Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சப்-இன்ஸ்பெக்டரை பலிவாங்கிய டெங்கு காய்ச்சல்

தஞ்சையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மரணம் அடைந்தார்.
தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் அண்ணா காலனி 3-வது தெருவை சேர்ந்தவர் கே.மோகன் (வயது 49) தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டு வந்தது.
இதனைத்தொடர்ந்து திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மோகன் இன்று அதிகாலை 2 மணி அளவில் பரிதாபமாக இறந்தார்.
மோகன் கடந்த 1986-ம் ஆண்டு போலீஸ் வேலைக்கு சேர்ந்தார். டெங்கு காய்ச்சலுக்கு பலியான மோகனுக்கு மாலா என்ற மனைவியும், ராஜேஷ் என்ற மகனும், துவாகர லெட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
டெங்கு நோயைப் பரப்பும் கொசுக்களை அழிக்கும் ஆபத்தற்ற பறவை பூச்சி இனங்கள் கியூபா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டு கொசுக்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.
அதிக செலவுகள் அற்ற இலகுவான இந்த முறைக்கு தடையாக அமைவது கொசு அழிப்பு சுருள்களையும் மருந்த்துகளையும் உற்பத்திசெய்யும் பெரு நிறுவனங்கள். இவர்களுக்கு ஆதரவான அரச அதிகாரங்கள் கொசுக்களை அழிப்பது குறித்த வழிமுறைகளை முன்வைப்பதில்லை.
இலங்கையில் கடந்தவருடம் கியூபாவில் இருந்து இறக்குமதியான டெங்குக் கொசுக்களை அழிக்கும் தீங்கற்ற கொசு வகைகளால் நோய் பரவும் தன்மை கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்தவருட முற்பகுதியில் காரணம் எதுவும் இன்றி இந்த இறக்குமதி நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் டெங்கு நோய் அதிவேகமாகப் பரவ ஆரம்பித்தது.
இந்த இறக்குமதி நிறுத்தப்பட்டதற்கும் டெங்குக் காய்ச்சல் அதிகரிப்பதற்கும் பின்னணியில் கொசுச் சுருள்களை உற்பத்திசெய்யும் இந்தியப் பெரு நிறுவனங்களே காரணம்.

Exit mobile version