும் எனவும் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Exit mobile version