Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஏமாற்றப்பட்ட செங்கல்பட்டு முகாம் அகதிகள்

கடந்த மாதம் செங்கல்பட்டு முகாம் தமிழர்கள் சுமார் 15 பேர்கள் தங்களை விடுதலைசெய்ய வேண்டும் என சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு அதிகாரிகள் அவர்களை யூன் மாதம் 5 ம் தேதிக்குள் விடுதலை செய்வோம் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால் வழக்கம் போல் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
சென்ற மாதம் செங்கல்பட்டு முகாம் தமிழர்கள் சுமார் 15 பேர்கள் தங்களை விடுதலைசெய்ய வேண்டும் என சாகும் வரை உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போராட்டத்தை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. அவர்களின் உடல் நிலை ஒருவர் பின் ஒருவராக மோசமடைந்தது.
முகாம் தமிழர்களை இந்த மாதம் 5 ஆம்தேதிக்குள் விடுதலை செய்வோம் என்று வாக்குறுதி அளித்தனர். அந்த வாக்குறுதியின் அடிப்படையில் முகாம் தமிழர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
ஆனால் தமிழக அரசு வழக்கம் போல் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை. முகாம் தமிழர்களும் எவ்வளவோ நம்பிக்கையுடன் இருந்தனர். தாங்கள் விடுதலை ஆவோம் என்று நம்பி இருந்தனர். அந்த நம்பிக்கையில் மண்ணை அள்ளி போட்டது தமிழக அரசு.
இப்போது விடுதலை செய்ய மாட்டோம் என்று கூறுகிறார்கள்.
தமிழின வாதம் பேசும் ஜெயலலிதா பாசிச அரசும் அதற்கு வக்காலத்து வாங்கும் சீமான், வைகோ,நெடுமாறன் போன்ற சந்தர்ப்ப வாதிகளும் இது குறித்து மூச்சுக்கூட விடவில்லை. தமிழீழம் பெற்றுத் தருவோம் என மூலைக்கு மூலை மேடை போட்டு முழங்குகிறார்கள். புலம் பெயர் தமிழர்களைத் திருப்திப்படுத்தவும் வாக்குப் பொறுக்கவும் இவர்கள் நடத்தும் நாடகத்தைநம்பி ஈழத் தமிழ் அகதிகள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

Exit mobile version