Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உமா வரதராஜன் மறுப்பு – சுமதி சிவமோகன் பதில்

உமா வரதராஜன் தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்’ என்ற அறிக்கையில் தனது பேர் சேர்க்கப்பட்டதுக்கு எழுதிய மறுப்புக்கு எனது பதில்

– சுமதி சிவமோகன்

தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள் என்ற 71 பேரால் கையொப்பமிடப்பட்ட அறிக்கை இலங்கையில் உள்ள மக்களிடையே, குறிப்பாக முஸ்லிம்கள், தமிழ் மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

போரிற்குப் பின்பான காலகட்டத்திலே தமிழ் முஸ்லிம் உறவுகள் எப்படியிருக்க வேண்டுமென்ற நோக்கிலே எழுந்த இம் முயற்சியில் தம்மையும் சேர்த்துக் கொள்ளுமாறு 71 பேரைவிட கூடுதலான பேர் கேட்டுக்கொண்டனர். நாம் அனுப்பிய மடலை காலம் தாமதித்து பார்த்ததில் கையொப்பம் வழங்கமுடியாமல் போனதைக் குறித்து வருந்தியவர்களில் கலாநிதி செல்வி திருச்சந்திரன், வண. சாம் பொன்னையா, கலாநிதி வாசுகி நேசையா ஆகியோர் அடங்குவர்.

இதில் கையொப்பம் அளித்தவரில் ஒருவர் (அறிக்கை வெளியான பின்) அறிக்கையை உருவாக்கிய எங்களில் சிலரிடம் ‘கையொப்பம் அளிக்க பலர் காத்திருக்கின்றனர். நீங்கள் இதற்கு ஒரு வெப்சைய்ட் ஊடாக கையொப்பங்களை சேகரிக்கலாம்.’ என்று கூறினார். ஆனால் அறிக்கை வெளியாகி விட்ட படியால் எமக்கு கையொப்பங்களைச் சேகரிப்பதை விட அறிக்கையில் குறிக்கப்பட்ட விடயம் பற்றிய கலந்துரையாடலே முக்கியமானதாக இருக்கிறது.

இந்தப் பின்னணியை வைத்துக்கொண்டு தான் உமா வரதராஜன் தான் இந்த அறிக்கைக்கு கையொப்பம் அளிக்கவில்லை என்று எமது நேர்மையை கேள்வுp கேட்ட விடயத்தை ஆராய வேண்டும். நாம் கையொப்பங்களை சேகரிக்கும் போது பரந்துபட்ட தமிழ் மக்கள் சமூகங்களிடையே கையொப்பங்களைப் பெற எத்தனித்தோம். பல் தரப்பட்டவர்களுடன் எமக்கு தொடர்புகளை ஏற்படுத்துமாறு எமக்குத் தெரிந்தவர்களைக் கேட்டோம். அப்படிக் கேட்டவர்களில் ஒருவர்தான் ஆத்மா. அவர் எனக்கு ஏறத்தாழ 15 பேரின் ஈமெயில் விலாசங்களை சேகரித்துத் தந்தார். அவர்களெல்லர்ருக்கும் நான் அறிக்கையை ஈமெயில் மூலமாக அனுப்பி வைத்தேன். அப்படி அனுப்பிவைத்ததில் ஒருவர்தான் உமா வரதராஜன். அவருக்கு நான் 2011 டிசம்பர் 29ம் திகதி இதனை அனுப்பி வைத்தேன். வடக்கு கிழக்கில் ஈமெயில் தொடர்பு சுமுகமாக இல்லாதபடீயாலும், வேறு சிலர் பல நாட்களுக்கு பின்னர் ‘நான் இப்பத்தான் உங்கட ஈமெயில்ஐ பார்த்தேன்’ என்று சொன்னதாலும், நான் ஈமெயில் அனுப்பியபின்னர் ஆத்மாவி;டம் ஈமெயில் கிடைத்ததா என்று அனுப்பிவைக்கப்பட்டவர்களிடம் வினவக் கூறினேன். அவ்வாறு நான் கேட்டுக்கொண்ட வாறே அவர் சிலரிடம் ஈமெயில் கிடைத்ததா என்று வினவினார். ஒரு சிலநாளில் அவர் ‘உமா வரதராஜனுக்கு அவர் வெளிநாட்டுக்கு போகவெளிக்கிடுகின்ற படியால் அவருக்கு உங்களுக்கு பதில் அளிக்க முடியாமல் இருக்கின்றதாம். அவர் தாம் இதற்கு கையொப்பம் அளிப்பதாக சொல்லியிருக்கின்றார். அவரின் பெயரை சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டீருக்கிறார்’; என்று என்னிடம் கூறினார். இப்படி தொலைபேசியில் பெயரைச் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட இரண்டு பேரில் உமா வரதராஜன் ஒருவர்.

எனக்கு உமா வரதராஜனை நேரில் தெரியாது. ஆனால் அவரது கதைகளை வாசித்துள்ளேன். பேராதனை பல்கலைக்கழகத்திலே ஆங்கில திணைக்கள பாடத்தி;ட்டத்தில் உள்ள சிங்கள-தமி;ழ் இலக்கிய பாடத்தில், அவரின் கதை எலியத்தை நான் விரும்பி கற்பிப்பது உண்டு;. அவர் நுஃமானின் நண்பர் என்றும் எனக்குத் தெரியும். இக் காரணங்களுக்காக எனக்கு அவரில் ஒரு விதமான அபிமானம் உண்டு. வரதராஜனின் கோழைத்தனமான குற்றச்சாட்டு என்னை வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றது. 71 பேரில் உமா வரதராஜனின் பேரை ஓரு காரணமுமன்றி இணைத்துக்; கொள்ள எமக்கு என்ன தேவையிருக்கிறது?

ஒருவிதமான காரணமும் இல்லாமல் தனக்கு இந்த அறிக்கையைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று சொல்கிற வரதராஜன் ஏன் இதனைப் பகிரங்கமாகத் தெரிவிக்காமல், ஃபேஸ்புக் போன்ற ப்ரைவட் வலையத்தில் இக் குற்றச்சாட்டை வெளியிட்டிருக்கிறார்? அவருக்கு எனது ஈமெயில் விலாசம் தெரியும். ஏதோ தவறு நேர்ந்து விட்டது என்று அவர் கருதியுpருந்தால் என்னை அல்லது அவரது நெருங்கிய நண்பன் ஆத்மாவைத் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அதுவே நேர்மையானதும் நாகரீகமானதுமாயிருந்திருக்கும். அப்படி அணுகாமல், உதிரித்தனமான மாதிரி நடந்து கொண்டிருக்கிறார். அப்படியிருக்க நாங்கள் அணுகமுடியாத ஃபேஸ்புக்ல் இக்குற்றச்சாட்டை போட்டிருக்கிறார்? இது மிக சந்தேகத்துக்குரியதாகவே எனக்குப் படுகிறது

தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் வேலை செய்கிற எமக்கு இலங்கையில் நிறைய வேலைகள் இருக்கின்றன. தனிநபர்களின் கோழைத்தனங்களுக்கும் ஈகோ வார்ப்புகளுக்கும் மறுமொழி சொல்லிக் கொண்டிருக்க வேண்டியுள்ளதை யோசித்து கவலை கொள்கிறேன். இப்படிப்பட்டவர்கள் தான் தமிழ் எழுத்தாளர்கள் என்று யோசிக்க வருத்தமாக இருக்கிறது.

Exit mobile version