Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கோத்தபாய ராஜபக்ஷவின் கையாளும், 116 பவுண் நகைக் கொள்ளையருமான விஜயகாந்த் யாழ். மாநகரசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டி!

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அப்போதைய பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்ஷவுடன் சேர்ந்தியங்கியவரும், வீடு புகுந்து 116 பவுண் நகையைக் கொள்ளையடித்தவருமான விஜயகாந்த் என்பவர் யாழ். மாநகரசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடுகின்றார்.

2013 யூலை மாதம் வங்கியில் 116 பவுண் நகை அடகு வைக்க விஜயகாந்த் சென்றபோது வங்கி ஊழியர் ஒருவரின் திருட்டு போன நகையும் அதில் இருந்தது. இதையடுத்து கோப்பாய் காவல்துறையினருக்கு விடயம் அறிவிக்கப்பட, விஜயகாந்த் உள்ளிட்ட நால்வர் கைதாகி, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, 116 பவுண் நகையை திருடியது, அடகு வைக்க முயன்றது உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு விசாரணைகள்  நடைபெற்று வருகின்றது.

இவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லையாயினும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் நாள் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சம்பவம் நடந்தபோது விஜயகாந்த் ஈ.பி.டி.பியில் இருந்தார். சம்பவத்தையடுத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விஜயகாந்த், மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்ததும், மைத்திரிக்கு குடைபிடித்த விஜயகாந்த் இறுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து மாநகர முதல்வராகப் போட்டியிடவுள்ளார்.

 

Exit mobile version