
மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் 14-வது தேசிய மாநாடு மட்டக்களப்பில் நேற்று தொடங்கியது. மாநாட்டையொட்டிய பொதுச்சபைக் கூட்ட்டத்தில் தலைவர் மற்றும் இதர நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவராக இரா. சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் ஆண்டறிக்கையை செயலாளர் மாவை சேனாதிராசா தாக்கல் செய்தார்.
இவர்களுடன் 8 மாவட்டங்களுக்கு துணைத் தலைவர்களும், 12 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ் ஈழம் கோரிய விடுதலை இயக்கங்களின் தத்துவார்த்தப் பின்புலமாக தமிழரசுக் கட்சியே திகழ்ந்தது. தமிழரசுக் கட்சி சிங்கள ஆளும் வர்கத்திற்குச் சார்பான நிலைப்பாட்டையே தனது வரலாறு முழுவதும் கொண்டிருந்தது. தேசிய இன விடுதலைக்கான போராட்டங்களும் கூட சிங்கள ஆளும் வர்க்கத்துடன் அடிப்படையில் முரண்படாத வகையிலேயே நடத்தப்பட்டது.