Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கல்லால் அடித்துப் பெண்ணைக் கொலை செய்த அடிப்படைவாதம்

பாகிஸ்தானில் பெண் ஒருவரை தாலிபான்கள் கல்லால் அடித்துக் கொன்று தண்டனை அளித்துள்ளனர்.

வேறு ஒரு ஆணுடன் அந்த பெண் தனியாக நின்றதை பார்த்ததைத் தொடர்ந்தே தாலிபான்கள் இந்த தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ பதிவை, துபாயிலிருந்து ஒளிபரப்பாகும் அல் ஆன் என்ற தொலைக்காட்சி சேனலுக்கு தாலிபான் உறுப்பினர் ஒருவர் ரகசியமாக அனுப்பி வைத்துள்ளார்.

அந்த வீடியோ காட்சியில், கல்லால் அடிக்கப்படும் அந்த பெண்ணின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டு தரையில் விழுந்து கிடக்கிறார்.தன்னைக் காப்பாற்றுமாறு அவர் கதறி குரல் கொடுத்தும், தொடர்ந்து அவர் மீது கல் மழைதான் பொழிந்துள்ளது.

இறுதியில் ரத்தம் சொட்ட சொட்ட அந்த பெண் மயக்கமடைந்து பின்னர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்த செய்தியை இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் “த டெய்லி மெயில்” என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ஒரு புறத்தில் அமரிக்கா தலைமையிலான மேற்கு அணியும், இந்திய அதிகாரவர்க்கமும்  அப்பாவி இஸ்லாமியர்களுக்கு  எதிரான உளவியல் யுத்ததை நடத்திவரும் அதே வேளை மறு புறத்தில் இஸ்லாமிய  அடிப்படைவாதம் அதன் மக்கள் விரோதிகளை  வலுப்பெறச் செய்கிறது.

Exit mobile version