Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தனி ஈழம் அமைவது தொடர்பான பொதுஜன வாக்கெடுப்பு : மீண்டும் கருணாநிதி

இலங்கையில் தனி ஈழம் அமைவது தொடர்பான பொதுஜன வாக்கெடுப்பு நடத்துவதை தான் ஆதரிப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய நாடுகள் அமைப்பினால் நடத்தப்பட்ட இவ்வாறான வாக்கெடுப்பு முறையின் கீழ் சில நாடுகள் அங்கீகாரம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், ஐ.நா. சபையின் தலையீட்டின் கீழேயே தமிழ் ஈழம் அமைப்பதற்கான இந்த வாக்கெடுப்பும் நடத்தப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பான நடவடிக்கைகளில் இந்திய அரசு ஒரு முக்கிய பங்காற்ற முடியும் என்று தெரிவித்துள்ள கருணாநிதி, இதை செயல்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு இந்தியா ஆதரவும், அழுத்தமும் தரவேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் அரசிற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் முனைப்படையும் வேளைகளில் எல்லாம் அன்னிய நாடுகள் ஈழம் பெற்றுத்தரப்போவதான விம்பத்தை உருவாக்கி போலியான நம்பிக்கைகளை உருவாக்கி போராட்டங்களை மழுங்கடிப்பது வழமையான நிகழ்வு. புலம்பெயர் ஐந்தாம் படைகள் உட்பட பலர் இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version