Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை அரச பாசிசம் : பிரதமரின் வாக்குமூலம்!

விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஒரு சிலர் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
விடுதலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெரும்பாலான போராளிகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகின்றனர். சமூகத்திலிருந்து அவர்கள் திட்டமிட்டுத் தனிமைப்படுதப் படுகின்றனர். இதனால் பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுவரை 6000 போராளிகள் விடுதலை செய்யப்பட்டதாக இலங்கை அரசு கூறி வருகின்ற போதும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. புலிகளின் பிரதான உறுப்பினர்கள் சித்திரவதைகளின் பின்னர் கொல்லப்பட்டிருக்கலாம் என மனித உரிமையாளர்கள் கருதுகின்றனர்.

இலங்கைப் பிரதமர் பாராளுமன்றத்தில் வழங்கிய இந்த வாக்குமூலம் இலங்கை அரச பாசிசத்தின் கோரமுகத்தை வெளிக்காட்டுகின்றது.

Exit mobile version