Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தயாமாஸ்டர் பேரினவாத பாசிசக் கட்சியின் உறுப்பினரானார்

dhayamasterவன்னிப்படுகொலைகள் நடைபெறும் வரையில் புலிகளின் முக்கிய உறுப்பினராகவிருந்த தயா மாஸ்டர் என்ற பிழைப்புவாதிக்கு மகிந்த ராஜபக்சவின் சுதந்திரக்கட்சி உறுப்புரிமை வழங்க்கபட்டது. கே.பி, கருணா வரிசையில் அழித்தவர்களுடனேயே கைகோர்த்துக்கொண்ட முக்கிய நபர் தயா மாஸ்டர் என்பவர். வடக்கில் நடைபெறும் மாகாண சபைத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் கட்சியின் வேட்பாளராக இவர் பயன்படுத்தப்படுவார். தேர்தலில் பங்குபற்றுவதற்கான நேர்முகப் பரிட்சையில் நேற்று இந்த நபர் கலந்துகொண்டார். ஆயிரக்கணக்கான ஒன்றுமறியாத புலிப் போராளிகள் சிறையில் வாடுகின்றனர். ஆயிரக்கணக்கானவர்களின் கதி என்னவென்று தெரியாது. இலங்கை அரச பயங்கரவாதிகள் பிழைப்புவாதிகளைத் தங்களோடு இணைத்துக்கொள்வதன் ஊடாக சிங்கள மக்களுக்கு தாங்களை நியாயமானவர்களாகக் காட்டுகின்றனர்.

Exit mobile version