Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கருணாநிதி கைவிட்டார் : தா.பாண்டியன் தமிழீழ தீர்மானத்தைக் கொண்டுவருவார்?

டெசோ மாநாட்டில் இலங்கையில் தனி ஈழம் கிடைக்க கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்து போர்க் கொடி உயர்த்தினால் நாங்களும் அவருடன் போராட தயாராக இருக்கிறோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
அப்பாவி மக்களின் வாக்குக்களைப் பொறுக்கி பதவியைக் கைப்பற்ற நினைக்கும் இந்தக் கட்சிகள் ஈழப் பிரச்சனையை தமது சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றன.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மானிலச் செயலாளருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் அறியத்தக்கதாக கருணாநிதி தமிழீழத்திற்கான தீர்மானத்தைக் கொண்டுவர முடியாது என அறிவித்துள்ளார். இப்போது த.பாண்டியன் ஏன் தமிழீழத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றக்கூடாது.

Related: இந்திய மேலாதிக்கம் குறித்துப்பேச ஈழத் தமிழர்களுக்கு உரிமையில்லை – து.ராஜா
Exit mobile version