Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் ஈழத்தை உருவாக்குவோம் : சிங்கக் கொடிக் கட்சியின் இரட்டை வேடம்

புலம் பெயர் நாடுகளின் தமிழர்களதும் இந்தியாவின் தமிழ் இனவாதத்திற்கு உட்பட்டோரின் ஆதரவுத் தளத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக வாக்குப் பொறுக்கிக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படையாக இரட்டைவேடம் போடுகிறது. அக்கட்சியில் ஏக தலைவரான இரா.சம்பந்தன் சிங்கக் கொடியோடு காட்சி தரும் அதே வேளை அதன் மற்றொடு பாராளுமன்ற உறுப்பினரான சிறீ தரன் தமிழ் ஈழத்தை உருவாக்குவோம் என்று கூறியுள்ளார்.
‘எமது இறுதி நோக்கம் தமிழீழம். அதனை விரைவில் உருவாக்குவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாம் புலம்பெயர் மக்கள் மற்றும் தமிழக மக்களுடன் சேர்ந்து “தனித் தமிழ் ஈழத்தை உருவாக்குவோம், ஈழமே எங்கள் இறுதி நோக்கம்’’ என்றும் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் வீக்கெண்ட் லீடர் இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Exit mobile version