Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கஷ்மீரில் இந்திய அரசின் சித்திரவதைகள் : சனல் 4 காணொளி இணைப்பு

கஷ்மீரில் சுய நிர்ணய உரிமை கோரிப் போராடும் மக்களுக்கு எதிராக இந்திய அரசின் சித்திரவதைகளையும், மனிதப் படுகொலைகளையும், பயங்கரவாதச் செயற்பாடுகளையும் 11.06.2012 அன்று பிரித்தானியத் தொலைக் காட்சியான சனல் 4 இல் வெளியிடப்பட்ட ஆவணப்படம் சித்தரிக்கிறது. ஈழத்தை ஆக்கிரமிக்கும் இராணுவத்தின் தொகைக்கும் அதிகமாக கடந்த இரண்டு தசாப்தங்களாக கஷ்மீரில் அரச படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு புறத்தில் பாகிஸ்தானும் மறு புறத்தில் இந்தியாவும் ஆக்கிரமிக்க முயலும் கஷ்மீரின் விடுதலைக்காக அந்த தேசத்தின் மக்கள் விட்டுக்கொடுக்காத போராட்டம் நடத்துகின்றனர். சனல் 4 இன் ஆவணப்படம் பல தகவல்களைத் தொகுத்திருக்கிறது. சனல் 4 இன் அரசியல் நோக்கம் எதுவாயினும், ஐரோப்பாவில் இந்திய ஜனநாயகத்தை தோலுரித்துக் காட்டுவதில் இந்தக் காணொளி வெற்றிகண்டுள்ளது.

Exit mobile version