
ஏற்கனவே இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயற்படமாட்டோம் என சீமான் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது
1985-ல் டெசோ என்ற தமிழீழ அதரவு இயக்கம் உருவாக்கப்பட்டது. அது பின்னர் செயலிழந்துவிட்டது. தற்போது ஈழத்தில் யுத்தம் முடிந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு “தமிழீழம் நிறைவேற வேண்டும் என்பதுதான் தன் வாழ்நாள் ஆசை” என்று கூறி அண்மையில் டெசோ மாநாட்டை கருணாநிதி புதுப்பித்தார்.
இந்த அமைப்பின் சார்பில் விழுப்புரத்தில் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 12-ந் தேதி சென்னையில் மாநாடு நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் “தமிழீழம்” என்பது எங்கு அமைந்தாலும் அது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று கூறி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான தடையை மேலும் நீட்டித்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திடீரென கருணாநிதியை நேற்று சென்னையில் சந்தித்து பேசினார்.
இதனால் டெசோ மாநாட்டை திமுக நடத்துமா? அல்லது தமிழீழ கோரிக்கையை மென்மையான குரலில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த சந்தேகங்களுக்கு இன்று திமுக தலைவர் கருணாநிதி பதிலளித்திருக்கிறார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழீழத்துக்கு ஆதரவாக தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கமான டெசோ அமைப்பு நடத்தும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படமாட்டாது என்று அதிரடியாக கூறியிருக்கிறார்.