Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சென்னையில் நிருபர்களைத் தாக்கிய மத்திய அமைச்சர் ராஜாவின் ஆதரவாளர்கள்.

இந்தியாவின் ஆகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டான ஸ்பெக்டராம் ஊழல் சர்ச்சையில் சிக்கியிருப்பவர் திமுகவின் மத்திய அமைச்சர் ராஜா. பாராளுமன்றத்தில் ராஜா மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்புவதால் கடும் அமளி ஏற்படுகிற நிலையில், ராஜா தலித் என்பதால்தான் இப்படி பிரச்சனை எழுப்புகிறார்கள் என்று ஸ்பெக்டரம் ஊழலுக்கு புதிய சாயம் பூசினார் இந்நிலையில் நேற்று தனது ஆதரவாளர்களுடன் சென்னை திரும்பிய மத்திய அமைச்சர் ராஜாவை காட்சி, அச்சு ஊடக நிருபர்கள் சூழ்ந்து கொண்டு ஸ்பெக்டராம் ஊழல் தொடர்பாக கேள்வி எழுப்பினர். நிருபர்களின் எந்த கேள்விகளையும் பொருட்படுத்தாத ராஜா அங்கிருந்து நகர அவரது பின்னாலேயே சென்று கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த நிருபர்கள் மீது ராஜா ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினார்கள். ஆங்கில தொலைக்காட்சி நிருபர்கள் மீது நடத்தப்பட்ட இந்த அநாகரிகச் செயல் அடுத்த சர்ச்சைக்கு அடித்தளம் போட்டுள்ளது.

Exit mobile version