Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் உச்சமடையும் ஊடக அடக்குமுறை

இலங்கையிலுள்ள ஊடகவியலாளர்களும் தமது சொத்து விபரங்களையும் ஏப்ரல் 31ம் திகதிக்கு முன்னர் அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளார்.

 ஊடகவியலாளர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என இந்த ஆசிரியர் சில காலமாக கூறிவருகிறார். சட்டப்படிஇலங்கையிலுள்ள சகல ஊடகவியலாளர்களும் தமது சொத்து விபரங்களையும் அரசாங்கத்திற்கு அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்காமல் விடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஊடகத்துறை அமைச்சை ஜனாதிபதி பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்கள் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட முதல் உத்தரவாக இந்த சுற்றுநிருபம் அமைந்துள்ளது.

மேலும், இந்த உத்தவின் மூலம் ஊடகங்கள், ஊடகவியலாளர்களைக் கட்டுப்படுத்துவது இலகுவானது எனவும் இந்தச் சுற்றுநிருபத்திற்கு எந்த ஆசிரியரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது எனவும் குறித்த மாற்றுப் பத்திரிகையின் ஆசிரியர் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பொதுத் தேர்தலின் பின்னர் ஊடகங்கள் தொடர்பான ஆலோசகர் பதவியை குறித்த ஆசிரியர் எதிர்பார்த்துள்ளதாக தெரியவருகிறது.

மியன்மாரைச் சேர்ந்த இராணுவ ஆட்சியாளர்களும் இவ்வாறான சட்டத்தை அமுல்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version