
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் யுத்தம் தொடர்ந்திருந்தால் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்லாயிரம் இளைஞர்களின் உயிர்கள் பறிக்கப்ட்டிருக்கும். அதேபோல் பல கோடான கோடி சொத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கும். அதை தடுத்து நிறுத்தி ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என கிழக்கு மாகாண முதலமைச்சர் (பிள்ளையான) சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
பல ஆயிரக் கணக்கில் மனித உயிர்களைக் கொன்றொழித்த மகிந்த ராஜபக்சவின் துணைப்படையாக மாற்றமடைந்த புலி உறுப்பினர்களுள் பிள்ளையானும் ஒருவர்.
மட்டக்களப்பு ஆரையம்பதி நிகழ்வில் முதலமைச்சர் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டார்.
அங்கு உரையற்றிய போதே பிள்ளையான் இக் கருத்தைத் தெரிவித்தார்.