Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

’தி பேமிலி மேன் 2” தொடரை தடை செய்ய தமிழக அரசு மத்திய அரசுக்குக் கடிதம்!

அமேசான் பிரைம் தளத்தில் தி பேமிலி மேன் என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.இது ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமான காட்சிகள் உள்ளாதாக கூறப்படுகிறது. இந்த தொடருக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழக அரசும் இந்த தொடரை தடை செய்யுமாறு கோரி இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. தமிழக ஒளிபரப்புத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், தி பேம்லி மேன் 2 ” தொடர் குறித்து, அத்தொடரின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே. வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ் மக்கள் மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் உணர்வுகளை நாங்கள் நன்கு அறிவோம். தமிழ் மக்கள் மீது மிகுந்த அன்பையும், மரியாதையையும் தவிர வேறு எதுவும் இல்லை. நிகழ்ச்சியை வெளியிடும் போது அனைவரும் காத்திருந்து பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.என்று கேட்டுள்ளார்கள்.

”தி பேமிலி மேன் 2” சீரியலை தடை செய்ய வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த படத்தை இயக்கும் ராஜ் மற்றும் டி.கே. இருவரும் திருப்பதியைச் சேர்ந்தவர்கள் .தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்கள். Raj Nidimoru and Krishna D.K. were born and brought up in Tirupati and Chittoor respectively. Their mother tongue is Telugu.

Exit mobile version