Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

டெல்லி மாநகராட்சி தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து மன்மோகன் சிங்

டெல்லி மாநகராட்சி தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து மன்மோகன் சிங்கிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.
அப்போது அவர் கூறுகையில்; தேர்தலில் வெற்றி-தோல்வி என்பது வழக்கமான ஒன்றுதான் என்றும், அதை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், இது உள்ளாட்சி தேர்தல் என்பதால் இதில் உள்ளூர் பிரச்சினைகள், அதற்கு தீர்வு காண பாடுபடுபவர்கள் போன்ற அம்சங்கள் முக்கியத்துவம் பெறும் என்றும் அவர் கூறினார்.
தில்லியின் மூன்று மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் இந்து அடிப்படை வாதக் கட்சியான பாஜக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
வடக்கு தில்லி, கிழக்கு தில்லி மாநகராட்சிகளில் பாஜக பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. தெற்கு தில்லி மாநகராட்சியில் அக்கட்சி பெரும்பான்மை பலம் பெற 9 வேட்பாளர்கள் குறைவாக உள்ளனர்.
ஏப்ரல் 15-ம் தேதி நடைபெற்ற மூன்று தில்லி மாநகராட்சிகளுக்கான தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு 33 மையங்களில் எண்ணப்பட்டன.
வடக்கு தில்லி மாநகராட்சி: 104 வார்டுகளைக் கொண்ட வடக்கு தில்லி மாநகராட்சியில் பாஜக 59 இடங்களிலும், காங்கிரஸ் 29 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி 7 இடங்களிலும், ராஷ்டிரிய லோக் தளம் கட்சி, சுயேச்சைகள் தலா 4 இடத்திலும் லோக் ஜன சக்தி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.
பல் தேசிய நிறுவங்கள் கொள்ளையடிப்பதற்கான வெளியை உருவாக்குவதே இந்தக் கட்சிகளின் அடிப்படை நோக்கம். தேசிய அரசுகள் என்பது சாத்தியமற்ற நிலையே காணப்படுகிறது.

Exit mobile version