காவிரியில் தண்ணீர் இல்லாததால் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரி விவாகரத்திலும் ,முல்லை அணை விவாகரத்திலும் ஆந்திர, கர்நாடக அரசுகள் நாடகம் ஆடி வருவதைப் போல கருணாநிதியும் தன் பங்கிற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்கிறார். இந்நிலையில் இன்னும் சில நாட்களில் மக்கள் விரோத ஜெயலலிதா திருச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை அறிவித்துள்ள நிலையில் இது காவிரி பிரச்சனையை கையில் எடுப்பதற்கான முன்னோட்டம் என்பதைப் புரிந்து கொண்ட கருணாநிதி உடனடியாக தன் நாடகக் குழுவைக் கூட்டியுள்ளார். புனித ஜார்ஜ் கோட்டையில் நட்ந்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடைசியில் வழக்கம் போல் கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதி கையெழுத்துப் போட்டு அஞ்சலில் அனுப்பி விட்டார். கடிதம் கிடைத்தவுடன் காவிரியில் தண்ணீர் வந்து விடும் என நாம் எதிர்பார்க்கலாம்.