Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கே.பி குற்றமற்றவரெனில் பிரபாகரனின் இளைய மகனை கொலை செய்தமை பாரிய குற்றம் : மங்கள

இலங்கையை அழிப்பதற்கு ஆயுதங்களை வழங்கி மக்களை கொன்று குவித்த உலகமே தேடும் பயங்கரவாதியான கே.பி. குற்றமற்றவர் என அரசு தெரிவித்துள்ளமை சரியானால் பிரபாகரனின் 12 வயது மகனைக் கொலை செய்தமை பாரிய குற்றமாகும் என ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. மங்கள சமரவீர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றும்போதே மங்கள சமரவீர எம்.பி. தெரிவித்தார்.ஆசியாவின் பழைமையான ஜனநாயக நாடான இலங்கையில் இன்று அரசியல் மோகம் பிடித்தவர்களால் நீதியின் கிரீடம் பறிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது.

நீதிமன்றங்களால் பிடியாணை வழங்கப்படுவோர் பாதுகாப்பாக உள்ளனர். கே.பி. போன்ற சர்வதேச குற்றவாளி உயர்பதவிகளை வகிப்போருடன் சுதந்திரமாக நடமாடுகிறார். இன்ரபோல் பொலிஸாரால் பகிரங்க பிடியாணை விடுக்கப்பட்டவர் கே.பி. சி.ஐ.ஏ. இவரைப் பின்தொடர்ந்துது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Exit mobile version