Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காபுல் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு 11 பேர் பலி!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களையும் தங்கள் ஆதரவு ஆப்கானிஸ்தானியர்களையும் மீட்பதில் அமெரிக்கா உட்பட நாடுகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதில் ஆப்கானியர்களை வெளியேறுவதை விரும்பாத தலிபான்கள் பல முறை எச்சரிக்கையும் விடுத்திருந்தனர். இந்நிலையில் காபூலில் இன்று மாலையில் நடத்தப்பட்ட இரு தாக்குதல்களில் குறைந்தபட்சம் 11 பேர் பலியாகியிருக்கிறார்கள். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.\
காபூல் விமான நிலையத்தின் உட்பகுதி அமெரிக்க படைகளாலும், வெளிப்பகுதி தலிபான்களும் சுற்றி வளைக்கப்பட்டுள்ள நிலையில் தலிபான்கள் கட்டுப்பாட்டுப்பகுதியில் குண்டு வெடித்துள்ளது.இப்போதைக்கு விமான நிலையத்தையொட்டிய பகுதிகளை விட்டு விலகியிருக்குமாறு அமெரிக்கா அம்மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்கர்கள் உட்பட ஆப்கானியர்கள் இறந்துள்ளாதாக தெரிகிறது.

Exit mobile version