
இந்த நிலையில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தூதரகத்துக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அனைத்து தூதரக அலுவலகங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி தெரிவித்துள்ளார்.
இதேபோல் தூதரகங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதே போன்ற குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று ஜோர்ஜியாவிலும் நடைபெற்றுள்ளது. ஈரான் மீது அமரிக்க ஆதரவுடன் போர் தொடுக்க முற்படும் இஸ்ரேல் இஸ்லாமியப் பயங்கரவாதப் பூச்சாண்டி காட்டும் நோக்கில் தீவிரமாகச் செயற்பட ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.