Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மாநில சுயாட்சியாம்- ஜி.ராமகிருஷ்ணன் நகைச்சுவை.

சி.பிஎம். கட்சியினர் ஈழ மக்களுக்கு மட்டுமல்ல போராடும் அனைத்து ஜனநாயக சக்திகளுக்குமே எதிரானவர்கள். டில்லியில் இருந்து கொண்டு சிலர் எடுக்கும் முடிவுகளை செயல்படுத்துவதுதான் தமிழக மார்க்ஸ்சிஸ்டுகளின் வேலை. இடது சாரிகள் அங்கீகரிக்கும் சுயநிர்ணய உரிமை குறித்து கூட பேச மறுக்கிறவர்கள்.என்கிற நிலையில் மார்க்ஸ்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இலங்கைத் தமிழர்களுக்கு மாநில சுயாட்சி வழங்க வேண்டும் என்று சீரியசாகப் பேசியிருக்கிறார் சென்னையில்

செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழர்களை மறுகுடியமர்த்த இலங்கை அரசை, இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டும். தமிழர்களுக்கு மாநில சுயாட்சி வழங்க வலியுறுத்தி, மத்திய அரசின் சார்பில் அனைத்துக் கட்சியைச் சேர்நத் நாடாளுமன்றக் குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டும். என்றார் ராமகிருஷ்ணன்.

Exit mobile version