Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் இணையங்களின் சுதந்திரக் கருத்தாடல் : தேசம்நெற்றில் ஆரம்பம் – சபா நாவலன்

மொழி, பிரதேசம், வர்க்கம், சாதி, இனம் என்ற முரண்கள் நிறைந்த சமூகக் கட்டமைவுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், புதிய கருத்தியலின் உருவாக்கத்திற்கான தேவையை பல சந்தர்ப்பங்களில் மறந்து போய்விடுகிறோம். இரண்டாயிரம் வருடங்களாக எம்முள் சுமந்து கொண்டிருக்கும் சொத்துடமைச் சிந்ததனை முறை ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சுதந்திரமான கருத்தியலை வழிமறித்து வடிகட்டிவிடுகிறது. புலம் பெயர் தேசத்தில் நமது வாழ்நிலை திர்மானிக்கும் சிந்தனைப் போக்கானது இலாப நோக்குடையதாகவும், அதிகாரத் தன்ன்மை வாய்ந்ததாகவும் அமைந்துவிடுகிறது.

போர்க் குணாம்சமும், சுயமாகச் சிந்திக்கும் தன்மையும் அற்றுப்போய் அழிந்துகொண்டிருந்த, புலம்பெயர் சூழலில் அரசியல் சக்திகளின் சார்புனிலைகள் தெளிவாகத் தெரியவாரம்பித்த காலபகுதியில், நம்பிக்கையின்மைக்கும் விரக்தி மனோனிலைக்கும் நடுவில் தேசம்னெற் இணையத்தின் வரவானது புதிய கருத்துப் பரிமாறல்களுக்கும், ஏற்கனவே ஆதிக்கம் செலுத்திய அதிகாரம் சார்ந்த கருத்தியலின் மீது தயவு தாட்சண்யமற்ற விமர்சனத்தை முன்வைப்பதற்கும் வழிசமைத்தது.

இணயத் தொழில் நுட்பம் ஏற்படுத்த்திக் கொடுத்த புதிய விமர்சன முறையானது புலம்பெயர் எல்லைகளுக்கு அப்பாலும் விரிந்தது. பல வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியது. இலங்கை அரசியல் பற்றிப் பேசுகின்ற எந்த ஊடகமும் தேசம் நெற்றை தொட்டுக்கொள்ளாமல் மேற்செல்வதில்லை.

இந்த ஜன நாயக வெளியானது புரட்சிக்கான தளமோ அல்லது அதன் ஆரம்பமோ கூடக் கிடையாது. ஆனால் குறைந்த பட்சம் இழந்து போன நம்பிக்கையை பலருக்கு மீட்டுக் கொடுத்திருக்கிறது.

பேசுவதற்கான வெளியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வெளியைப் பயன்படுத்திக் கொள்வதற்குப் பதில் புலம்பித் தொலைக்கும் கனவான் களுக்கும் கூட்டம் போட்டுக் கூக்குரலிடும் பரம்பரை ஜன நாயக ஜாம்பவான் மிரண்டு போயிருக்கிறார்கள்.

ஒவ்வொரு மக்கட் கூட்டமும், ஒவ்வொரு சமூக அமைப்பும் ஒவ்வொரு குறித்த வரலாற்றுக் காலகட்டத்திற்கானதே. ஐரோப்பாவில் தேசிய இனங்கள் உருவாகி மக்கள் ஒன்றிணைந்த காலகட்டம் இன்றில்லை. மன்னர்கள் சண்டைபோட்டு நாடுகளைத் தம்வசமாக்கிக் கொண்டிருந்த காலகட்டம், விவசாய நிலங்களோடும் அது சார்ந்த உற்பத்தி முறையோடும் மட்டுமே மக்கள் பிணைக்கப்பட்டிருந்த காலகட்டம் இன்றில்லை.

ஆனால் எமது சமூகத்தில், மூன்றாமுலக நாடுகளில், எப்படி மாறாத் தன்மையைப் பேணுவதென்றும், எமது சிந்தனைப் போக்கை மாற்றங்களற்றதாகப் பேணுவதென்றும் ஏகாதிபத்தியங்கள் அறிந்து வைத்துள்ளன. நிலத்தோடு மடிந்துகொண்டிருக்கும் தொலை கிராமத்து விவசாயியிலிருந்து மாற்றங்களை வரலாற்று நிகழ்ச்சிப்போக்காக தனது தத்துவ முறையிலேயே ஏற்றுக்கொள்ளும் மார்க்சியர்கள் வரை புதியனவற்றை ஏற்றுக் கொள்ளும் சிந்தனை மரபை வளர்த்துக்கொள்ளப் பின்நிற்கிறார்கள்.

புதிய தொழில் நுட்பம் ஏற்படுத்தும் மாற்றங்களை கருத்துருவாக்கத்தில் நாம் எவ்வாறு உள்வாங்கிக் கொள்கிறோம்?

சமூகத்தின் நினைவுத் திறன்(Social Memory) தொடர்பாக நடைபெற்ற ஆய்வொன்றில் இந்நினைவுத் திறனின் வாழ்வுக்காலம் இணையத் தொழில் நுட்பத்தின் வருகைக்குப் பின்னர் நீடித்திருப்பதாகவும் இது மக்களின் சிந்தனைப் போக்கில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் ஜூன் 2007 இகொனமிஸ்ட் இதழ் கட்டுரை பிரசுரித்திருந்தது.
பல்கலைக் கழகமட்ட மனித்வியலிலும் கூட இவ்வாறான ஆய்வுகள் புதிதாக மேற்கொள்ளப்படுகின்றன. இன்றைய நிகழ்வொன்று இணையத்தில் பதியப்படும் போது பல நீண்ட வருடங்களின் பின்னரும் அது அழியாப் பதிவாகக் காணப்படும் என்பதே இதன் அடிப்படை. சமூக வலைத் தளங்களான (Social Networks), myspace, hi5, bebo, .. என்பன இதில் முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றன. இந்தக் கருதாக்கத்தின் அடிப்படையிலேயே பெனடிக்ட் அன்டர்சனின் தொலைதூர தேசிய வாதம் (Distance Nationalism) என்ற தவறான வாதமும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
இந்த சமூக நினைவுத் திறன் தொடர்பான பிரச்சனையை இடது சாரிச் சிந்தனைப் போக்கையும் சுதந்திரமான விவாதத்திறனையும் கட்டியெழுப்புவது தொடர்பாக நாம் ஏன் உரையாடக்கூடது.?

புலம் பெயர் தமிழ் இணையச் சூழலிலும் அதற்கு அப்பாலும் தேசம்னெற் இணையத்தளம் உருவாக்கிய தளத்தை பயன்படுத்திக்கொள்ல் என்பது எமது சமூகச் சூழலில் புதியன வருதலை வேகப்படுத்த்லாம்..

Exit mobile version