
திருத்தச் சட்டத்தில் இலங்கையின் ஜனாதிபதி விரும்பினால் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் அதிகாரம் அவருக்கு உண்டு. சட்டத்தில் முதலாவது மேற்கொள்ளப்பட்ட புதிய திருத்தத்தின் அடிப்படையில் அந்த அதிகாரத்தை நீக்குவதாக அமைச்சரவை முடிவு செய்த்துள்ளது. மகிந்த ராஜபக்சவின் முழுமையான கட்டுப்பாட்டிலுள்ள அமைச்சரவை இந்த கேலியான தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது.
இனப்படுகொலை செய்வதற்கும் இனச்சுத்திகரிப்பை நடத்துவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரம் குறித்து மூச்சுக்கூடவிடாத இலங்கை அமைச்சவை பேரினவாத அமைச்சரவை என சட்டரீதியாக நிறுவுயுள்ளது. மாகாண சபைகளை இணைப்பது மட்டுமல்ல தனியான அரசை உருவாக்கும் அடிப்படை உரிமை குறித்துக்கூட மக்களே தீர்மானிக்கவேண்டும், பேரினவாத ஜனாதிபதியோ தனி நபர்களோ அல்ல.