Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிருசாந்திகளின் குருதி இன்னும் காயவில்லை : ச. நித்தியானந்தன்

Kool

ஆடிப்பிறப்பின் அதிகாலை
காரைநகரின் கடக்கரைக் கிராமங்களிலொன்றில்
வெள்ளரசுக்கிளையொன்றில்
தற்கொலை செய்து கொண்ட புத்தரின் பிணம்
அனாதரவாய்
ஆடிக்கொண்டிருந்தது

காலைப்பத்திரிகை
சட்டத்ததால் கட்டப்பட்ட
சதிகாரர்கள் பூமியில்
மேலுமோரு சிறுமி
ஆண்குறிகளால்
அடக்கம் செய்யப்பட்ட செய்தியை
தாங்கி வந்தது

சூரியன் சுட்டெரிக்கும் தார் வீதியில் விழுந்த
பச்சைப் புழுவாய் மனம் துடிக்கின்றது
மூடுண்ட இந்த நகரத்தின்
இரட்சகர்கள்
அந்தக் பதினொரு வயதுக் குழந்தையை
அதன் குழந்தைத் தனத்துடன் சேர்த்து
தின்று போட்டிருக்கிறார்கள்

அடக்குமுறைக்கான
துப்பாக்கிகள் மௌனிக்கின்ற பொழுதெல்லாம்
ஆண் குறிகள் ஆர்ப்பரிக்கின்றன.
அவை குழந்தை குஞ்சு குமரி
கிழம் என்று பார்ப்பதில்லை
பத்து துப்பாக்கியை விட
பாலியல் கருவி பலம் வாய்ந்தது
சுடுகுழலின் வலிமையைவிட
இழப்புகள் பல மடங்கு இதில்தான்
சித்தார்த்தரின் பிற்தோன்றல்களின் தாற்பரியமிது

ஓ…..
சிங்கள சகோதரிகளே உங்கள் கச்சைகளை
இறுகப் பூட்டிக் கொள்ளுங்கள்
உங்கள் யோனிகளுக்கு இனி
வேலையில்லாமல் போகப்போகின்றது.

Exit mobile version