இந்திய மீனவர்கள் இலங்கையின் கடற்படையினரால் தாக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து மூன்று தரப்பும் பேச்சு நடத்தவேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், இந்தியாவுக்கு இன்று அதிகாலை புறப்பட்டு சென்ற ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை சென்னை வானூர்தி தளத்தை சென்றடைந்தார்.
இதன் போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க இந்திய அரசாங்கம், தமிழ்நாடு அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கம் என்பன இந்த விடயத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதன் போது குறித்த பிரச்சினைக்கு உரிய தீர்வை காணமுடியும் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.