இலங்கை அரசை பாதுகாப்பதற்கான உளவுப்பிரிவினரே இந்திய நாடாளுமன்றக் குழு என நவ சம சமாஜக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததனால், ஆத்திரமடைந்துள்ள இலங்கை அரசை ஆசுவாசப்படுத்தவே நாடாளுமன்ற குழு இலங்கை வந்துள்ளதாகவும், இதன் மூலம் மன்மோகன் சிங்கை மகிழ்ச்சிப்படுத்தி ராஜபக்சேவை ஆசுவாசப்படுத்தி வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கடல்வளம், கனிய வளம் மற்றும் நிலங்களை கொள்ளையடிப்பதே இக் குழுவின் திட்டம் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தை பகைத்துக் கொள்வதாலும், அதன் புனிதத்தன்மையை இல்லாது ஒழிப்பதாலும் இந்தியாவிற்கு பெரிய இழப்பு ஏற்படும் என்பதால், இலங்கை அரசை பாதுகாப்பதற்கான உளவுப் பிரிவினர் என்ற ரீதியிலேயே இந்திய குழுவின் பயணத்தின் நோக்கம் என்று கலாநிதி கூறியுள்ளார்.