Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளரை மண்வெட்டி கொண்டு துரத்திய சிறிதரனின் அடியாட்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் பிரமந்தனாறுப் பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறு;ப்பினர் சிறிதரனின் அடியாட்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை மண்வெட்டிகொண்டு துரத்தியுள்ளனர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தனது கோட்டையாக வைத்திருக்கும் கிளிநொச்சியில் வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், பிரமந்தனாறுப் பிரதேசத்தில் தனது கையாள் ஒருவர் போட்டியிடுவதால் உதயசூரியன் கட்சியைச் சேரந்த வேட்பாளருக்கே தனது அடியாட்களைக் கொண்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறிதரனால் தேர்தலில் போட்டியிட்டுவதற்காக களமிறக்கப்பட்டவர்கள் அனைவரும், ஏதோ ஒரு வகையில் சமூகத்தை அழிக்கும் நோக்குடையவர்களே. உதாரணத்துக்கு வேழமாகிலிதன் என்பவர், பல பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டவர்.

இதேபோன்று தர்மபுரத்தில் கந்துவட்டி வாங்கும் ஒருவரை நியமித்த சிறிதரன், உண்மையில் மக்கள் நலன் கருதி, மக்களுக்குச் சேவை செய்யும் தொண்டர்கள் எவரையுமே நியமிக்காது, தனக்கு நெருங்கியவர்களை வேட்பாளர்களாக நியமித்துள்ளார்.

Exit mobile version